India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆஸி. கிரிக்கெட் வீரர் வில் பியூகோவ்ஸ்கி(27) ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவரது தலையில் பந்து பலமுறை தாக்கியுள்ளது. இதனால் இனி அவரால் கிரிக்கெட் விளையாட முடியாது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுதான் அவரது சோக முடிவுக்கு காரணம். சர்வதேச போட்டியில் அறிமுகமான முதல் டெஸ்ட்டில் அவர் அரைசதம் அடித்திருந்தார்.
தமிழகத்தில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ₹2500 வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அவர், இந்த புதிய உத்தரவு வரும் செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் எனக் கூறினார். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல், இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சமையல் கேஸ் சிலிண்டருக்கு மானியம் வழங்குவது எப்போது என<<16027705>> பாஜக<<>>வைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய்யும் கேள்வி எழுப்பியுள்ளார். ₹100 மானியம் கொடுப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக, 4 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை என குற்றஞ்சாட்டிய அவர், தேர்தல் வெற்றிக்காக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்துவிட்டு பின்னர் மக்களை ஏமாற்றுவதை திமுக அரசு எப்போது நிறுத்தும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
எஸ்.ஆர்.எம். பல்கலை., நிகழ்ச்சியில் அண்ணாமலை – சீமான் ஒன்றாக கலந்துக் கொண்டது அரசியல் ரீதியாக பேசுபொருளானது. இந்நிலையில், அண்ணாமலை எனக்கு நல்ல நண்பர். நான் டிரம்ப், புதினோடு தான் நெருக்கமாக இருக்கிறேன் என்று சிரித்துக் கொண்டே பதிலடி கொடுத்தார். மேலும், அண்ணாமலை இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பார்க்கிறார். நான் தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவை பார்க்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
<<16028754>>தங்கம் விலை<<>> சரிந்த போதிலும் விற்பனையும் அதிகரிக்கவில்லை என வியாபாரிகள் கூறியுள்ளனர். மேலும், விலை குறையும் என்ற எதிர்பார்ப்பே விற்பனை சரிவுக்கு காரணம் எனவும் விளக்கம் அளித்துள்ளனர். இதனிடையே, டிரம்பின் வரி விதிப்பினால், 2021-ல் இருந்த அதே விலையை தற்போது கச்சா எண்ணெய் தொட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 20% குறைவாகும். கச்சா எண்ணெய் விலை குறையும் போது தங்கம் விலை குறையும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அடுத்த 3 நாள்களுக்கு மாநிலம் முழுவதும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (MET) தெரிவித்துள்ளது. மேலும், தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்ததாகவும், இது புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் கணித்துள்ளது. அதேநேரம் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கவர்னருக்கு பதில் முதல்வரை பல்கலை., வேந்தராக்குவதற்கான மசோதா, கால்நடை பல்கலை திருத்த மசோதா, மீன்வள பல்கலை திருத்த மசோதா, அம்பேத்கர் சட்டப் பல்கலை, TN MGR மருத்துவ பல்கலைக்கு முதல்வரை வேந்தராக்கும் மசோதா, வேளாண் பல்கலை, தமிழ் பல்கலை சட்டத் திருத்த மசோதா, TN பல்கலைகள் 2ம் திருத்த மசோதா, கால்நடை 2ம் திருத்த மசோதா, மீன்வள பல்கலை 2வது திருத்த மசோதா ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
வரலாற்றில் முதல்முறையாக மசோதாக்கள் மீது முடிவெடுக்க TN கவர்னருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து அளித்த தீர்ப்பு, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என CM ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மேலும், கவர்னர் நிறுத்தி வைத்த 10 மசோதக்களுக்கும் உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், அவர் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.
பிரபல நடனக் கலைஞர் ராம் சஹாய் பாண்டே(92) உடல் நலக்குறைவால் காலமானார். மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த இவர் 18 நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புற நடன நிகழ்ச்சிகளை நடத்தி இந்தியாவின் பெருமையை உலகறிய செய்தவர். இவரது கலைச் சேவையைப் பாராட்டிக் கடந்த 2022-ல் மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. ராம் சஹாய் மறைவுக்கு மத்தியப் பிரதேச CM உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சிமெண்ட் விலை இம்மாதம் உயர வாய்ப்புள்ளதாக நுவாமா வெல்த் (Nuvama Wealth) நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு தொடக்கத்தில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சிமெண்ட் விலை சற்று உயர்ந்த நிலையில், கிழக்கு மாநிலங்களில் கடந்த மாதம் மூட்டைக்கு ₹5 – ₹7 வரை குறைந்தது. இந்நிலையில், செலவின அதிகரிப்பு காரணமாக மீண்டும் இம்மாதத்தில் சிமெண்ட் விலை மூட்டைக்கு ₹20 வரை உயர வாய்ப்புள்ளதாக நுவாமா கணித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.