India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவின் 79-வது சுதந்திரதினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு PM மோடி உரையாற்றயுள்ளார். இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விழாவில் பிரதமர் மோடி கொடியேற்றும் போது 2 ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5,000 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக விழாவில் பங்கேற்கவுள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி கல்விச்சூழல் தொடர்ந்து சரிவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், உண்மையிலேயே தங்களுக்கு தமிழக அரசுப்பள்ளிகளின் மீது அக்கறை இருந்தால் டெல்லியை நோக்கி ‘தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய கல்வி நிதி என்னவானது?’ என கேளுங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற நாள் சுதந்திர தினமாகும். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட தினம் குடியரசு தினமாகும். சுதந்திர தினத்தில் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுவார். கம்பத்தின் கீழிருந்து கொடி ஏற்றப்படும். குடியரசு தினத்தில் ராஜ்பாத்தில் கொடி மூடப்பட்டு கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும், ஜனாதிபதி கொடியை அவிழ்த்து விடுவார்.
தமிழகம் வந்த பாஜகவை சேர்ந்த பி.எல்.சந்தோஷ் OPS-யை சந்திக்கவில்லை. இது ஏன் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகிவுள்ளன. அதில், OPS-யை சந்திக்க அண்ணாமலை நேரம் கேட்டதாகவும், ஆனால் இந்த சந்திப்பால் இபிஎஸ் அதிருப்தி ஆகிவிடக்கூடாது, மேலும் அண்ணாமலையின் முயற்சி கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவது போல் தெரிவதால் சந்திப்பை தவிர்க்குமாறும் பாஜக மூத்த நிர்வாகிகள் சந்தோஷிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
லெஜண்ட்ஸ் லீக் போன்று ஆசிய கோப்பையிலும் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என முன்னாள் பாக்., வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார். ஒருவேளை இந்தியா விளையாடினால் பாக்., மோசமாக தோற்கும் என்றும், AFG-யிடம் தோற்றால் கூட ரசிகர்கள் கவலைப்பட மாட்டார்கள், ஆனால் இந்தியாவிடம் தோற்றால் பைத்தியம் பிடித்தது போல ரியாக்ட் பண்ணுவார்கள் என கூறினார். சமீப காலமாக பாக் அணி மோசமான பார்மில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
* 1947 – இந்தியா சுதந்திரமடைந்த நாள். இன்று 78-வது சுதந்திர தினம்.
* 1872 – இந்தியத் தேசியவாதியும், ஆன்மிகத் தலைவருமான அரவிந்தர் பிறந்த தினம்.
* 1914 – பனாமா கால்வாய் திறக்கப்பட்டது.
* 1948 – கொரியக் குடியரசு உருவானது.
* 1964 – நடிகர் அர்ஜுன் பிறந்தநாள்.
தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகளை வரவேற்பதாகவும், அதே சமயம் தூய்மைப் பணிகளை தனியார் மையம் ஆக்கப்படுவதை அரசு கைவிட வேண்டுமென திருமாவளவன் தெரிவித்துள்ளார். கைது நடவடிக்கையின் போது தூய்மை பணியாளர்கள் தாக்கப்பட்டதாக வரும் தகவல் கவலைப்பளிப்பதாக தெரிவித்தார். மேலும், போராட்டத்திற்கு ஆதரவளித்தவர்களுக்கு எதிராக பதிவான வழக்குகள் வாபஸ் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
*வெற்றி தோல்வி முக்கியமில்லை, துணிந்து சண்டையிடுவதுதான் முக்கியம்.
* கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்.
* உண்மையான நண்பனாக இரு, அல்லது உண்மையான பகைவனாக இரு, துரோகியாகவோ அல்லது பாதி நம்பிக்கைக்கு உரியவனாகவோ இருக்காதே.
* வன்முறை என்பது மோசமானது தான். ஆனால், அடிமைத்தனம் வன்முறையை காட்டிலும் மோசமானது.
கேரளாவை சேர்ந்தவர் நடிகை மினு முனிர். இவர் தமிழிலும் சொற்பமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு 14 வயது சிறுமியை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சென்னைக்கு அழைத்து வந்து விடுதியில் 4 பேரை அறிமுகம் செய்துள்ளார். அவர்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்கு உடந்தையாகவும் இவர் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுமி அளித்த புகாரில் தற்போது அவர் போக்சோவில் கைதாகியுள்ளார்.
IPL 18-வது சீசனில் LSG அணியின் ஆலோசகராக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான் நியமிக்கப்பட்டார். இருப்பினும் அந்த அணியால் பிளே ஆப்-க்கு தகுதி பெறவில்லை. இதனால் ஜாகீர்கான் அப்பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளராக பரத் அருண் ஒப்பந்தமான நிலையில், புதிய ஆலோசகரை தேர்வு செய்யும் பணியில் லக்னோ அணி நிர்வாகம் இறங்கியுள்ளது.
Sorry, no posts matched your criteria.