India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெண்களே, தொழில் தொடங்கும் ஆசை இருக்கிறதா? உங்களுக்காகவே ₹5 லட்சம் வரை வட்டியில்லாமல் கடன் வழங்குகிறது மத்திய அரசின் Lakhpati didi திட்டம். சுய உதவிக் குழுவில் இருப்பவர்கள், ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்கும் குறைவாக இருப்பவர்கள் இந்த திட்டத்தில் கடன் பெறலாம். இதற்கு, அருகில் இருக்கும் SHG அலுவலகத்தையோ அல்லது பஞ்சாயத்து ஆபீசையோ அணுகுங்கள். அனைத்து பெண்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

வீட்டில் ஒருவருக்காவது அரசு வேலை கிடைக்காதா என ஏங்குபவர்களுக்கு மத்தியில், இந்த தம்பதிக்கு டபுள் ட்ரீட் கிடைத்துள்ளது. ஆந்திராவை சேர்ந்த ஹேமச்சந்திரா- வினிதா தம்பதி ஹைதராபாத்திலுள்ள IT கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். ஆனாலும், அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு, குரூப் 2 தேர்வு முடிவு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. வினிதா சப்-ரிஜிஸ்டாராக, ஹேமச்சந்திரா கலால் வரி ஆய்வாளராக தேர்வாகியுள்ளனர்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்து, ₹91.79 என்ற மிகவும் குறைந்தபட்ச நிலையை அடைந்துள்ளது. இந்தச் சரிவு, இந்திய பொருளாதாரம் & சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது. எனவே, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த, RBI முக்கிய முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் பவார் பயணித்த விமானத்தை இயக்கிய பைலட்கள் சுமித் கபூர் & சாம்பவி ஆகியோரும் உயிரிழந்துள்ளனர். விமானம் கீழே விழுந்து நொறுங்குவதற்கு சில விநாடிகள் முன்னர், 2 பைலட்களும் ‘Oh sh**’ என அலறியது Black box-ல் பதிவாகி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மோசமான வானிலை இந்த விமான விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அஜித் பவாரின் இறுதி அஞ்சலி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியலின மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாதிய பாகுபாட்டை ஒழிப்பதற்காக UGC விதிகளில் திருத்தம் கொண்டு வந்ததை குறிப்பிட்ட அவர், தாமதமான முடிவு என்றாலும் வரவேற்கத்தக்கது என்றார். மேலும், உயர்கல்வி நிறுவனங்களை RSS ஆதரவாளர்கள் வழிநடத்தினால் சமத்துவக் குழுக்கள் சுதந்திரமாக செயல்படுமா எனவும் கேட்டுள்ளார்.

ஒவ்வொரு நாளும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (ஜன.29) 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹1,190 உயர்ந்து ₹16,800-க்கும், சவரனுக்கு ₹9,520 அதிகரித்து ₹1,34,400-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால் வரும் நாள்களிலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒவ்வொரு நாளும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (ஜன.29) 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹1,190 உயர்ந்து ₹16,800-க்கும், சவரனுக்கு ₹9,520 அதிகரித்து ₹1,34,400-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால் வரும் நாள்களிலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அணு ஆயுத ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை என்றால் ஈரானுக்கு போர் கப்பல்களை அனுப்பி தாக்குதல் நடத்துவேன் என எச்சரித்திருந்தார் <<18877158>>டிரம்ப்<<>>. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, USA எந்த விதமான தாக்குதலை நடத்தினாலும், அதற்கு உடனடியாக பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறோம் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் கூறியுள்ளார். இதனால், இருநாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

2026 தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என்று சரத்குமார் அறிவித்துள்ளார். தான் போட்டியிடாதபோது தனது மனைவி ராதிகாவும் போட்டியிடமாட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், தன்னுடன் பயணிக்கும் கடின உழைப்பாளிகளுக்கு 5 இடங்களையாவது பெற்றுத் தருவேன் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, 2024 மக்களவை தேர்தலில் ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டிருந்தார்.

தேமுதிகவின் கூட்டணி கணக்கு ஒருவழியாக சால்வ் ஆனதாக தகவல் கசிந்துள்ளது. முன்னதாக, தேமுதிக கேட்டதாக சொல்லப்படும் 17 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட்டை அதிமுக கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் திமுக பக்கம் ரகசிய பேச்சுவார்த்தையை அக்கட்சி தொடங்க, 6 தொகுதிகள் + 1 ராஜ்யசபா சீட் என்ற முடிவுடன் கூட்டணி உறுதியாகி இருக்கிறதாம். இதுபற்றி பிரேமலதா விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.