India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பளிக்கிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல், கிடப்பில் போட்டதாக அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளிக்க உள்ளது.
கடந்த சில நாள்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு நேற்று ₹200, இன்று ₹480 என கடந்த 5 நாள்களில் மட்டும் ₹2,680 குறைந்துள்ளது. அதேபோல், வெள்ளியின் விலை 5 நாள்களில் கிராமுக்கு ₹10, கிலோவுக்கு ₹10,000 குறைந்துள்ளது. வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் குறையும் என்பதால், நகை பிரியர்கள், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சூரிய நமஸ்காரத்தில் புதிய சாதனையை படைத்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. அல்லூரி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி மைதானத்தில், ஒரே நேரத்தில் 21,850 பழங்குடியின மாணவர்கள் ஒன்றாகக் கூடியுள்ளனர். அவர்கள் 108 நிமிடங்களில் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்து சாதனை படைத்துள்ளனர். சூரிய பகவானுக்கான முழக்கங்களால் மைதானமே அதிர்ந்தது. சாதனைக்கான சான்றிதழ் கலெக்டரிடம் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று அதலபாதாளத்தில் இருந்த இந்திய பங்குச் சந்தை, இன்று உச்சத்தில் இருப்பதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்க வரிவிதிப்பால், நேற்று ரூ.20 லட்சம் கோடி வரை பங்குச் சந்தை இழப்பை சந்தித்தது. இந்நிலையில், இன்று வர்த்தகம் தொடங்கியதுமே சென்செக்ஸ் 1,103 புள்ளிகள் அதிகரித்து 74,124 புள்ளிகளாக உள்ளது. அதேபோல், நிஃப்டி 306 புள்ளிகள் உயர்ந்து 22,488 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.8) சவரனுக்கு ₹480 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,225க்கும், சவரன் ₹65,800க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் மந்த நிலை காரணமாகத் தொடர்ந்து 5-வது நாளாக தங்கம் விலை சரிவைக் கண்டுள்ளது கவனிக்கத்தக்கது.
தமிழ்நாட்டின் நம்பர்-1 துரோகி யார் எனக் கேட்டால் அரசியல் தெரியாத 6ஆம் வகுப்பு மாணவன் கூட இபிஎஸ்-ஐ கை காட்டுவான் என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். சுயநலத்துக்காக எந்த எல்லைக்கும் செல்வார், எந்தத் துரோகத்தையும் செய்வார் என்பதற்கு நடமாடும் சாட்சிதான் ஓபிஎஸ் என சாடிய அவர், இபிஎஸ் சுயரூபம் தெரியாமல் அவரை நம்பி மோசம் போன இவர்கள் தான் அந்த தியாகிகள் என்று பதிலடியும் கொடுத்துள்ளார்.
உலக அளவில் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்துவார் என பேசப்பட்டது. ஆனால், அது வெறும் வதந்தி என தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. அதே சமயம் பேச்சுவார்த்தைக்கு முன் வரும் நாடுகளுடன் பேசுவதற்கு தயாராகவே இருக்கிறோம். இஸ்ரேல் பிரதமர் ஏற்கெனவே இது பற்றி விவாதித்தார். இந்தியாவும் பேசி வருகிறது என்றார்.
சிங்கப்பூரில் ஏற்பட்ட தீ விபத்தில் AP Dy CM பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர் காயமடைந்தார். பள்ளியில் நடந்த இந்த விபத்தில் அவரது கைகள், கால்களில் காயங்களுடன் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிகாரிகள் பவன் கல்யாணை உடனடியாக சிங்கப்பூர் செல்ல அறிவுறுத்தியும், பழங்குடி மக்களுக்கு உறுதியளித்தபடி இன்று குரிடி கிராமத்திற்கு சென்றுவிட்டு பின்னர் சிங்கப்பூர் செல்வதாக அவர் பதில் அளித்துள்ளார்.
சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்தபடி அதிமுகவினர் இன்று வந்தனர். டாஸ்மாக்கில் நடந்த ஊழலை கண்டித்தும், யார் அந்த தியாகி என கேள்வி எழுப்பியும் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து அதிமுகவினர் பேரவைக்கு சென்றிருந்தனர். அப்போது பதாகைகளை ஏந்தி பேரவைக்குள் அமளியில் ஈடுபட்டதால், இபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 2வது நாளாக இன்று கருப்புச் சட்டை அணிந்தபடி பேரவைக்கு வருகை புரிந்துள்ளனர்.
பெண்களுக்கு மாதவிடாய் நெருங்கிவரும் நாட்களில், பப்பாளி சாப்பிட்டால் உடனே மாதவிடாய் வர வாய்ப்புள்ளது. இதற்கு சூடு மட்டுமே காரணமல்ல. பழமாகாத பப்பாளியில் இருக்கும் papain, carpaine என்ற சத்துகள், கருப்பை சுருங்கி கரு முட்டைகள் உடைய தூண்டலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். இதிலுள்ள, வைட்டமின் சி, பீட்டா- கரோட்டின் போன்றவை ஹார்மோன் உற்பத்தியை தூண்டி மாதவிடாய் சுழற்சியை சீராக வைக்க உதவுகிறது. SHARE IT.
Sorry, no posts matched your criteria.