India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜம்மு காஷ்மீர் பேரவையில் 2வது நாளாக அமளி ஏற்பட்டது. வக்ஃப் சட்டம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் ஏற்க மறுத்தார். இதனால் பிடிபி MLA வஹீத் பாரா அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினார். இதையடுத்து அவை காவலர்கள் அவரை குண்டுக்கட்டாக வெளியேற்றினர். காஷ்மீரில் வக்ஃப் சட்டம் குறித்து விவாதிக்க முடியாதது துரதிருஷ்டவசமானது என கருத்து தெரிவித்தார்.
கவர்னருக்கு எதிரான வழக்கில், பேரறிவாளன் மற்றும் சூப்ரா வழக்குகளை மேற்கோள் காட்டி SC தீர்ப்பளித்துள்ளது. கவர்னர் ஆர்.என்.ரவி அவருக்கான அதிகாரத்தின்படி நடந்து கொள்ளவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சட்டப்பிரிவு 200ன்படி, மாநில அரசின் அறிவுரைப்படி மட்டும்தான் கவர்னர் செயல்பட முடியுமா அல்லது சுயேச்சையாக முடிவு செய்ய அதிகாரம் உள்ளதா என்பதை ஆராய வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய சினிமாவில் எந்த நடிகையும் செய்யாத சாதனையை செய்திருப்பவர் திவ்ய பாரதி. பாலிவுட் உலகில் கொடிகட்டி பறந்த அவரது நடிப்பில் 1992-ல் மட்டும் 12 படங்கள் ரிலீசாகியுள்ளன. தமிழில் ‘நிலா பெண்ணே’ படத்திலும் நடித்துள்ளார். தனது 19-வது வயதில், 1993-ல் இதே மாதத்தில்தான் அவர் உயிரிழந்தார். வீட்டு பால்கனியில் இருந்து அவர் தவறி விழுந்து இறந்ததாக சொல்லப்படுகிறது. இவரை நினைவிருக்கிறதா?
மும்பையில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ₹15,000 கோடி மதிப்புள்ள ‘ஆன்டிலியா’ பங்களாவிற்கு சிக்கல் எழுந்துள்ளது. வக்ஃப் வாரிய நிலத்தை வாங்கிய அவர், அதில் பங்களா கட்டி இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது வக்ஃப் மசோதா சட்டமாகியுள்ளதால், அதன்படி வக்ஃப் நிலத்தை தனியாருக்கு விற்க முடியாது. வழக்கு அம்பானிக்கு எதிராக திரும்பினால், அவர் வீட்டை காலி செய்ய வேண்டிய நிலை வரும்.
அர்ஜென்டினாவில் நடந்த உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ருத்ராங்க் ஷ் பாட்டீல் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஆண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் பிரிவில் போட்டியிட்ட ருத்ராங்க், ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டார். இறுதியில் 252.9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.
புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று பிறந்த நாள். தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்து வந்த அல்லு அர்ஜூன், வைகுண்டபுரம் திரைப்படம் மூலம் மெல்ல தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார். தொடர்ந்து புஷ்பானா பிளவர் இல்ல; ஃபயர் என டயலாக் பேசி ஆஸ்திரேலியா வரை ரீச் ஆனார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், “10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது செல்லாது என்றும் பேரவையில் மீண்டும் நிறைவேற்றி மசோதாவை அனுப்பிய நாளிலேயே ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வெள்ளி விலை கடந்த 6 நாள்களில் கிராமுக்கு 12 ரூபாயும், கிலோவுக்கு 12 ஆயிரம் ரூபாயும் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று (ஏப்.8) காலை நேர வர்த்தகப்படி கிராமுக்கு 1 குறைந்து 102க்கும், பார் வெள்ளி 1 கிலோ 1,02,000க்கும் விற்பனையாகிறது. சர்வதேச பங்குச்சந்தையில் நிலவும் மந்த நிலை, நுகர்வு குறைவு உள்ளிட்ட காரணங்களால் வரும் நாள்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில், நாதக சார்பில் 25 தொகுதிகளில் போட்டியிட முதற்கட்ட வேட்பாளர்களை சீமான் தேர்வு செய்துள்ளார். ஆயிரம் விளக்கு- களஞ்சியம், வேதாரண்யம்- இடும்பாவனம் கார்த்திக், கீழ்வேலூர்- கார்த்திகா, ஒரத்தநாடு- திருமுருகன், ராமநாதபுரம்- அனீஸ் பாத்திமா, ஸ்ரீரங்கம் – ராஜேஷ், மடத்துக்குளம் – அபிநயா, திருவள்ளூர்- செந்தில்குமார் உள்ளிட்டோர் வேட்பாளராக தேர்வாகி, களத்தில் செயல்பட தொடங்கியுள்ளனர்.
பிரம்ம குமாரிகளின் தலைமை நிர்வாகி தாதி ரத்தன் மோகினி(100) அகமதாபாத்தில் காலமானார். கடந்த 2021 முதல் பிரம்ம குமாரிகளின் தலைமைப் பொறுப்பிலிருந்து வந்த இவர்தான், 1954இல் ஜப்பானில் நடந்த உலக அமைதி மாநாட்டில் பிரம்ம குமாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தியவர். பின்னர், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் ஆன்மிக சேவை புரிந்தார். தாதி ரத்தன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
Sorry, no posts matched your criteria.