India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தெற்கில் கடந்த வாரம் ‘கானா’ கருப்பசாமி, வடக்கில் நேற்று பெருமாள் என மூத்த தலைவர்களின் அடுத்தடுத்த மறைவு அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் தருணத்தில் இரு முக்கிய தளபதிகளை இழந்துவிட்டோம் என இபிஎஸ், நிர்வாகிகளிடம் வேதனையுடன் கூறியுள்ளார். <<15888600>>Ex MLA கருப்பசாமி<<>>, <<16015298>>Ex MP பெருமாள்<<>> இருவரும் நல்ல களப் பணியாளர்கள் என்பதால் ஜெயலலிதாவின் நற்பெயரை பெற்றவர்கள் ஆவர்.
வாரத்தின் முதல்நாளே தலையில் துண்டுபோடும் நிலைக்கு முதலீட்டாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்திய பங்குச் சந்தையில் அனைத்துத் துறைகளின் பங்குகளும் ரெட் (சரிவு) சிக்னலாகவே உள்ளன. சென்செக்ஸ் (-2,542), நிப்ஃடி (-810) கடும் வீழ்ச்சியை சந்தித்திருப்பதால், ₹19 லட்சம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்திருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வரிவிதிப்பால் ஆசியா முழுவதுமே பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன.
இந்தியாவை சுற்றிப் பார்க்க ஆசையாய் வந்த வெளிநாட்டு பெண், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தாஜ்மஹாலில் நடந்துள்ளது. செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த இளம்பெண்(28), தாஜ்மஹாலை பார்வையிடச் சென்றபோது, தொடக்கூடாத இடங்களில் தொட்டு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த பெண் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, சிசிடிவி காட்சி மூலம் ஆக்ராவைச் சேர்ந்த கரண் ரத்தோர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டாஸ்மாக் ஊழல் புகாரில் சிக்கிய ‘தியாகி யார்’ என்ற பேட்ஜை அதிமுகவினர் அணிந்து வந்தனர். இதுகுறித்து பேரவையில் CM ஸ்டாலின், “நொந்து நூடுல்ஸாகிப்போன அதிமுக தொண்டர்கள்தான் தியாகி.. முதல்வர் பதவிக்காக காலில் விழுந்ததும் ஏமாந்தாரே அந்த அம்மையார்தான் தியாகி” என்று பதிலடி கொடுத்தார். மேலும், அதிமுகவினர் தாம் சிக்கியுள்ள பல்வேறு வழக்குகளில் இருந்து தப்பிக்க காலில் விழுந்துள்ளனர் எனவும் சாட்டியுள்ளார்.
டெல்லி, மும்பை, ஐதராபாத் மற்றும் பெங்களூருவாசிகளுக்கு சொந்த வீடு வாங்கும் கனவு எட்டாக்கனியாக மாறி வருகிறது. ஏனெனில் இந்நகரங்களில் சொந்த வீடு வாங்க ₹1.2– ₹1.5 கோடி வரை செலவு செய்ய வேண்டும். ஆனால், நடுத்தர குடும்பத்தினரின் ஆண்டு வருமானமோ ₹7–₹8 லட்சம் வரைதான் இருக்கிறது. இதனால், இப்போதைக்கு வாடகை வீட்டில் வாழ்வதுதான் சிறப்பு என ரெடிட் தளத்தில் பலர் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர்.
டாஸ்மாக்கில் ₹1,000 கோடி ஊழல் விவகாரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, சட்டபேரவையில் இபிஎஸ் உட்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சட்டப்பேரவையில் இருந்த அக்கட்சியின் எம்.எல்.ஏக்களை இன்று ஒருநாள் மட்டும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். மேலும், யார் அந்த தியாகி என்ற பதாகைகளை காட்டிய அவர்களை உடனே வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
டாஸ்மாக்கில் ₹1000 கோடி ஊழல் விவகாரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றத்தில் இருக்கும் விவகாரம் குறித்து பேரவையில் பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் கூறினார். இதற்கு எதிர்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள், ‘யார் அந்த தியாகி?’ என்று முழக்கம் எழுப்பினர்.
அமெரிக்கா விதித்த 26% சதவீத இறக்குமதி வரியால், இந்தியாவின் GDP வளர்ச்சி சற்று மந்தமடையலாம் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் RBI தனது ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% ஆக குறைக்க நேரிடலாம் என கணிக்கப்பட்டுள்ளது. வரி விதிப்புக்குப் பின் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 6.3% இருந்து 6.1% ஆக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில் ED ரெய்டு நடத்தி வரும் நிலையில், அவர் சட்டப்பேரவையில் பங்கேற்றுள்ளார். வீட்டில் ரெய்டு நடப்பதற்கான எந்த அறிகுறியும் அவரது முகத்தில் தெரியவில்லை. வானதி சீனிவாசன், பாமக MLA உள்ளிட்டோர் எழுப்பிய கேள்விக்கு விடை நேரத்தில் பதிலளித்து வருகிறார். இது ஒருபுறம் என்றால் அவரது இல்லத்தில் 100க்கும் மேற்பட்ட ஆதாரவாளர்கள் குவிந்ததால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
மலையாள இயக்குநர் டி.கே.வாசுதேவன் (89) காலமானார். நடிகர், கலை இயக்குநர், இயக்குநர் என 1960களில் மலையாள திரையுலகின் முக்கிய அங்கமாக வாசுதேவன் திகழ்ந்தார். மிகவும் பிரபலமான ஃபேமஸான ‘செம்மீன்’ படத்தில் இவர் அசோசியேட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். என்டே கிராமம், விஸ்வரூபம் போன்ற படங்களையும் இயக்கி இருக்கிறார். வாசுதேவன் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
Sorry, no posts matched your criteria.