news

News April 6, 2025

மீண்டும் களமிறங்கும் ரோகித் ஷர்மா

image

மும்பை அணியின் தொடக்க வீரர் ரோகித் ஷர்மா கடந்த போட்டியில் விளையாடவில்லை. அவரது ஃபார்ம் சரியில்லாததால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று ஒரு தரப்பு கூற, காயம் காரணமாக அவர் விளையாடவில்லை என்று மும்பை அணி நிர்வாகம் சொன்னது. இந்நிலையில், அவர் உடல் தகுதி பெற்று விட்டதாகவும் அடுத்த போட்டியில் நிச்சயம் பேட்டிங் செய்வார் என்றும் MI அணியின் கோச் தெரிவித்துள்ளார்.

News April 6, 2025

இதை செய்யாதீங்க… மருத்துவர்கள் எச்சரிக்கை

image

ஆபாசப் படம் பார்த்தால் தாம்பத்ய உறவில் திருப்தி குறைவதாக ஆய்வில் உறுதியாகியுள்ளது. அதிகநேரம் ஆபாசப் படம் பார்க்கும் ஆண்களுக்கு உடலுறவு செயல்பாடு பாதிப்பது உறுதியாகியுள்ளது. இவர்கள் படங்களில் வரும் உண்மைக்கு மாறான காட்சிகளை தொடர்ந்து பார்ப்பதால், இயல்பான திறன் குறைவதுடன், அப்படங்களுக்கு அடிமையாகும் நிலை ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆண்களே அலர்ட்!

News April 6, 2025

முட்டை விலை உயர்ந்தது

image

நாமக்கல் மண்டலத்தில் கோழி முட்டை கொள்முதல் விலையை 10 காசுகள் உயர்த்த பண்ணை உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். 4 ரூபாய் 25 காசுகளாக இருந்த கொள்முதல் விலை, தற்போது 4 ரூபாய் 35 காசுகளாக அதிகரித்துள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் முட்டையின் சில்லறை விற்பனை விலை அதிகரிக்கப்படும். நாமக்கல்லில் முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.85-க்கும், கறிக்கோழி ரூ.94-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News April 6, 2025

தமிழக அமைச்சர்களின் பெயர்களை சொல்லாத மோடி

image

பாம்பன் பாலத் திறப்பு விழாவில் அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல், ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனியும் கலந்து கொண்டிருந்தார். ஆனால் விழாவில் பங்கேற்றோரின் பெயர்களை பிரதமர் மோடி கூறுகையில், அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், தங்கம் தென்னரசு, நவாஸ் கனி எம்பி ஆகியோரின் பெயர்களை கூறவில்லை. இது தற்செயலாக நடந்ததா? இல்லையா? எனத் தெரியவில்லை.

News April 6, 2025

ஆப்பிள் நிறுவனம் பெயரில் புதிய ஸ்கேம்

image

பிட்-காயின் புகழடைந்த பின் பல டிஜிட்டல் கரன்ஸிக்கள் முளைக்கத் தொடங்கின. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை முதலீட்டாளர்களின் பணத்தை வாரி சுருட்டிக் கொண்டு ஓடிய ஸ்கேமாகவே இருந்திருக்கின்றன. அந்த வரிசையில் iToken என்ற பெயரில் புதிய க்ரிப்டோ அறிமுகமாகியிருக்கிறது. ஆனால், இதற்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. உஷாராக இருங்க மக்களே.

News April 6, 2025

தாய்மொழியை திணிப்பதாக தெலங்கானாவில் போராட்டம்!

image

சொந்த மொழியையே திணிப்பதாக குற்றஞ்சாட்டி போராட்டம் நடத்திய சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது. ஹைதராபாத்தில் பள்ளிகளில் தெலுங்கு மொழியை திணிப்பதாகக் கூறி சிபிஎஸ்இ மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். 2-வது மொழியாக இந்தி கற்று வருவதாகவும், தெலுங்கு வேண்டாம் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். தனியார் பள்ளிகளில் தெலுங்கு மொழி கட்டாயம் என மாநில அரசு அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

News April 6, 2025

சனிப்பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

image

சனிப்பெயர்ச்சியால் ரிஷபம், கடகம், மகரம், விருச்சிகம் ராசிகளுக்கு நன்மை அதிகரிக்கும். ரிஷப ராசிக்காரர்களுக்கு வெற்றியும், சொத்துக்களும் சேரும். கடக ராசிக்காரர்களுக்கு கடின உழைப்பிற்கு ஏற்ற வருமானம், வெற்றி கிடைக்கும். புது வீடு மனை வாங்க வாய்ப்பு உண்டு. மகர ராசிக்காரர்களுக்கு முன்னேற்றமும், லாபமும் ஏற்படும். சொத்து வாங்கும் கனவு நனவாகும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதிய வேலை, சொத்து கிடைக்கும்.

News April 6, 2025

18 வயதுக்கு குறைந்த பெண் ரேப்.. தண்டனை தெரியுமா?

image

18 வயதுக்கும் குறைவான பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால் அளிக்கப்படும் தண்டனை குறித்து பிஎன்எஸ் சட்டத்தின் 70(2)ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ளது. அந்த குற்றத்தில் ஈடுபடும் நபர்களுக்கு அபராதத்துடன் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் அல்லது மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அந்த சட்டப்பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 6, 2025

Recession என்றால் என்ன?

image

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பொருளாதார நடவடிக்கைகளால் அந்நாடு பொருளாதார மந்தநிலைக்கு (Recession) செல்லும் என்று அறிஞர்கள் கணிக்கின்றனர். அப்படி ஏற்பட்டால், உலகம் முழுவதும் பலரது வேலைவாய்ப்புகள் பறிபோகும், நிறுவனங்களின் லாபம் கணிசமாகக் குறையும், மக்களின் சேமிப்புகள் கரையும், தங்கம் & பங்குச்சந்தைகளின் வீழ்ச்சி அதிகரிக்கும், வங்கிகளில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கும். இதன் அறிகுறிகள் தெரிகிறதா?

News April 6, 2025

வக்பு வாரிய சட்டம் விரைவில் அரசிதழில் வெளியீடு: ஜோஷி

image

வக்பு வாரிய திருத்தச் சட்டம் விரைவில் அரசிதழில் வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் முர்மு நேற்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, அது விரைவில் அரசிதழில் வெளியிடப்பட இருப்பதாகவும், அப்படி வெளியிட்ட பிறகு அது அமலுக்கு வரும் என்றும் ஜோஷி கூறியுள்ளார். இந்த சட்டம், முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!