India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹாலிவுட் நடிகை லார் பார்க் லிங்கன் (63) மறைவுக்கு புற்றுநோயே காரணம் என்று அவரின் மகள் தெரிவித்துள்ளார். த்ரில்லர் படங்களான Friday the 13th Part VII: The New Blood, “House II: The Second Story” உள்ளிட்டவற்றில் நடித்தவர் லார் பார்க் லிங்கன். அண்மையில் அவர் மரணம் அடைந்தார். அதற்கான காரணம் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், மார்பக புற்றுநோய் பாதிப்பே காரணம் என்று மகள் பைபர் லிங்கன் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் திமுக ஆட்சியில் கோயில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை எனவும் குற்றம்சாட்டினார். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரண உதவியை உயர்த்தி வழங்கவும் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரோ Ex தலைவர் <<16213450>>கஸ்தூரி ரங்கன்<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விண்வெளி துறையில் இந்தியா மிகப் பெரும் உயரங்களை அடைவதற்கு வித்திடும் வகையில் பணியாற்றியவர் அவர் என புகழாரம் சூட்டியுள்ளார். விஞ்ஞானியாக மட்டுமின்றி திட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளை அவர் வகித்துள்ளதாக தெரிவித்த CM ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
2023-ல் பாக். ல் இருந்து நேபாளம் வழியாக உ.பி வந்து தனது காதலரான சச்சின் மீனாவை மணந்தவர் சீமா ஹைதர். இந்த தம்பதிக்கு சமீபத்தில் குழந்தையும் பிறந்தது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானியர்களின் விசாக்களுக்கு இந்தியா கெடு விதித்துள்ள நிலையில், தான் பாகிஸ்தானின் மகள், ஆனால் இந்தியாவின் மருமகள் எனக் கூறும் சீமா, தன்னை இங்கேயே இருக்க அனுமதிக்குமாறு அரசிடம் சட்ட ரீதியாக முறையிட்டுள்ளார்.
மே இறுதியில் தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப் (AFI) 2025 தொடரிலிருந்து ஈட்டி எறிதல் சாம்பியன் நீரஜ் சோப்ரா விலகியுள்ளார். டைமண்ட் லீக், உலக சாம்பியன்ஷிப் மற்றும் நீரஜ் சோப்ரா கிளாஸிக் 2025 போட்டியிலேயே அவர் கவனம் செலுத்தி வருவதால் இம்முடிவை எடுத்துள்ளார். அதேநேரம், 2017 ஆசிய போட்டியில் நீரஜ் தங்கம் வென்றிருந்தார். அதுவே அவரது கடைசி ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியாகும்.
இந்தியாவும், பாகிஸ்தானும் எங்களின் சகோதர நாடுகள் எனத் தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையீது அப்பாஸ் அராச்சி, இரு நாடுகளிடையே பதற்றத்தை தணிக்க மத்தியஸ்தம் செய்யத் தயார் என்றும் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் நிறுத்தம், அட்டாரி – வாகா எல்லை மூடல், தூதர்கள் வெளியேற்றம், துப்பாக்கிச்சூடு என இந்தியாவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் போர் பதற்றம் நிலவுகிறது.
இந்தியா, பாக். ராணுவம் இடையே எல்லையில் 2வது நாளாக துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. பஹல்காம் தாக்குதலை பாக். தீவிரவாதிகள் நடத்தியதாக இந்தியா சந்தேகிக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அச்சத்தில் உள்ள பாக், எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றம் நிலவுகிறது. உடனடியாக இந்திய அரசு, வாகா – அத்தாரி எல்லையை மூடி உத்தரவிட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே 3 முக்கிய ரோட் பார்டர் கிராஸிங் உள்ளன. ➙வாகா எல்லை ➙கர்தர்பூர் எல்லை ➙கந்தா சிங் வாலா எல்லை ஆகியவை உள்ளன. இதில் கர்தர்பூர் எல்லை இன்னும் சீக்கியர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தங்கம் விலை அதிகரித்தபோதிலும், வெள்ளி விலை கடந்த 2 வாரமாக மாறாமல் இருந்தது. 1 கிராம் ரூ.111ஆகவும், 1 கிலோ ரூ.1.11 லட்சமாகவும் விற்கப்பட்டது. இந்நிலையில், வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்தது. கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.112-க்கு விற்கப்படுகிறது. இதேபோல், 1 கிலோ வெள்ளி ரூ.1,000 அதிகரித்து, ரூ.1.12 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. SHARE IT.
செப்டம்பரில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் மகளிர் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என அணியின் ஓபனர் குல் ஃபெரோசா கூறியுள்ளார். இதே கருத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் முன்வைத்திருந்தது. மேலும் பஹல்காம் தாக்குதல் நடைபெற்றுள்ள நிலையில், பொதுவான மைதானங்களிலேயே இரு அணிகளும் பங்கேற்கும் வகையிலான ஹைபிரிட் மாடலின் படியே பாக். அணி தொடர்ந்து விளையாடவுள்ளது.
Sorry, no posts matched your criteria.