India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
₹1937 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் TRB ராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது X பதிவில், 13,409 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதில்லை; முதலீடுகளை வைத்து வேலைவாய்ப்புகளாக மாற்றுவதாகவும் தெரிவித்தார்.
பெரம்பலூர், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில்
வாயில் துணியை கட்டிக்கொண்டுதான் பூசாரிகள் பூசை செய்கின்றனர். இக்கோயிலில், உக்கிரமாக இருக்கும் அம்மனை, பூசாரிகளின் மந்திரம் மேலும் உக்கிரமாக்கும் என்பதால், வாயில் துணி கட்டிக் கொள்கின்றனர். மேலும், இக்கோயில் வாரத்தில் திங்கள் & வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திறந்திருக்கும். மதுரையை எரித்த கண்ணகியே இங்கு கோயில் கொண்டு இருக்கிறாள் எனவும் கூறப்படுகிறது.
தோனியின் கேப்டன்சியை, அதற்கு முந்தைய தலைமுறையும், அவருக்கு அடுத்த தலைமுறையும் எப்போதும் கொண்டாடி வருகிறது. இந்நிலையில், தெ.ஆப்பிரிக்க வீரர் வெய்ன் பர்னெல் தனது ALL-TIME ODI அணியின் கேப்டனாக தோனியை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது பிளேயிங் 11-ல் சச்சின், ஆம்லா, விராட், ஏபி டிவில்லியர்ஸ், ஹஸி, அஃப்ரிடி, வாசிம் அக்ரம், லீ, முரளிதரன், வக்கார் யூனிஸ் இடம்பெற்றுள்ளனர். இதில் யாரேனும் விடுபட்டுள்ளனரா?
சுதந்திர தினத்தில் திருட முடியாத ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதில் உறுதியேற்போம் என CM ஸ்டாலின் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், உண்மையான சுதந்திரம் என்பது மதவெறியை நிராகரித்தல், பாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவருதல் எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நமது சுதந்திர போராளிகளின் கனவுகளை நிறைவேற்றி அனைவரும் சமத்துவம், கண்ணியம் மற்றும் மரியாதையுடன் வாழ வழிவகை செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று(ஆக.14) மீண்டும் 10 காசுகள் சரிந்து ₹87.57 ஆக உள்ளது. இதனிடையே, கடந்த ஜூலை மாதத்தில், மொத்த விலை பணவீக்கமும் மைனஸ் 0.58% என எதிர்மறையாக பதிவாகி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இதுதான் மிகவும் குறைவான பணவீக்க விகிதமாகும். உணவு பொருள்கள், கனிம எண்ணெய், இயற்கை வாயு ஆகியவற்றின் விலை சரிவால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
நாட்டின் 79-வது சுதந்திர தினம் ‘Naya Bharat’ என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. அதாவது, வளங்கள், பாதுகாப்பு மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்கும் ‘வளர்ச்சியடைந்த பாரதம் 2047’ என்ற இலக்கை நோக்கிய பயணத்தையே இந்த நயா பாரத் குறிக்கிறது. இதனையொட்டி டெல்லி செங்கோட்டையில் 12-வது முறையாக கொடியேற்றும் PM மோடி, நாட்டு மக்களிடம் இது குறித்து உரையாற்றுகிறார்.
காங்., ஆட்சிக் காலத்திலேயே அரசுத் துறைகள் அதிகளவில் தனியார்மயமாக்கப்பட்டதாக அமைச்சர் L.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உ.பி., பிஹார், குஜராத் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது TN வளர்ச்சியில் பின்னோக்கி உள்ளதாகவும் விமர்சித்தார். மேலும், தூய்மை பணியாளர்களை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்த அவர், சமூக நீதியைப் பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி இல்லை என சாடினார்.
✦இதய ஆரோக்கியம் மேம்படவும், கால் தசைகள் வலுப்பெறவும் உதவுகிறது
➥ஒரு காலில் நின்று கொண்டு, மற்றொரு காலை தொடை மீது வைத்து நிற்கவும்.
➥கைகளை தலைக்குமேல் உயர்த்தி, ஒன்றுடன் ஒன்று சேர்த்து வைக்கவும்.
➥30- 45 விநாடிகள் வரை இந்த நிலையில் இருந்து விட்டு, மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும்.
ADMK, பல அணிகளாக பிரிந்து கிடந்தாலும் பொதுவெளியில் சில மாதங்களாக மோதல்கள் இல்லாமல் இருந்தது. இது, ஒன்றிணைப்புக்கான சமிஞ்ஞை என கூறப்பட்டது. ஆனால், அதற்கான காலம் கடந்துவிட்டது என EPS அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையில், ADMK பொதுச்செயலாளர் எனக் கூறி சசிகலா வெளியிட்ட சுதந்திர தின வாழ்த்து, தலைமை பண்பு இல்லாத EPS என <<17402506>>OPS விமர்சனம்<<>> என்று மீண்டும் அதிமுகவின் தலைமை பதவிக்கு நெருக்கடியை கொடுக்கின்றனர்.
தூய்மை பணியாளர்களின் வாக்குகளை பெறுவதற்காக எதிர்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். தற்போது அவர்களை சமாதானப்படுத்த அறிவிப்புகளை வெளியிடுகிறார் என இபிஎஸ் விமர்சித்துள்ளார். ஆம்பூரில் மக்கள் மத்தியில் பேசிய இபிஎஸ், தூய்மை பணியாளர்கள் கைது செய்ததை கண்டித்து MP சு.வெங்கடேசன், பெ.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளதாகவும், தற்போது தான் அவர்களுக்கு ரோஷம் வந்துள்ளதாகவும் கூறினார்.
Sorry, no posts matched your criteria.