India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இன்று (நவ.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

பைக், கார் வைத்திருப்பவர்கள் மழைக்காலத்தில் வாகன பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வண்டிக்கு தேவையான காப்பீடு அம்சங்களை உள்ளடக்கிய இன்ஷூரன்ஸ் பாலிசி (காலாவதி ஆகாமல்) இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். மழையில் வாகனம் அழுக்காக போகிறது என்பதால், மழை முடிந்தபின் சர்வீஸ் செய்துகொள்ளலாம் என அசட்டையாக இருந்தால், பழுது ஏற்பட்டு தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். கவனமாக இருங்கள். SHARE IT

நள்ளிரவு 1 மணி வரை 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், T.V.மலை, காஞ்சீபுரம், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும், சென்னை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் IMD தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?

தூங்கும் போது நீங்கள் இறப்பது போல் கனவுகள் வந்தால் அச்சம் வேண்டாம். நாம் ஏதோ ஒன்றை புதிதாக செய்யப் போகிறோம், நம்மிடம் இருந்து எதையோ நிறுத்திவிட்டு புதிய மனிதராக வாழப் போகிறோம் என்பதுதான். இந்த கனவுக்கு அர்த்தமாம். நடக்க இருக்கும் மாற்றத்தை உணர்த்தும் வகையிலே இதுபோன்ற கனவுகள் வருகிறதாம். அதனால் பயம் வேண்டாம். மாற்றம் நல்லதுக்கு தான் என்று நம்புங்கள். நல்லதே நடக்கும்.

ஆசிய கபடி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி தங்கம் வெல்ல காரணமாக விளங்கிய ‘கண்ணகி நகர்’ கார்த்திகாவை, மன்சூர் அலிகான் நேரில் சந்தித்து ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். மேலும், ஒலிம்பிக்கில் இந்திய அணிக்காக களமிறங்கி தங்கம் வென்றால், கார்த்திகாவின் திருமணத்திற்கு 100 சவரன் நகையை பரிசாக அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளார். அவரது இந்த செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஊழல் மாடல் ஆட்சியின் அவலத்தை திசைதிருப்பவே அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டதாக தவெகவின் அருண்ராஜ் விமர்சித்துள்ளார். நேற்று வேலைவாய்ப்பில் ஊழல், இன்று மணல் கொள்ளையில் மவுனம், திமுகவின் கபட நாடகத்தை தமிழக மக்கள் விழிப்போடு கவனித்துக் கொண்டு இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், 2026-ல் மக்கள் நிச்சயம் திமுகவிற்கு தகுந்த பாடத்தை புகுட்டி வீட்டுக்கு அனுப்புவது உறுதி என்றும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

திருமண உறவோ, காதல் உறவோ, பெரும்பாலான உறவுகள் சில ஆண்டுகளில், ஏன் சில மாதங்களிலேயே கசந்து விடுகின்றன. அதற்கு பின்வருபவை முக்கிய காரணங்கள்: *பரஸ்பரம் மரியாதை தராதது *சீரற்ற செயல்பாடு *ஏமாற்றுதல் *இணையை ஸ்பெஷலாக உணர செய்யாதது *வாக்குறுதியை மீறுதல். இந்த பிரச்னைகளை சரிசெய்தால் உங்கள் வாழ்க்கை அழகாக மாறும் என்கின்றனர் மனநல ஆலோசகர்கள். SHARE IT

விஜய் நிச்சயமாக தமிழ்நாட்டை ஆள்வார் என நடிகர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார். விஜய்க்கு தோல்வி என்பதே கிடையாது என்றும், நல்ல மாமனிதர் அவர் எனவும் பெஞ்சமின் குறிப்பிட்டுள்ளார். மேலும், எம்ஜிஆர் சின்ன குழந்தைகள் மனதில் இடம்பிடித்து CM ஆனார். அதேபோல் விஜய்யும் குழந்தைகள் மனதில் இடம்பிடித்துள்ளார். நிச்சயமாக தமிழ்நாட்டை ஆள்வார் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.