India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பும்ராவுக்கு அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது என BCCIக்கு முன்னாள் NZ பவுலர் ஷேன் பாண்ட் அறிவுறுத்தியுள்ளார். பும்ராவிற்கு கடந்த 2023ல் ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு அதிக பணிச்சுமை கொடுத்தால் அது சிக்கலில் போய் முடியும் எனவும், T20WC, ODIWC-யில் பும்ரா விளையாட வேண்டும் என்றால், ENGக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு பணிச்சுமை கொடுக்காமல் இருப்பதே நல்லது எனவும் பாண்ட் கூறியுள்ளார்.
USAவின் ஹோல்டெக் இன்டர்நேஷனல் நிறுவனம், இந்தியாவில் அணு உலைகளை வடிவமைப்பதற்கு டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளார். இதன்மூலம், இந்தியாவில் புதிய அணு உலைகள் நிறுவப்பட உள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், டாடா மற்றும் L&T நிறுவனங்களுக்கு 300 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அணு உலை தொழில்நுட்பம் வழங்கப்பட உள்ளன. இதன்மூலம், இந்தியா- அமெரிக்கா இடையே அணுசக்தி துறையில் தொழில்நுட்ப பரிமாற்றம் நடைபெற உள்ளது.
தென் மாநிலங்கள், குறிப்பாக தமிழர்களை பார்த்து மராட்டியர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என நவ நிர்மான் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார். ஹிந்தி திணிப்பை தமிழர்கள் வலிமையாக எதிர்ப்பதாகவும், ஆனால், மராட்டியர்கள் தங்கள் மொழி குறித்த கவலையே இல்லாமல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒவ்வொரு மாநில மொழியும் மதிக்கப்பட வேண்டியவை எனவும் தெரிவித்துள்ளார்.
*1935 – இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது. *1957 – இந்தியாவில் 1 நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. * இலங்கை இனக்கலவரம், 1958: கொழும்பு நகரில் தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகள் மீது தார் பூசப்பட்டன. *1976 – ஆப்பிள் நிறுவனம் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது. *2004 – கூகிள் நிறுவனம் ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியது. *முட்டாள்கள் தினம்.
இந்திய பொதுத்துறை நிறுவனமான HAL, ரஷ்யாவிற்கு தடைசெய்யப்பட்ட ஆயுத தொழில்நுட்பத்தை வழங்கியதாக அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இது உண்மைக்கு புறம்பான செய்தி எனவும், சில அரசியல் நோக்கங்களுக்காக தவறாக வழிநடத்த இந்த செய்தி புனையப்பட்டுள்ளதாகவும் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. மேலும், உண்மையை ஆராய்ந்து செய்தி வெளியிடவும் அறிவுறுத்தியுள்ளது.
விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பி 12 நாள்கள் கழித்து சுனிதா, பட்ச் வில்மோர், நிக் ஹேக் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சுனிதா பேசும்போது, விண்வெளியில் நேரத்தை செலவிடுவது தனக்கு எப்போதும் பிடிக்கும் எனவும், அங்கு நிறைய ஆராய்ச்சிகளை செய்ததாகவும் கூறினார். மேலும், தங்களை விண்வெளியில் இருந்து பத்திரமாக பூமிக்கு கொண்டுவந்த டிரம்ப், மஸ்கிற்கு நன்றியுள்ளவராக இருப்பேன் எனவும் தெரிவித்தார்.
*எதிரிகள் தாக்கித்தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும். நீங்கள் தாங்கித்தாங்கி வலுவை பெற்றுக் கொள்ளுங்கள். *பிறருக்குத் தேவைப்படும்போது நல்லவர்களாகத் தெரியும் நாம்தான், அவர்களது தேவைகள் தீர்ந்தவுடன் கெட்டவர்களாகிவிடுகிறோம். *புகழைத் தேடி நாம் செல்லக்கூடாது, அதுதான் நம்மைத் தேடி வரவேண்டும். *உலகின் பிளவு, குடும்பத்தில் தொடங்குகிறது. *ஊக்கத்தை கைவிடாதே, அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு.
பிரான்ஸின் ரெனால்ட், ஜப்பானின் நிசானுடன் இணைந்து சென்னை ஒரகடத்தில், ரெனால்ட் நிசான் ஆட்டோமோட்டிவ் இந்தியா என்ற கார் உற்பத்தி ஆலையை தொடங்கின. இதில் நிசான் நிறுவனத்திற்கு சொந்தமான 51% பங்குகளை ரெனால்ட் வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன்மூலம், அந்த ஆலை ரெனால்ட்டுக்குச் சொந்தமானதாக மாற உள்ளது. இருப்பினும், புதிய நிசான் கார் மாடல்களை இந்த ஆலை தொடர்ந்து உற்பத்தி செய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நாக்பூரில் பல பெண்களிடம் தவறாக நடந்து வீடியோ எடுத்து மிரட்டி வந்த கணவனை, அவரது மனைவி போலீஸில் போட்டுக் கொடுத்துள்ளார். கணவனின் நடத்தையில் சந்தேகம் வரவே, அவரது வாட்ஸ்அப்பை ஹேக் செய்த போது மனைவிக்கு இது தெரியவந்துள்ளது. மேலும், தனது கணவனால் பாதிக்கப்பட்ட 19 வயது பெண்ணையும் புகாரளிக்க வைத்துள்ளார். ஆபாசப் படங்களில் வருவது போல் செயல்பட சொல்லி தன்னையும் வற்புறுத்தியதாக மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 223 ▶குறள்: இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள. ▶பொருள்: ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,, ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு.
Sorry, no posts matched your criteria.