India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல்லில் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு முட்டைக்கு 10 காசு உயர்ந்த நிலையில் இன்று மேலும் 25 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. முட்டையின் தேவை அதிகரித்திருப்பதால் விலை உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சில்லறை விற்பனையிலும் முட்டை விலை உயரும் என்பதால், இது மக்களுக்கு கூடுதல் சுமையை அளிக்கும்.
தவெக கூட்டத்தில் மோடியை விஜய் விமர்சித்ததற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அரசியல் என்பது சும்மா மைக் எடுத்து பேசிவிட்டு போவது அல்ல எனக் கூறிய அவர், முதலில் விஜய் களத்திற்கு வர வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், ஊடக வெளிச்சத்துக்காக மோடியை விஜய் விமர்சிப்பதாக குறிப்பிட்ட அண்ணாமலை, ஆதவ் அர்ஜுனாவை சேர்த்ததன் மூலம் தமிழக வெற்றிக் கழகம், தமிழக லாட்டரி கழகமாக மாறிவிட்டது என விமர்சித்தார்.
மதுவில் குளிர்பானத்தை கலந்து குடிப்பதால் சுவை நன்றாக இருக்கும். ஆனால், ஆபத்து என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். குளிர்பானத்தில் 330 மி. சர்க்கரை இருப்பதால், அதனை மதுவுடன் கலந்து குடிக்கும்போது உடல் பருமன், நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். அதுவே தண்ணீர் கலந்து அருந்தினால், மதுவால் உடலில் ஏற்படும் நீரிழப்பை தடுக்கலாம். இது உடலில் ஆல்கஹாலின் செறிவைக் குறைக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு போட்டியிலும் ஒரு புதிய சாதனை படைத்துவரும் விராட் கோலிக்காக, மற்றொரு சாதனை காத்திருக்கிறது. இன்றைய போட்டியில் 55 ரன்கள் எடுத்தால், அவர் டி20 போட்டிகளில் 13,000 ரன்களை கடந்த 5-வது வீரர் ஆவார். இதுவரை, கிறிஸ் கெய்ல் (14,562), அலெக்ஸ் ஹேல்ஸ் (13,610), சோயப் மாலிக்(13,557), பொல்லார்ட் (13,537) மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். இன்றைய போட்டியில் கோலி சாதிப்பாரா?
தெருநாய் தொல்லை குறித்து பிரதமர் மோடியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் முறையிட்டுள்ளார். இந்தியாவில் தெருநாய்களின் எண்ணிக்கை 6.2 கோடியாக அதிகரித்துள்ளதாகவும், உலகில் நிகழும் ஒட்டுமொத்த ரேபிஸ் மரணங்களில் 36% இந்தியாவில் நிகழ்வதாகவும் பிரதமரிடம் அவர் கூறியுள்ளார். போதுமான நிதி இல்லாததால், நகராட்சிகள் இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றதாகவும் தெரிவித்துள்ளார்.
சமையல் GAS சிலிண்டர் வாடிக்கையாளர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் விரல் ரேகையை பதிவு செய்யவில்லை எனில் சிலிண்டர் கிடைக்குமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. மானிய விலை சிலிண்டர் பெறும் பயனாளிகளின் உண்மைத் தன்மை சரிபார்ப்பு பணிகள் நடக்கிறது. இதற்கு சிலிண்டர் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, அவர் GAS ஏஜென்சிக்கு சென்று, விரல் ரேகை பதிய வேண்டும். இப்பணியை, வரும் 31ம் தேதிக்குள் முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்திய சூப்பர் ஹீரோக்கள் படவரிசையில் ‘க்ரிஷ்’ படத்துக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘க்ரிஷ் 3’ வெளியாகி 10 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், க்ரிஷ் 4ல் நடிப்பதோடு அப்படத்தை இயக்கவும் ஹ்ரித்திக் ரோஷன் திட்டமிட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவரது தந்தை வெளியிட்டுள்ளார். இதனால் உற்சாகமடைந்த ஹிர்த்திக் ரோஷன் ரசிகர்கள் ‘க்ரிஷ் 4’ என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.
CHATGPT-இன் GHIBLY STYLE AI ஃபோட்டோ தான் நியூ டிரெண்டிங். என்ன மாதிரியான புகைப்படங்கள் வேண்டுமானாலும், அதை டைப் செய்தாலே நாம் எதிர்பார்த்ததை விட சூப்பரான ஃபோட்டோக்களை அடுக்கி விடுகிறது CHATGPT. இந்நிலையில், மோடியின் லேட்டஸ்ட் சம்பவங்களை, அழகிய இமேஜ்களாக அது தொகுத்துள்ளது. ராமேஸ்வரம் கோயிலுக்கு மோடி வந்தது; பிரதமராக பதவியேற்றது; மாலத்தீவுக்கு சென்றது போன்ற ஃபோட்டோக்கள் இதில் உள்ளன. SWIPE PLS.
சனிப் பெயர்ச்சி நாளை நடைபெறுவதால், 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறதாம். 1) ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். திடீர் லாபம் கிடைக்கும். 2) மிதுன ராசிக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சி அடையும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. 3) துலாம் ராசிக்காரர்களுக்கும் வேலையில் முன்னேற்றம் ஏற்படலாம். வாழ்வில் நேர்மறையான மாற்றம் ஏற்படும் என ஜோதிடர்கள் கணிக்கின்றனர்.
சிபில் ஸ்கோர் 650-க்கு கீழே இருந்தால் வங்கிகளில் கடன் வாங்குவது கடினம். ஆனால், சில டிப்ஸ்களை பயன்படுத்தி இதை சமாளிக்க முடியும். 1) நல்ல சிபில் ஸ்கோர் உள்ளவரை CO APPLICANTஆக சேர்த்தால், கடன் பெற வாய்ப்பு அதிகம். 2) தங்கம், சொத்து, டெபாசிட் போன்றவற்றை உத்தரவாதமாக வைத்து கடன் வாங்கலாம். 3) சிறிய கடன் தொகைக்கு விண்ணப்பிக்கவும். 4) வங்கி கடன் தராவிடில் உடனடி கடன் நிறுவனங்களை தேர்ந்தெடுக்கலாம்.
Sorry, no posts matched your criteria.