India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் தக்காளி விலை கணிசமாக குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் வழக்கமாக, ₹40 வரை விற்கப்படும் 1 கிலோ தக்காளி, இன்று வெறும் ₹7-க்கு மட்டுமே விற்கப்பட்டு வருகிறது. ஆந்திராவில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்திருப்பதே இதற்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதேபோல், நெல்லை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் தக்காளி விலை வழக்கத்தைவிட குறைந்திருக்கிறது. உங்கள் ஊரில் 1 கிலோ எவ்வளவு?

ரூபாயின் மதிப்பு மோசமாக இருந்ததாக மக்களவையில் தாக்கல் செய்த கடந்த நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதில், ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்த இந்தியா வெளிநாட்டு முதலீடுகளையே பெரிதும் சார்ந்துள்ளதாகவும், தற்போதைய மதிப்பு அதன் உண்மையான திறனை பிரதிபலிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவது குறிப்பிடத்தக்கது.

உயர்கல்வி நிறுவனங்களில் சாதி, மத ரீதியிலான பாகுபாட்டை தடுக்கும் வகையில், ஜன.14-ம் தேதி புதிய விதிமுறைகளை UGC வெளியிட்டது. இதை திரும்ப பெற வலியுறுத்தி SC-ல் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இன்று இவ்வழக்கை விசாரித்த SC, விதிகளில் தெளிவின்மை இருப்பதாகவும், அவை தவறாகப் பயன்படுத்தப்படலாம் எனவும் கூறி ரத்து செய்துள்ளது. மேலும், ஏற்கெனவே இருந்த விதிமுறைகளை பின்பற்றவும் உத்தரவிட்டுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 394 அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெக்னீஷியன், டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. டிகிரி, டிப்ளமோ, 12-ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://iocl.com/apprenticships தளத்தில் பிப்.10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

தைப்பூசம் விடுமுறையையொட்டி, நாளை முதல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாளை இரவு 11.45 மணிக்கு எழும்பூர்- நெல்லை இடையேயான சிறப்பு ரயில் புறப்படுகிறது. மறுமார்க்கத்தில் பிப்.1 இரவு 11.35 மணிக்கு அந்த ரயில் புறப்படும். இதேபோல், தாம்பரம் – தூத்துக்குடி இடையேயான ரயில் ஜன.31 இரவு 11.50 மணிக்கு புறப்பட உள்ளது. மறுமார்க்கத்தில் பிப்.1 இரவு 11.55 மணிக்கு புறப்படும். உடனே முன்பதிவு பண்ணுங்க!

‘Hotspot 2’ திரைப்படத்தில் லெஸ்பியன் டயலாக் பேசியதற்காக பெருமைப்படுவதாக நடிகை பிரிகிடா சாகா கூறியுள்ளார். படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய அவர், ‘நான் லெஸ்பியன்’ என டயலாக் சொல்லும்போது முதலில் சற்று தயங்கியதாகவும், பின்னர், அந்த உணர்வின் குரலாக இருந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் பல்வேறு கலவையான விமர்சனங்களுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் EPS முன்னிலையில் 2000 பேர் அதிமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் பேசிய EPS, கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்க ₹25,000 மானியம் வழங்கப்படும் என்றும் 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்துவோம் எனவும் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (ஜன., 27) வெளியான SI தேர்வு முடிவுகளில் பிழை இருப்பதால், அதை திரும்ப பெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சாப்ட்வேர் பிழையால் ஏற்பட்ட தவறு காரணமாக திரும்ப பெறப்படும் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், வகுப்பு பிரிவு ரீதியாக எதுவும் இல்லாமல் முடிவுகள் வெளியானதால், தேர்வர்கள் குழப்பத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

80’s காலக்கட்டத்தில் சினிமாவில் அறிமுகமான ஊர்வசி தற்போதும் பிசியாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது மகள் தேஜலட்சுமியும் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார். மலையாளத்தில் ‘சுந்தரியாயவள் ஸ்டெல்லா’, தாய் ஊர்வசி நடித்து வரும் ‘பாப்லோ பார்ட்டி’ ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். ஊர்வசிக்கு இவ்வளவு பெரிய மகளா என தேஜலட்சுமியின் போட்டோவை SM-ல் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

கரூர் துயரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்திக்காத விஜய் எப்படி நல்ல தலைவராக இருக்க முடியும் என EPS கேள்வி எழுப்பியுள்ளார். சரியாக திட்டமிடாமல் விஜய் சென்றதாலேயே கரூரில் 41 பேர் இறந்ததாக குற்றஞ்சாட்டிய EPS, அவருக்கு போதிய அரசியல் அனுபவம் இல்லை என்றார். மேலும், விஜய் சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் சிறந்த அரசியல் கட்சி என்றால் அது அதிமுக தான் என்றும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.