India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியின் திண்டுக்கல் மாவட்டத்திலேயே பருப்பில் கலப்படம் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. திண்டுக்கல் ஆட்சியர் நடத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாத் தெரிவித்துள்ளார். தரமான பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பாஜக வலியுறுத்தியுள்ளது.
நாங்கள் போருக்கு ஆதரவாக இல்லை, போருக்கான தேவையும் இல்லை என கர்நாடக CM சித்தராமையா கூறியுள்ளார். பாதுகாப்பு தோல்வியே பஹல்காம் சம்பவத்திற்கு காரணம், எனவே பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், பஹல்காம் தாக்குதல் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தைவிட, பிஹார் தேர்தல் பணியே PM-க்கு முக்கியத்துவம் எனவும் விமர்சித்தார்.
கஸ்தூரி மேடம்கிட்ட அம்மா கேரக்டர்ல நடிக்கணும்னு கேட்டேன், அவுங்க நான் சந்தானத்துக்கு அம்மாவா?அப்டின்னு ஷாக் ஆனாங்க, பிறகு கதையைக் கேட்டதும் நடிக்க சம்மதிச்சாங்க என நடிகர் சந்தானம் கூறியுள்ளார். மே 16-ல் வெளியாகவுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் யாஷிகா ஆனந்த் சந்தானத்தின் தங்கையாக நடித்துள்ளார். டிடி ரிட்டன்ஸ் போல இப்படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி.ஜெயகுமார் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுத்துள்ளது. 2022-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி, திமுக உறுப்பினர் நரேஷ்குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக டி.ஜெ., அவரின் ஆதரவாளர்கள் என 40 பேர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
<<16212631>>தங்கம்<<>> விலை மேலும் சரியக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளதால், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலை 42% உயர்ந்து, 22-ம் தேதி உச்சம் தொட்டது. எனினும் 23, 24-ம் தேதிகளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 சரிந்தது. நேற்று விலையில் மாற்றமில்லை. USA டாலர் மீதான முதலீடு அதிகரிப்பதும், சீனா-USA வர்த்தக போர் தீவிரம் குறைவதாலும், தங்கம் விலை மேலும் குறையும் எனக் கூறப்படுகிறது.
நயன்தாரா, மாதவன், சித்தார்த் நடித்து நேரடி OTT ரிலீசாக நெட்பிளிக்ஸில் வெளிவந்த ‘டெஸ்ட்’ படம் பயங்கர நெகட்டிவ் ரிவ்யூவையே பெற்றது. இந்த படத்தை வாங்கி, வெளியிட்ட நெட்பிளிக்ஸ் தளம் தற்போது தலையில் துண்டு போட்டுக்கொண்டு உட்கார்ந்துள்ளது. ஆம், இந்த படத்தை ₹55 கோடிக்கு வாங்கி வெளியிட்ட நெட்பிளிக்ஸுக்கு ₹5 கோடி கூட திரும்ப கிடைக்கவில்லையாம். படம் பார்க்காமலா OTT தளங்களிலும் வாங்குறாங்க?
அமைச்சர் பதவியா?, ஜாமினா? என்று உச்சநீதிமன்றம் செக் வைத்ததால், செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை, அவருக்கு பதில் ரகுபதி தாக்கல் செய்தார். இதனால், செந்தில் பாலாஜி ராஜினாமா செய்வார் என கருதப்படுகிறது. இதனால், அவரிடம் இருக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இலாகாவை ரகுபதியிடமும், மின்வாரிய இலாகாவை முத்துசாமியிடமும் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வரும் அணியாக CSK உள்ளது. நேற்றைய SRH அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு CSK ஏலம் குறித்து பேசிய அணியின் ஹெட் கோச் ஸ்டீபன் ஃபிளமிங், எங்கள் விளையாட்டைப் பார்க்கையில், ஏலத்தில் சரியாகச் செயல்பட்டோமோ என்ற கேள்வி எழுவது சரியானதே எனக் கூறியுள்ளார். மேலும், ஃபார்ம் பிரச்னைகள், கைகூடாத யுக்திகள் என பல பின்னடைவுகள் இருந்ததாகவும் ஃபிளமிங் கூறியுள்ளார்.
நார்வே செஸ் 2025 போட்டி மே 26 – ஜூன் 6 வரை ஸ்டாவங்கரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன், இந்தியாவின் டி குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகேசி ஆகியோருடன் விளையாடுவதை, ஒரு சவாலாக எதிர்நோக்கி இருப்பார் என விஸ்வநாதன் ஆனந்த் கூறியுள்ளார். கடந்தாண்டு, உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இளம் வயதிலேயே பெற்ற குகேஷ், மிகவும் பலம் பொருந்தியவராக மாறியுள்ளார்.
இந்திய அரசு பாகிஸ்தானியர்களின் விசாவை ரத்து செய்துள்ளது. இதனால், தற்போது தன் 2 குழந்தைகளின் இதய பிரச்னையின் சிகிச்சைக்காக இந்தியா வந்துள்ள ஒரு பாகிஸ்தானிய தந்தை தவித்து நிற்கிறார். டெல்லியில் அடுத்த வாரம் ஆப்ரேஷன் நடக்க இருக்கும் நிலையில், அவர்களை வெளியேறும்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் யாராவது கொஞ்சம் தயவு பண்ணுங்க என கெஞ்சுகிறார். யாரோ செய்த தவறுக்கு, யாரோ தண்டனை அனுபவிப்பதா?
Sorry, no posts matched your criteria.