news

News March 17, 2024

அதிமுகவில் இணைந்தார் நாச்சியாள் சுகந்தி

image

இபிஎஸ் முன்னிலையில் தமிழ்த்தேசிய ஆதரவாளர் என்று தன்னை காட்டிக் கொண்டு நாம் தமிழருக்கு ஆதரவாக செயல்பட்ட நாச்சியாள் சுகந்தி அதிமுகவில் தன்னை இணைந்துக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அமமுகவில் இருந்து விலகிய பலரும் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். நாச்சியாள் சுகந்தி-க்கு மகளிர் அணியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என்றும் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இவர் பெயர் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.

News March 17, 2024

கூலிங் கிளாஸ்களை தேர்வு செய்வது எப்படி?

image

வெயில் காலத்தில் கூலிங் கிளாஸ் அணிவது கண்களுக்கு நல்லதாகும். தரம் குறைந்த கிளாஸ்களை அணிவது கண்களுக்கு எதிர்வினையை ஏற்படுத்தும். இதனால் தரமான கூலிங் கிளாஸ்களை தேர்வு செய்து அணிவது அவசியம். அதை கீழ்காணும் வழியில் தேர்வு செய்யலாம் *புற ஊதா கதிர்களை தடுப்பது *வண்ணப்பூச்சு குறைந்தது *கண்களை முழுதும் மறைக்கும் வகையில் பெரியது *போலாரைஸ்டு லென்சுகளை கொண்டது

News March 17, 2024

புஷ்பா படப்பிடிப்பில் அசெளகரியமாக இருந்தது

image

புஷ்பா படத்தின் “ஊ சொல்றியா மாமா” பாடல் படப்பிடிப்பில் அசெளகரியத்தை உணர்ந்ததாக சமந்தா தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “பேமிலி மேன் 2 சீரிஸில் நடித்தபோது இருந்த அசெளகரியத்தை, ‘ஊ சொல்றியா’ பாடல் படப்பிடிப்பிலும் உணர்ந்தேன். நடிகராக என்ன செய்யலாம் என்பதை ஆராயவே, அதில் நடிக்க முடிவெடுத்தேன். எப்போதும் எனது பாலினம் மீது அசெளகரியத்தையே உணர்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

News March 17, 2024

திருப்பதி செல்வோர் கவனத்திற்கு

image

தேர்தல் விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு திருப்பதியில் தங்குவதற்கும், தரிசனம் செய்வதற்கும் பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புரோட்டோக்கால் விதிகளின் படியே உயரதிகாரிகளுக்கு தாங்கும் வசதி அளிக்கப்படும். தேர்தல் முடியும் வரை இந்த விதியில் மாற்றமில்லை. எனவே திருப்பதி வரும் பக்தர்கள், விஐபிக்கள் விதிகளை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 17, 2024

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய மார்க்சிஸ்ட்

image

மக்களவைத் தேர்தல் தேதி நேற்று வெளியான நிலையில், நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் தவிர்த்து அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. மதுரை மார்க்சிஸ்ட் கம்யூ., எம்.பியாக உள்ள சு.வெங்கடேசனுக்கு இந்த முறையும் மதுரை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று அவர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

News March 17, 2024

ஏப்.19, ஜூன் 4இல் டாஸ்மாக் இயங்காது

image

தமிழகத்தில் ஏப்.19ம் தேதி வாக்குப்பதிவும், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இதனையொட்டி, இந்த இரண்டு நாட்களிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். இதன்படி, அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மற்றும் பார்கள் இயங்கக்கூடாது. அத்துமீறி, கள்ளத்தனமாக மது விற்பனை செய்தாலோ, டாஸ்மாக் கடைகளை திறந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

News March 17, 2024

வாக்காளர்களுக்கு ஜெயம் ரவி வேண்டுகோள்

image

நாடாளுமன்றத் தேர்தலில் சரியான வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி நடிகர் ஜெயம் ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள
சமூகவலைதள பதிவில், “வரவிருக்கும் தேர்தலில் வாக்களிக்கும்படி அனைத்து இளம் வாக்காளர்களையும் கேட்டு கொள்கிறேன். தேர்தலில் சரியான வேட்பாளர்களுக்கு வாக்களித்து, அடிப்படை ஜனநாயக உரிமைகளை பயன்படுத்துங்கள்” எனக் கேட்டு கொண்டுள்ளார்.

News March 17, 2024

ஆந்திர சட்டசபைத் தேர்தலில் ரோஜா மீண்டும் போட்டி

image

ஆந்திர சட்டசபை தேர்தலில், நகரி தொகுதியில் அமைச்சரும், நடிகையுமான ரோஜா மீண்டும் போட்டியிடுகிறார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி, கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஜெகன்மோகன் ரெட்டி புலிவேந்துலா தொகுதியில் களம் இறங்குகிறார். நகரி தொகுதியில் ரோஜா 3வது முறையாக போட்டியிடுகிறார்.

News March 17, 2024

ஓட்டல் தோசையில் கிடந்த கரப்பான்பூச்சிகள்

image

டெல்லியில் உள்ள ஓட்டலில் வழங்கப்பட்ட தோசையில் 8 கரப்பான்பூச்சிகள் கிடந்தது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெண் ஒருவர் தோசை வாங்கியபோது, அதில் குட்டி குட்டியாக 8 கரப்பான்பூச்சிகள் கிடந்துள்ளன. இதை வீடியோவாக அவர் செல்போனில் பதிவு செய்ததை கண்ட ஊழியர்கள், தோசையை எடுத்து சென்றுவிட்டனர். வீடியோவை இணையதளத்தில் பெண் வெளியிட்டதுடன், காவல்துறையிலும் புகார் அளிக்கவே, விசாரணை நடக்கிறது.

News March 17, 2024

”தமிழ்நாட்டை 2ஆக பிரித்து தனி மாநிலம்”

image

தமிழ்நாட்டிலிருந்து கொங்கு மண்டலத்தை தனியாக பிரித்து தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என சில நாட்களுக்கு முன் விவாதம் கிளம்பியது. தற்போது அதேபோல், தென் மாவட்ட மக்களின் கோரிக்கை புறக்கணிக்கப்படுவதால், மதுரையை தலைமையிடமாக (திருச்சி-குமரி வரை) தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தி தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணனின் பதிவு புதிய சர்ச்சை கிளப்பியிருக்கிறது.

error: Content is protected !!