India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கை முன்பு அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்களை இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார். முன்னதாக பேரவையில் எடப்பாடி பழனிசாமியை பேச அனுமதிக்க வலியுறுத்தி அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களது இருக்கை அருகே அமளியில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதால் அவரது இருக்கை அருகே சென்று முழக்கமிட்டனர்.
எடப்பாடி பழனிசாமியை பேச அனுமதிக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், 3 அமைச்சர்கள் இன்று பதிலுரை வழங்கவிருப்பதால் இபிஎஸ்ஸை பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் அப்பாவு கூறினார். ஆனாலும், துணை முதல்வர் உதயநிதி பேசியபோது தொடர் அமளியில் ஈடுபட்டதால் அதிமுக எம்.எல்.ஏக்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
ஹாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகர் கிளைவ் ரெவில் (94) உடல் நலக்குறைவால் காலமானார். நியூசிலாந்தைச் சேர்ந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக Dementia (மறதி நோய்) நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தி அனிமேஷன் சீரிஸ் மற்றும் ஸ்டார் வார்ஸ் கதாபாத்திரங்களில் தனது காந்த குரலால் உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்ற கிளைவ் ரெவில் குரல் ஓய்ந்த நிலையில், பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
எப்படியாவது IPL போட்டியை நேரில் பார்க்கணும் என்ற ரசிகர்களின் ஆசையை சில விஷமிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கொல்கத்தாவை சேர்ந்த 32 வயது பெண், இன்ஸ்டாவில் IPL டிக்கெட் விளம்பரத்தை பார்க்கிறார். பின் அவர்களை போனில் தொடர்பு கொள்ள, மெயில் மூலம் டிக்கெட் கன்ஃபார்ம் ஆனதாக கூறி, ₹12,000 கேட்கிறார்கள். யோசிக்காமல் ஆன்லைனில் பணத்தை அனுப்ப, பின்னரே ஏமாந்ததை அவர் உணர்ந்துள்ளார் . உஷாரா இருங்க!
சென்னையில் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 25ஆம் தேதி 22 கேரட் ஒரு சவரன் ₹65,480க்கு விற்பனையானது. பின்னர், 26ஆம் தேதி சவரனுக்கு 80 ரூபாயும், நேற்று 320 ரூபாயும் அதிகரித்தது. இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கிய உடனே சவரனுக்கு ₹840 உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் கடந்த 3 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,240 உயர்ந்து ₹66,720க்கு விற்பனையாகிறது.
இஸ்லாமியர்கள் ரம்ஜானை கொண்டாட உள்ள நிலையில் அதிரடி உத்தரவை உ.பி. அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி சாலைகளில் நமாஸ் செய்வதற்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளது. மீறுவோர் மீது கிரிமினல் வழக்கு பதிந்து, பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளது. மதக்குருமார்கள் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 28) சவரனுக்கு ₹840 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,340க்கும், சவரன் ₹66,720க்கும் விற்பனையாகிறது. அதேபோல வெள்ளி விலையும் கிராமுக்கு ₹3 உயர்ந்துள்ளது. இதனால் 1 கிராம் ₹114க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,14,000க்கும் விற்பனையாகிறது. கடந்த வார இறுதியில் தங்கம் விலை சரிந்த நிலையில், இந்த வாரம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கும் வகையில், CA தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்து இந்திய தணிக்கை துறை அறிவித்துள்ளது. அதன்படி, இதுவரை ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட்டு வந்த CA இறுதித்தேர்வு, Intermediate, Foundation தேர்வுகளும் இனி ஆண்டுக்கு 3 முறை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இறுதித்தேர்வு ஜனவரி, மே, செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் GAS சிலிண்டர் வாடிக்கையாளர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் விரல் ரேகையை பதிவு செய்யவில்லை எனில் சிலிண்டர் கிடைக்குமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. மானிய விலை சிலிண்டர் பெறும் பயனாளிகளின் உண்மைத் தன்மை சரிபார்ப்பு பணிகள் நடக்கிறது. இதற்கு சிலிண்டர் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, அவர் GAS ஏஜென்சிக்கு சென்று, விரல் ரேகை பதிய வேண்டும். இப்பணியை, வரும் 31ம் தேதிக்குள் முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தவெகவின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறும் நிலையில், சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ளது. அதில், பொதுச்செயலாளர் ஆனந்த்தை வருங்கால CM என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்த போஸ்டருக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தவெகவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன், நேரடியாக அரசியல் செய்யுமாறும், முதுகில் குத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.