India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 14 தீவிரவாதிகள் குறித்த தகவலை புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ளன. 20-40 வயதுடைய இவர்கள் பாகிஸ்தானின் நிதியுதவியுடன் J&K-ல் தங்கி, தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும், இவர்கள் லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதின் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்றும் புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
கோவையில் தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு நடைபெறும் இடம் அருகே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து பிரதான சாலை வரை ரோட் ஷோ நடத்திய விஜய்-க்கு கட்சி நிர்வாகிகள் தாரை தப்பட்டை கிழிய வரவேற்பு கொடுத்தனர். பின்னர், அவர் கருத்தரங்கு மேடைக்கு சென்றார். அப்போது, திடீரென்று கருத்தரங்கு நடக்கும் இடம் அருகே திடீரென்று தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து, உடனே அணைக்கப்பட்டது.
பிரபல இயக்குநர், நடிகர் நாகேந்திரன் காலமானார். இவர் சரோஜா போன்ற படங்களில் நடித்துள்ளார். விமல் நடிப்பில் 2015-ல் வெளிவந்த ‘காவல்’ படத்தின் மூலம் நாகேந்திரன் இயக்குநராக அறிமுகமாகினார். இவர் தற்போது மரணமடைந்துள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ளார். நாகேந்திரனின் மறைவிற்கு திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். #RIP.
ஏசி, மின்விசிறி பயன்பாடு அதிகரித்திருப்பதால் இந்த கோடை காலத்தில் தமிழகத்தில் முதல்முறையாக மின்சாரத் தேவை உச்சம் தொட்டுள்ளது. கடந்த மே 2-ம் தேதி மின்சாரத் தேவை 20,830 மெகா வாட்டாக வரலாற்று உச்சம் தொட்டது. இதையடுத்து கடந்த வியாழக்கிழமை 20,148 மெகா வாட்டாக உச்சம் தொட்டுள்ளது. சென்னையின் தேவையும் 3,899 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. இது வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முத்தம் கொடுத்து பாராட்ட வேண்டும் என்று ஆசையாக இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் பேசியிருக்கிறார். 4 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகள் செய்திருக்கும் அவர், அகில இந்திய அளவில் கொண்டாடப்படுகிறார் என்றும் துரைமுருகன் பாராட்டினார். தான் வளர்த்த பிள்ளை என்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து துரைமுருகன் உணர்ச்சி பொங்க பேசினார்.
ஆண்ட்ராய்டு யுகத்தில், காலை முதல் மாலை வரை எல்லாமே ஸ்மார்ட் போன்தான். ஆனால், பலரும் தங்களுக்கு தெரியாமலேயே போனுக்கு அடிமையாகி இருக்கின்றனர். போனை கொஞ்ச நேரம் வேறு எங்காவது வைத்து விட்டால் பயம், பதற்றம், டென்ஷன் போன்றவை ஏற்பட்டு தடுமாறுவார்கள். இதன் பெயர்தான் Nomophobia. அதாவது, No-mobile-phobia. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் நமக்கு மத்தியிலேயே இருப்பார்கள். நீங்க எவ்வளவு நேரம் போன் யூஸ் பண்றீங்க?
டெய்லி பலமணி நேரம் போன்களுடனே இருக்கிறோம். ஒரு நாளில் எவ்வளவு மணி நேரம் போன் யூஸ் பண்றோம்? எந்த ஆப்பை அதிகமாக யூஸ் பண்றோம் என்பதை ஈசியா போனிலேயே தெரிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு போன்களில் settings-> Digital Wellbeing option சென்று பாருங்கள். உங்களை பற்றி தெரிந்து கொள்வீர்கள். ஐபோன்களில் Screen Time app and the Attentive app என்ற பெயரில் இருக்கிறது. நேரத்தை எவ்வளவு வீணாக்குகிறோம் என புரியும்!!
வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி இன்று மாலை 4.28 மணிக்கு ராகு – கேது பெயர்ச்சி நடைபெற்றது. 18 மாதங்களுக்கு ஒருமுறை இடம்பெயரும் ராகு பகவான், மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்பெயர்ந்திருப்பதாக திருநாகேஸ்வரம் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல, கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி அடைந்துள்ளார்.
போப் பிரான்சிஸ் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. உடல்நலக்குறைவால் போப் 21-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து தேவாலயத்தில் அவரின் உடல் 3 நாள்கள் வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். பின்னர் இன்று வாடிகனுக்கு வெளியே உள்ள Santa Maria Maggiore basilica தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதில் கத்தோலிக்க மதத் தலைவர்கள், உலகத் தலைவர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
தஞ்சை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று IMD தெரிவித்துள்ளது. இதன்படி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.