news

News March 28, 2025

10 இடங்களில் சதமடித்த வெயில்.. இன்றும் ஜாக்கிரதை!

image

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. அடுத்த 10 நாள்களுக்கு இதே நிலைதான் நீடிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். நேற்று சென்னை உட்பட 10 இடங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி பதிவானது. ஈரோடு, கரூர், சேலம், திருப்பத்தூர், திருச்சி, திருத்தணி ஆகிய இடங்களிலும் 100 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது. பகலில் தேவையின்றி வெளியே வரவேண்டாம் மக்களே..!

News March 28, 2025

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இன்று (மார்ச் 28) முதல் அடுத்த மாதம் (ஏப்.15) வரை நடைபெறவிருக்கும் இத்தேர்வை 4,46,411 பள்ளி மாணவர்கள், 4,40,465 மாணவிகள், 25,888 தனித்தேர்வர்கள் மற்றும் சிறைவாசிகள் 272 பேர் என மொத்தம் 9,13,036 பேர் எழுதவுள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 4,113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10 முதல் பிற்பகல் 1.15 வரை தேர்வு நடைபெறவுள்ளது. ALL THE BEST

News March 28, 2025

இங்கிலாந்து அரசர் 3ஆம் சார்லஸ் ஹாஸ்பிடலில் அனுமதி

image

இங்கிலாந்து அரசர் 3ஆம் சார்லஸ் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 76 வயதான அவர் சில காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். சிகிச்சையின் பக்கவிளைவுகள் காரணமாக அவர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 2022ல் தனது தாயார் 2ஆம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து, இங்கிலாந்து அரசரானார் சார்லஸ்.

News March 28, 2025

IPL 2025: RCBயை பழித்தீர்க்குமா CSK..?

image

IPL தொடரில் இன்று, CSK – RCB அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் இரவு 7:30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. கடந்த ஆண்டு Playoff வாய்ப்பைக் கெடுத்த RCBயை பழிதீர்க்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முதல் போட்டியில் இரு அணிகளுமே பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டதால், போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது. யாரு ஜெயிப்பா என நினைக்கிறீங்க?

News March 28, 2025

கொடநாடு வழக்கு: இபிஎஸ்-ஐ விசாரிக்க திட்டம்?

image

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க சிபிசிஐடி போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 500 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. நேற்று ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனிடம் விசாரணை நடைபெற்றது. கொடநாடு பங்களாவில் கடந்த 2017ல் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை, கடந்த 2022ல் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

News March 28, 2025

தினமும் 15-16 மணி நேரம் வேலை.. மரணம்!

image

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் துணை CEO ஹான் ஜாங் ஜி (63), அதீத வேலை பிரஷரால் ஏற்பட்ட மாரடைப்பாலே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தினமும் 15- 16 மணி நேரம் வேலை செய்ததே அவருக்கு தீவிர உடல்நலக் குறைபாட்டை ஏற்படுத்தியுள்ளது. அதிக நேரம் மொபைல், லேப்டாப் ஸ்கிரீன் பார்த்ததன் காரணமாகவே, கடந்த 2023ல் அவருக்கு நரம்பியல் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

News March 28, 2025

எல்பிஜி லாரி வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தை தோல்வி

image

தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. பழைய முறையில் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

News March 28, 2025

செவ்வாய் தோஷம் நீங்க…

image

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுகிறது என கவலையில் மனம் வாடுவோர் செவ்வாய்க்கிழமையில் வரும் சதுர்த்தி திதி நாளில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயிலின் தீர்த்தத்தில் நீராடி, ஆனைமுகனுக்கு அருகம்புல் மாலை சாற்றி, 32 தீபங்களை ஏற்றி, முக்குறுணி மோதகம் படைத்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும். குறிப்பாக இந்த வழிபாடு செய்த கையோடு 5 ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் செவ்வாய் தோஷம் விலகும் என ஐதீகம்.

News March 28, 2025

பிளே ஆப் செல்லும் அணிகள் எவை? இர்பான் கணிப்பு

image

ஐ.பி.எல்.2025 ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்னும் சில வாரங்களில் இதற்கான விடை நமக்கு கிடைத்துவிடும்.

News March 28, 2025

தினமும் காலையில் 2 முட்டை சாப்பிடுங்க

image

முட்டையில் 13 வகையான வைட்டமின்கள், தாதுக்கள், ஒமேகா-3 போன்றவை நிறைந்துள்ளது. அதனால் எந்த சந்தேகமும் இல்லாமல் தினசரி காலை 2 முட்டையை சாப்பிடுவது நல்லது. முட்டையின் மஞ்சள் கரு நல்ல கண்பார்வையை தரும். மூளை செயல்பாட்டை மேம்படுத்துவது, உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது, குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவது என பல்வேறு நன்மைகளை தரும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும்.

error: Content is protected !!