news

News April 26, 2025

சிந்து நதி நீரை தடுப்பது நியாயமா? சீமான் கேள்வி

image

பயங்கரவாதச் செயலுக்குப் பின்னால் பாகிஸ்தான் இருக்குமேயானால் அவர்களுடன் நேரடியாக மோத வேண்டும், அவற்றை விடுத்து 30 கோடி பாக். மக்களின் குடிநீர், பாசன வசதிகளுக்காக உள்ள சிந்து நதி நீரைத் தடுப்பது எவ்வகையில் நியாயமாகும்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அப்பாவி மக்களைக் கொல்லும் பயங்கரவாதிகளுக்கும், பாஜக அரசின் இந்த செயலுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்? எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

News April 26, 2025

முட்டை, மீன்கள் விலை அதிகரிப்பு

image

மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்வதில்லை. தற்போது நாட்டுப் படகில் மட்டுமே மீன்பிடித்து வரப்படுகிறது. இதனால் மீன்களில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஷீலா மீன் ஒரு கிலோ 1500 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஊழி, பாறை மீன்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை 5 காசு உயர்ந்து ₹4.10ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News April 26, 2025

பொன்முடியை மறைமுகமாக அட்டாக் செய்த கனிமொழி

image

அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பெண்களை மோசமாக பேசியது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், பெண்களை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரராக இருக்க மாட்டார் என்று பொன்முடியை கனிமொழி மறைமுகமாக அட்டாக் செய்துள்ளார். மதவாதிகள் சிலர் தாங்கள் உருவாக்கிய கட்டமைப்பை உடைக்கக் கூடாது என நினைக்கின்றனர் எனக் கூறிய அவர், தவறான அரசியல் மூலம் தமிழ்நாட்டில் சாதி என்பது மெல்ல நுழைகிறது; அதை தவிர்க்க வேண்டும் என்றார்.

News April 26, 2025

ராகு, கேது பெயர்ச்சி: வீட்டில் விளக்கு ஏற்றுங்கள்

image

இன்று மாலை ராகு பகவான், மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, மேஷம், மிதுனம், கன்னி, தனுசு, மீனம், துலாம் ராசிக்காரர்கள், வீட்டின் தென்மேற்கு மூலையில், நல்லெண்ணை விளக்கு ஏற்றி துர்க்கை அம்மனை வழிபாடு செய்யுங்கள். குறிப்பாக, நாளை காலை 7:30 – 8:30 அல்லது மாலை 4:30 – 6:00 விளக்கு ஏற்றினால் பல நன்மைகள் கிடைக்கும்.

News April 26, 2025

IPL: PBKS முதலில் பேட்டிங்

image

இன்றைய ஐபிஎல் போட்டியில் KKR, PBKS அணிகள் மோதவுள்ளன. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், டாஸ் வென்ற PBKS கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கும் PBKS அணி, இப்போட்டியில் வெற்றி பெற்று முதல் நான்கு இடங்களை பிடிக்கும் முனைப்போடு களம் இறங்குகிறது.

News April 26, 2025

9,970 காலியிடங்கள்… அப்ளை செய்துவிட்டீர்களா?

image

ரயில்வேயில் துணை ஓட்டுநராக (Assistant Loco Pilot) பணியாற்ற விரும்புகிறீர்களா? இந்த பணிக்கு 9,970 காலி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலையில் சேர SSLC தேர்ச்சி பெற்று, ITI முடித்திருக்க வேண்டும். இன்ஜினியரிங்கில் Diploma, பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆரம்ப சம்பளம்: ரூ.19,900. வயது வரம்பு 30. மே.11க்குள் <>RRB<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News April 26, 2025

பாகிஸ்தானியர்கள் விசா காலக்கெடு

image

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் விசா காலக்கெடு குறித்து முக்கிய உத்தரவு வெளியாகியுள்ளது. SAARC விசா உள்ளவர்கள் இன்று (ஏப்.26) நள்ளிரவுக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். வணிக, பத்திரிகையாளர், மாணவர் உள்ளிட்ட விசா உள்ளவர்கள் நாளைக்குள்ளும், மருத்துவ விசா உள்ளவர்கள் வருகிற 29-க்குள் வெளியேற வேண்டும். இனி எந்த புதிய விசாவும் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படாது.

News April 26, 2025

கோவையில் புயல்: ஆதவ்

image

மக்கள் ஆட்சியை கொண்டுவர ஒரு ஜனநாயகன் தேவைப்படுகிறான்; அதற்காக ஒரு புயல் இன்று கோவையை நெருங்கியுள்ளது என்று விஜய்யை சுட்டிக்காட்டி ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். தமிழகத்தில் அரசியல் மாற்றம் இளைஞர்களால் உருவானது. தற்போது விஜய் செல்லும் இடமெல்லாம் இளைஞர்கள் தொடருகிறார்கள் என்பதால் 2026-இல் தவெக ஆட்சியைப் பிடிக்கும். அதற்கு இளம்பெண்கள் படை உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

News April 26, 2025

வருமா ‘வா வாத்தியார்’ ?

image

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படம் எப்போது வெளிவரும் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. இன்னும் சில நாள் கார்த்தியின் கால்ஷீட் வேண்டும் என இயக்குநர் நலன் குமாரசாமி கேட்கிறாராம். ஆனால், சர்தார் 2-ல் பிஸியாக இருக்கும் கார்த்தி, இப்போது கால்ஷீட் தர முடியாது என அடம் பிடிக்கிறாராம். இருவரும் மாறி மாறி இழுத்தடிப்பதால், படம் எப்போது வெளிவரும் என்ற அறிகுறியே இல்லாமல் இருக்கிறது.

News April 26, 2025

பாகிஸ்தானுடன் இனி விளையாடக்கூடாது : கங்குலி

image

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட்டை இந்தியா முற்றிலும் துண்டிக்க வேண்டும் என வலியுறுத்திய சவுரவ் கங்குலி, ஐசிசி மற்றும் ஆசிய போட்டிகளில் கூட பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் கங்குலி தெரிவித்தார். முன்னதாக, எந்தவொரு போட்டியிலும் பாகிஸ்தானுடன் இந்தியா மோதப் போவதில்லை என பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.

error: Content is protected !!