India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

NDA-வில் மீண்டும் OPS-ஐ இணைக்க தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. TTV தினகரனை தொடர்ந்து, OPS-யும் கூட்டணியில் சேர்க்க EPS இசைவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் எதிரொலியாக OPS உடன் TTV தினகரன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மதுரையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த TTV தினகரன், OPS நிச்சயம் தங்கள் கூட்டணிக்கு வருவார்; அவர் வேறு எங்கும் செல்ல மாட்டார் என்றார். உங்கள் கருத்து என்ன?

குடியரசு தினம் என்பதால் நேற்று டாஸ்மாக் விடுமுறை ஆகும். இதனால் அதற்கு முந்தைய நாளில் (ஜன.25) மதுபான விற்பனை சூடுபிடித்துள்ளது. இதன்படி, அன்றைய தினம் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ₹220 கோடிக்கு மதுபானம் விற்பனை ஆகியுள்ளது. கடந்த ஆண்டு ஜன.25 அன்று ₹200 கோடிக்கு மது விற்பனை ஆகியிருந்தது. முன்னதாக, பொங்கல் விடுமுறையில் ₹850 கோடிக்கு டாஸ்மாக் வருமானம் ஈட்டியிருந்தது.

‘ஜன நாயகன்’ விவகாரத்தில் CBFC-க்கு நெருக்கடி கொடுக்க KVN நிறுவனம் முயன்றதே பிரச்னைக்கு காரணம் என நடிகரும், CBFC Ex உறுப்பினருமான SV சேகர் தெரிவித்துள்ளார். <<18971849>>ஐகோர்ட் தீர்ப்பு தொடர்பாக<<>> பேசிய அவர், CBFC-ன் பரிந்துரைகளை உரிய காலத்திற்குள் செய்யாமல், கடைசி நேரத்தில் கோர்ட்டுக்கு சென்றது தவறு என்றார். மேலும், ஜன நாயகன் பட விவகாரத்தில் அரசியல் அனுதாபம் தேடவே விஜய் அமைதி காப்பதாகவும் சாடியுள்ளார்.

பெண் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக மத்திய அரசு சுகன்யா சம்ரிதி யோஜனா(SSY) என்ற திட்டத்தை வழங்குகிறது. மகள் பிறந்ததில் இருந்து மாதாமாதம் ₹2,000 முதலீடு செய்தால் அவருக்கு 21 வயதாகும் போது, 8.2% வட்டியுடன் கிட்டத்தட்ட ₹11 லட்சம் கிடைக்கும். மகளுக்கு 10 வயதாவதற்குள், இத்திட்டத்தில் சேரவேண்டும். வசதிக்கேற்ப ₹250- ₹1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். போஸ்ட் ஆபீஸ் மூலம் இந்த திட்டத்தில் சேரலாம். SHARE IT.

2006 – 2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி வருமானத்துக்கு அதிகமாக ₹2.35 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியது. இதனிடையே, ED-யும் விசாரணை நடத்தி, இதுதொடர்பாக விளக்கமளிக்க ஐ.பெரியசாமி & அவரது குடும்பத்தாருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை SC தள்ளுபடி செய்துள்ளது.

‘ஜன நாயகன்’ வழக்கில் இன்று <<18972029>>ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பால்<<>> பட ரிலீஸ் மேலும் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால், KVN நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு, CBFC-ஐ நாடினால் உடனடியாக தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத சினிமா தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார். CBFC பரிந்துரைத்த 14 CUT-ஐ செய்துவிட்டு மீண்டும் சமர்ப்பித்து கோரிக்கையாக வைத்தால் உடனடி தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாம்.

மாலத்தீவு குறித்த PM மோடியின் பதிவை Grok AI தவறாக மொழிபெயர்த்ததால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. இந்தியாவுக்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கு, மோடி அவர்களது மொழியிலேயே X-ல் நன்றி தெரிவித்திருந்தார். அதில் இரு நாடுகளின் நன்மைக்காக இணைந்து செயல்படுவோம் என அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதை இந்தியாவுக்கு எதிராக மாலத்தீவு செயல்படுவதாக Grok மொழிபெயர்த்துள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக, சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னையில் CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாட்டில் 14 வயதுக்கு உட்பட்ட 3,38,649 பெண்களுக்கு, முன்கூட்டியே அரசின் சார்பில் இலவசமாக HPV தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தனியார் ஹாஸ்பிடலில் இந்த ஊசியை இருமுறை செலுத்த ₹28,000 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஏர்போர்ட்டின் 2-வது முனையத்தில் உள்ள கேண்டீன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. அங்கு நிலவும், பதற்றம் காரணமாக விமானங்கள் இயக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு பயணிகள் ஏர்போர்ட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, நாளை (ஜன.28) திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதனால், அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. அதேபோல், தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி, கரூர் வட்டத்திற்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.