India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

▶மும்பை இந்தியன்ஸ் – 138 போட்டிகள்,
▶சென்னை சூப்பர் கிங்ஸ் – 131 போட்டிகள்,
▶கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 119 போட்டிகள்,
▶ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 114 போட்டிகள்,
▶டெல்லி கேப்பிட்டல்ஸ் – 105 போட்டிகள்,
▶பஞ்சாப் கிங்ஸ் – 104 போட்டிகள்,
▶ராஜஸ்தான் ராயல்ஸ் – 101 போட்டிகள்,
▶சன்ரைசர்ஸ் ஐதராபாத் – 78 போட்டிகள்

அதிமுகவின் கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் ஓபிஎஸ் இரட்டை இலை, சின்னத்தை பயன்படுத்தி வந்தார். இதற்கு எதிராக இபிஎஸ் தரப்பு தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இதனை உறுதி செய்த தமிழிசை, மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் போட்டியிடவில்லை, தமிழகத்தில் இருந்து போட்டியிட உள்ளதாக கூறினார். மேலும், எந்த தொகுதி என்பதை கட்சித் தலைமை அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆர்யா நடிக்கும் ‘மிஸ்டர் X’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படமானது, அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. படத்தில் உள்ள கதாபாத்திரத்துக்கு ஏற்ற உடலமைப்பை பெற, நடிகர் ஆர்யா கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். படத்தின் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் குழந்தை உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக 6 பேர் ஜீப்பில் சென்றபோது, அதிக பாரத்துடன் வந்த டிராக்டர் ஜீப்பின் மீது மோதியது. இதில் 9 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்களவைத் தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட உள்ளது. அவை, 1. வடசென்னை 2. தென்சென்னை 3. மத்திய சென்னை 4. ஸ்ரீபெரும்புதூர் 5. காஞ்சிபுரம் (தனி) 6. அரக்கோணம் 7. வேலூர் 8. தருமபுரி 9. திருவண்ணாமலை 10. கள்ளக்குறிச்சி 11. சேலம் 12. நீலகிரி (தனி) 13. தஞ்சாவூர் 14. தூத்துக்குடி 15. தென்காசி (தனி) 16. தேனி 17. ஆரணி 18. கோவை 19. பொள்ளாச்சி 20. ஈரோடு 21. பெரம்பலூர் ஆகும்.

திருச்சியில் 23ம் தேதி முதல் இபிஎஸ் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறார். அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமகவை கொண்டுவரும் முயற்சி பெரும் சவாலாக இருக்கிறது. இதனால், எப்படியாவது 23ஆம் தேதிக்குள் கூட்டணியை இறுதி செய்து, தொகுதிப்பங்கீட்டை முடித்து, அதிமுக தலைமையிலான கூட்டணியை ஆதரித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தீவிர பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

திமுக – மதிமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிமுக 2 தொகுதிகளில் போட்டியிட விரும்பிய நிலையில், ஒரு தொகுதி தான் திமுக ஒதுக்கியது. இதனால், விரும்பிய தொகுதியை வழங்க வேண்டும் என மதிமுக பிடிவாதமாக கூறியது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் வசம் இருந்த திருச்சி தொகுதி, தற்போது மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது குறித்த தொகுதி ஒதுக்கீடு நிறைவு பெற்றுள்ளது. தமிழகத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இன்னும் கூட்டணியே இறுதி செய்யாத நிலையில், திமுக தொகுதி ஒதுக்கீட்டை நிறைவு செய்துள்ளது. அதன்படி திமுக – 21, காங்., – 10, விசிக – 2, சிபிஎம் – 2, சிபிஐ – 2, மதிமுக – 1, ஐயூஎம்எல் – 1, கொமதேக -1 தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

திமுக கைவசம் இருந்த 2 இடங்களில் போட்டியிடவில்லை. குறிப்பாக திமுகவின் கோட்டை என்று கருத்தப்பட்ட நெல்லை மற்றும் கடலூரில் பாஜகவின் ஆதிக்கம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால், தேனிக்கு பதில் நெல்லை, திருச்சிக்கு பதில் மயிலாடுதுறை, ஆரணிக்கு பதில் கடலூர் ஆகிய 3 இடங்கள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் கார்த்தி, கரூரில் ஜோதிமணி, மயிலாடுதுறையில் திருநாவுக்கரசர் களமிறங்க வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.