India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இன்று (ஜன.29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

நடிகை அனன்யா தனது லேட்டஸ்ட் போட்டோஸை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதில் அவர், கார்குழல் கவிதையாக, வளர்பிறை நிலவாக, மழைக்காலத்தில் கூத்தாடும் மின்னலாக, பட்டாம் பூச்சிகள் தேடும் பூவாக ஒளிர்கிறார். அவரது பார்வையில் ஓவியமும் கரைந்தோடி காவியமாகுமோ. இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.

முறையான ஆவணங்களை கமிட்டியிடம் சமர்ப்பித்தாலே ’ஜன நாயகன்’ படத்துக்கு தேவையான சான்றிதழ் கிடைக்கும் என விஜயதாரணி கூறியுள்ளார். வேண்டுமென்றே பாஜக மீது பழி சொல்வதாக கூறிய அவர், தேவையற்ற அரசியல் செய்வதை கைவிட வேண்டும் என்றார். அப்படி அரசியல் செய்துகொண்டே இருந்தால் படம் வராமல் போய்விடும் எனவும் விஜய் தனித்து போட்டியிவதுதான் தங்களது விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியுடன் கனிமொழி நடத்திய பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில், கடந்த முறை 25-ல் போட்டியிட்டு 18-ல் வென்ற காங்கிரஸ் இம்முறை 30 தொகுதிகள் + 1 ராஜ்யசபா சீட் கேட்டு உறுதியாக இருக்கிறதாம். ஒருவேளை கூடுதல் சீட்களை கொடுக்க திமுகவுக்கு உடன்பாடு இல்லையெனில் 25 தொகுதிகள் + 2 ராஜ்ய சபா சீட் கேட்பதாக தகவல் கசிந்துள்ளது.

விமானங்கள்/ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளான உடனேயே தீப்பிடித்து எரிந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம், அவற்றில் உள்ள எரிபொருள் தான். விமானங்கள் அதிவேகத்தில் பயணிக்கும்போது விபத்து ஏற்பட்டால், எரிபொருள் தொட்டிகள் உடைந்து எரிபொருள் வெளியேறுகிறது. அதேநேரம் என்ஜினில் உள்ள வெப்பம் அல்லது உராய்வு காரணமாக ஏற்படும் தீப்பொறிகள் உடனடியாக எரிபொருளில் பரவி தீப்பிடிக்கின்றன.

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

ஆக்ராவில் HR -ஆக பணிபுரிந்த பெண் மற்றொரு ஆணுடன் தொடர்பில் இருந்ததாக அலுவலகத்திலேயே துண்டு துண்டாக வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலி மின்கி சர்மா வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி ஏற்பட்ட சண்டையில் காதலன் வினய், மிக்னியை கொலை செய்து, உடலை யமுனை ஆற்றுப் பாலம் அருகே வீசியுள்ளார். உடலை கண்டெடுத்த போலீசார், CCTV உதவியுடன் வினயை கைது செய்தனர்.

USA மத்திய வங்கி(The Fed) கூட்டம் 2 நாள்களாக நடந்த நிலையில் இன்று (நள்ளிரவு 1 மணிக்கு மேல்) வரி விகித அறிவிப்பு வெளியாகிறது. இந்த வட்டி விகித முடிவு தான் தங்கத்தின் விலையை தீர்மானிக்கும். வட்டி விகிதம் குறைந்தால் தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருக்கும். அதேநேரம், டாலர் பலவீனமடைவதால் வட்டி விகிதம் உயரும் பட்சத்தில், விலை கணிசமாக உயரும். அதனால், இந்த அறிவிப்புக்காக இந்திய நாடே காத்துக் கிடக்கிறது.

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து பிப்.4, 5 ஆகிய தேதிகளில் ECI ஆலோசனை நடத்துகிறது. டெல்லியில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, தேர்தல் மேற்பார்வையாளராக பணியாற்றவுள்ள அதிகாரிகள் மற்றும் 5 மாநில உள்துறைச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ECI எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்துக்கு நடத்தப்படும் TET தகுதித் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 5% குறைக்கப்பட்டு 50% ஆகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு 15% குறைக்கப்பட்டு 40% ஆகவும் மாற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொது பிரிவினருக்கு 60% தொடரும். SHARE IT.
Sorry, no posts matched your criteria.