India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆரோக்கியமாக இருக்க நடைப்பயிற்சி அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், அதில் சில தவறுகள் செய்தால் அது இதயத்தைப் பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர். அதன்படி, *மிக வேகமாக நடப்பது *வார்ம் – அப் செய்யாமல் நடப்பது *குனிந்து நடப்பது *நடைபயிற்சிக்கு முன்/பின் தண்ணீர் அருந்தாமல் இருப்பது *அதிகமாக சாப்பிடுவது *மாசுபட்ட பகுதிகளில் நடப்பது ஆகிய தவறுகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மற்ற வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் தற்போது ₹17 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை, ₹19ஆக உயர்த்த RBI அனுமதி அளித்துள்ளது. பேலன்ஸ் செக் செய்வதற்கான கட்டணம் ₹6இல் இருந்து ₹7ஆக உயர்த்தப்படவுள்ளது. இதனால், ATM சேவையை குறைவாக கொண்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் பாதிக்கப்படுவர். இந்தக் கட்டண உயர்வு மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
TVK முதல் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறும் சூழலில், விஜய் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. திமுக, பாஜகவை விமர்சித்து வரும் விஜய், இன்றும் அதனை தொடருவார் என்கின்றனர். அதே நேரத்தில், அதிமுக, பாஜக கூட்டணியை நோக்கி நகர்வதாக கூறப்படும் சூழலில், இனி அதிமுகவையும் அட்டாக் செய்வார் எனக் கூறப்படுகிறது. பொருத்திருந்து பார்ப்போம்!. விஜய் என்ன பேசுவார் என நினைக்குறீங்க?
IPL ஜுரம் ரசிகர்களைத் தொற்றிக் கொண்டு விட்டது. டெய்லி மேட்ச் பார்ப்பதை வழக்கமாக கொள்ளும் பலர், ஒரு மேட்சின் முடிவை, ரொம்ப சீரியஸாகவும் எடுத்துக் கொள்கின்றனர். அது மூளையில் மகிழ்ச்சி, மன அழுத்த ஹார்மோன்களில் ஏற்ற இறக்கங்களை உண்டாக்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். தங்களின் டீம் தோற்றுவிட்டால், பலரும் மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர். இந்த வெற்றி தோல்விகள் தற்காலிகமானது தான் என்பதை உணருங்கள்.
தேமுதிகவின் அண்மைக்கால நகர்வுகள் DMK கூட்டணியில் சேருவதற்கான சமிக்ஞை என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ராஜ்யசபா சீட்டு விவகாரத்திலிருந்து அதிமுகவுடன் சற்று விலகியிருக்கும் பிரேமலதா விஜயகாந்த், ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை பாராட்டி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். குறிப்பாக நேற்று முன்தினம் சென்னையில் நடந்த என்கவுன்டரை பாராட்டியதைக் கூட, பலரும் கூட்டணி கணக்கு என்கின்றனர். உங்கள் கருத்து என்ன?
சட்டப்பேரவையில் நேற்று ADMK உறுப்பினர் ஜெயக்குமார், படிக்கட்டுகளில் பயணித்து பள்ளி மாணவர்கள் உயிரிழப்பதைத் தடுக்க பஸ்களில் தானியங்கி கதவுகள் அமைக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவசங்கர், சென்னையில் உள்ள பஸ்களுக்கு தானியங்கி கதவுகள் அமைக்கும் பணி முடிந்துள்ளதாகவும், தமிழகத்தின் மற்றப் பகுதிகளிலும் பஸ்களில் படிப்படியாக தானியங்கி கதவுகள் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
2021-22 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, பயணிகள் ரயில்களின் மூலம் ஒரு நாளைக்கு ₹400 கோடி வருமானம் ஈட்டப்படுகிறது. நார்மல் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் டிக்கெட்டுக்கு ₹40 – ₹50ம், பிரீமியம் ரயில்களின் மூலம் ₹500 வரையிலும் வருமானம் ஈட்டுகிறது. இதில் ஒரு பகுதி, டிக்கெட் ரத்து செய்வதன் மூலமும் கிடைக்கிறது. அதே நேரத்தில், எரிபொருள், சம்பளம், பராமரிப்பு போன்ற செலவுகளையும் இந்திய ரயில்வே தினமும் செய்கிறது.
தவெகவின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுவதையொட்டி, அக்கட்சி நிர்வாகிகள் குவிந்துள்ளனர். காலை 9 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில், விஜய் பங்கேற்கிறார். இதில், மத்திய – மாநில அரசுகளை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. தேர்தல் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கும் விஜய், சில முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட உள்ளதாக தவெக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
ஜம்மு – காஷ்மீரில் என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். கதுவா மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் 5 பேர் ஊடுருவியதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில், 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் 3 பாதுகாப்புப் படையினர் வீர மரணம் அடைந்தனர். காயமடைந்த 5 பேர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோகன்லால் நடிப்பில் பிருத்விராஜ் இயக்கிய, ‘L 2: எம்புரான்’, நாடு முழுவதும் முதல் நாளில் ₹ 21 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் மூலம், முதல் நாளில் அதிக வசூல் செய்த மலையாள படம் என்ற சாதனையை எம்புரான் படைத்துள்ளது. முன்னதாக, இச்சாதனையை பிருத்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ (₹ 8.95cr) பெற்றிருந்தது. நீங்க படம் பாத்துட்டீங்களா.. படம் எப்படி இருக்கு?
Sorry, no posts matched your criteria.