news

News April 27, 2025

அந்தரங்க உறுப்பை கடிக்கும் பெண்… அதிர்ச்சி

image

உ.பி.,யில் ஒரு கிராமத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட சண்டையால் கோபமடைந்த ஒரு பெண், விளையாடிக் கொண்டிருந்த அந்நபரின் 14 வயது மகனின் ஆணுறுப்பை கடித்துள்ளார். உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாலும், அவன் தடிமனான பேன்ட் அணிந்திருந்ததாலும் ஆணுறுப்பு காப்பாற்றப்பட்டுள்ளது. சண்டை போட்ட பலரின் அந்தரங்க உறுப்பை இப்பெண் கடித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

News April 27, 2025

CSK அணியில் என்ன பிரச்னை?

image

நடப்பு ஐபிஎல் தொடரின் மிக மோசமான அணியாக CSK இடம் பிடித்திருக்கிறது. இந்த தொடர் தோல்விக்கு பொறுப்பேற்பதாக பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியிருக்கிறார். ஏலத்தில் சரியான வீரர்களை எடுக்கவில்லை, வெற்றி பெறும் முனைப்பு இல்லை, தோனி ரிட்டையர் ஆக வேண்டும் என்று ரசிகர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். உண்மையில், CSK-வின் தோல்விக்கு எது காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

News April 26, 2025

போதை கடத்தல், பஹல்காம் தாக்குதல்… என்ன தொடர்பு?

image

சமீபத்தில் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் ₹21,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதற்கும், பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்புள்ளதாக என்ஐஏ SC-ல் தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருளை விற்று, அதில் கிடைக்கும் பணத்தில் தீவிரவாத நடவடிக்கைகளை லஷ்கர்-இ-தொய்பா அரங்கேற்றி வருகிறது, இதன் மூலம் இந்தியாவை பலவீனப்படுத்த தீவிரவாத அமைப்பு முயல்வதாகவும் என்ஐஏ கூறியுள்ளது.

News April 26, 2025

அட! இத தெரிஞ்சுக்காமலே செத்துட்டாரே…

image

இங்கிலாந்தை சேர்ந்த ஒருவருக்கு 3 ஆண்குறிகள் இருந்தது மருத்துவ உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அரிய பிறவி குறைபாடான இது ‘triphallia’ என அழைக்கப்படுகிறது. உடல்தானம் செய்த 78 வயது முதியவரின் உடலை உடற்கூராய்வு செய்ததில், அவருக்கு 3 ஆண்குறிகள் இருப்பது தெரிந்தது. ஒரு உறுப்பு மட்டும் வெளியிலும், மற்ற 2 உறுப்புகளும் விதைப்பையிலும் இருந்தன. இதை அறியாமலேயே, அந்நபர் வாழ்ந்துள்ளார் என்கின்றனர் மருத்துவர்கள்.

News April 26, 2025

இடுக்கண் வருங்கால் நகும் பாகிஸ்தானியர்

image

போர்ச் சூழலிலும், கையாலாகாத தங்கள் அரசைக் கிண்டலடித்து பாகிஸ்தானியர்கள் பதிவிட்டு வருகின்றனர். ‘இந்தியா குண்டு வீசுமா?’ என ஒருவர் கேட்க, ‘அந்த அளவுக்கு இந்தியா முட்டாளல்ல’ என்கிறார் மற்றொருவர். அதற்கு மூன்றாமவர், ‘இந்தியா முட்டாளாகவே இருக்கட்டும், அப்பத்தான் இந்த கொடுமை முடியும்’ என்கிறார். மேலே படங்களை புரட்டிப் பாருங்கள், பாகிஸ்தானியர்களின் நகைச்சுவைக்கும் பின் இருக்கும் சோகம் தெரியும்.

News April 26, 2025

வெயில்: பகல் 11 to 3 வெளியே வர வேண்டாம்

image

கோடை வெயில் வாட்டி வதைப்பதால், மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். நாளை இயல்பை விட வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம். எனவே, பிற்பகல் 11 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும். அதிகளவில் நீர், மோர், இளநீர் போன்றவற்றை குடிக்க வேண்டும்

News April 26, 2025

மழையால் IPL போட்டி பாதிப்பு

image

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் PBKS vs KKR ஐபிஎல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த PBKS அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. இந்த இமாலய இலக்கை துரத்த களமிறங்கிய KKR அணி, ஒரு ஓவருக்கு விக்கெட்டுகள் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால், மைதானம் முழுவதும் மூடப்பட்டது.

News April 26, 2025

தவெக என்றாலே எல்லோருக்கும் பயம்: புஸ்ஸி ஆனந்த்

image

தவெக என்றாலே அனைத்து கட்சியினருக்கும் பயம் வந்துவிட்டது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சூளுரைத்துள்ளார். வாக்குச்சாவடி முகவர் என்றால் சாதாரண ஆட்கள் அல்ல, கட்சி வெற்றிக்கு நீங்களே பொறுப்பு, 234 தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர் என கருதி அடுத்த 10 மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், வீடுவீடாக மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிய வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.

News April 26, 2025

மூத்த வரலாற்று ஆய்வாளர் MGS நாராயணன் காலமானார்

image

நாட்டின் மூத்த வரலாற்று ஆய்வாளர் MGS நாராயணன் (93) வயது மூப்பு காரணமாக காலமானார். கேரளாவை சேர்ந்த இவர், இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில்(ICHR) அமைப்பின் தலைவராக இருந்துள்ளார். கேரள வரலாறு, தமிழக வரலாறு, பண்டைய இந்திய வரலாறு, வரலாறு வரைவியல் முறையியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்த பங்களிப்பை செய்துள்ளதுடன், நூற்றுக்கணக்கான வரலாற்று ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

News April 26, 2025

CSK போட்டியை பார்க்க ரெடியா?

image

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 30-ம் தேதி CSK, PBKS அணிகள் மோதவுள்ளன. அதற்கான டிக்கெட் விற்பனை, நாளை (27.04.2025) காலை 10.15 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டிக்கு அடியும் பிடியுமாக நடந்த டிக்கெட் விற்பனை, CSK-வின் தொடர் தோல்வியால் மந்தமடைந்துள்ளது. இதனால், நாளைய டிக்கெட் விற்பனையில் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

error: Content is protected !!