India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். x தளத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், அன்புத் தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியுள்ளார். உற்சாகத்தோடும், துணிவுடனும், தன்னம்பிக்கையோடும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம் எனவும் பதிவிட்டுள்ளார்.
நாளை தொடங்கும் 10ஆம் வகுப்பு தேர்வை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை சில நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் செல்போன் கொண்டுசெல்ல தடை. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும். அதேபோல் ஒழுங்கீனச் செயல்களுக்கு பள்ளி நிர்வாகம் உடந்தையாக இருந்தால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. மொத்தமுள்ள 12,487 பள்ளிகளில் 8,86,970 மாணவர்கள், 25,841 தனித்தேர்வர்கள், 273 சிறைக்கைதிகள் என மொத்தம் 9,13,084 பேர் இந்த தேர்வினை எழுதவுள்ளனர். இதற்காக, 4,113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 48,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தனக்கு வந்த நோட்டீஸைப் பார்த்து உ.பி. அலிகாரில் ஜூஸ் கடை நடத்தி வரும் முகமது ரஹீஸ்-க்கு தூக்கிவாரி போட்டுள்ளது. ரூ.7.79 கோடி வருமான வரி நிலுவையைச் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்ததுதான் அந்த அதிர்ச்சிக்கு காரணம். தினமும் 400 ரூபாய் சம்பாதிக்கும் தன்னால், எப்படி கோடிக்கணக்கில் வரி செலுத்த முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வழக்கறிஞரை நாடி இருப்பதாகவும் ரஹீஸ் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று மாலை நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை புதிய உச்சமாக $3,091 அமெரிக்க டாலர்களை தொட்டது. இந்த விலையை மையப்படுத்தியே, இந்தியாவில் தங்க விலை நிர்ணயம் செய்யப்படுவதால், நாளை காலை ரூபாயின் மதிப்பிலும் தங்கம் விலை உயரக்கூடும். தங்க நகை வாங்கும் திட்டமுள்ளோர், இன்று வாங்குவது சிறந்தது.
நடிகர் பிரபாஸுக்கு இந்த ஆண்டில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் கசிந்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர் ஒருவரின் மகளை அவர் மணக்க உள்ளதாகக் கூறப்பட்டது. கல்யாண பேச்சுவார்த்தைகள் முடிந்துவிட்டதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் பரவிய நிலையில், இது முற்றிலும் வதந்தி என பிரபாஸ் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. அவருக்கு தற்போது 45 வயதாகிறது குறிப்பிடத்தக்கது.
துபாயில் இருந்து ₹12.56 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த வழக்கில் கடந்த 3ம் தேதி நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். அவருக்கு உறுதுணையாக இருந்த தெலுங்கு நடிகர் தருண் ராஜுவும் கைதானார். தனது தந்தை காவல் அதிகாரி என்பதால், அதை வைத்து விமான நிலைய அதிகாரிகளை பலமுறை ஏமாற்றி ரன்யா தங்கத்தை கடத்தியுள்ளார். இந்நிலையில் ஜாமின் கோரி பெங்களூரு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.
* பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய வருமான வரிமுறை ஏப்ரல் 1 முதல் அமலாகிறது
* மாதம் முதல் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு
* சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை வங்கிகள் மாற்றவுள்ளன.
* தனது ரிவார்ட் முறையை SBI வங்கிகள் மாற்றவுள்ளன.
* UPI Collect Payment வசதியை ரூ. 2000ஆக குறைத்துள்ளது NPCI.
சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை ஆர்சிபி வீழ்த்தியபோது, விராட் கோலி சர்வதேச போட்டிகளில் விளையாடியதில்லை. தோனி கேப்டனாக 16 சர்வதேச போட்டிகளில் மட்டுமே வென்றிருந்தார். அப்போது, ஓய்வு பெறாமல் இருந்த சச்சின் 81 சதங்கள் மட்டுமே அடித்திருந்தார். ஆம், 2008 மே 21-ம் தேதிக்கு பிறகு சிஎஸ்கே அணியை சேப்பாக்கத்தில் ஆர்சிபி வென்றதே இல்லை. நாளைய நாள் எப்படி அமையும்? உங்கள் கருத்து என்ன?
ஹைதராபாத்தில் பெண்ணை கொலை செய்த பூசாரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2023-ல் பூசாரி வெங்கட சாய் சூர்யா கிருஷ்ணா, ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். அந்த பெண் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால், அவரை கொலை செய்து உடலை வீட்டின் செப்டிக் டேங்கில் வெங்கட சாய் வீசியுள்ளார். வழக்கில் சாட்சியங்களை அழித்ததற்காக கூடுதலாக 7 ஆண்டுகள் விதித்தும் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.