India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மருத்துவரை மிரட்டி ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற ED அதிகாரி அங்கித் திவாரிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது, செந்தில் பாலாஜியின் வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. பலமுறை ஜாமின் கோரி மனு செய்த போதும் அவரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு வந்தது. அங்கித் திவாரிக்கு கொடுக்கப்பட்ட ஜாமினை முன்வைத்து, செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கோர வாய்ப்புள்ளது.

ரஜினியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தனுஷ் தெரிவித்துள்ளார். இளையராஜாவின் வாழ்க்கை வரலாறை தழுவி உருவான படத்தில் அவர் நடித்துள்ளார். அந்த படத்தின் அறிமுக விழாவில் தனுஷ் பேசுகையில், “இளையராஜா, ரஜினியின் வாழ்க்கை வரலாறு படங்களில் நடிக்க மிகவும் ஆசைப்பட்டேன். அதில் ஒன்று நடந்துள்ளது. இது மிகப்பெரிய கெளரவத்தை அளிக்கிறது. நான் இளையராஜாவின் பக்தன்” என்றார்.

பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிகள் குறித்து பாஜக தலைவர்களுடன் கமலாலயத்தில் ஆலோசனை நடத்திய டிடிவி தினகரன் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 5க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமமுக போட்டியிடும் என்று கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியான நிலையில், பாமக வருகையால் அது குறைந்துள்ளது. இதற்கிடையே, தினகரன் தேனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

டிக்கெட்டுகளை ரத்து செய்ததன் மூலம் ₹1,229 கோடி வருவாய் ஈட்டியதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ஏழைகளின் ரதம் என்று அழைக்கப்படும் ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் முன்பதிவு செய்துவிட்டு வெயிட்டிங் லிஸ்டில் இருந்தவர்கள் கேன்சல் செய்த டிக்கெட்டுகள் மூலம் ₹1,229 கோடி கிடைத்ததாக RTI-ல் கேட்கப்பட்ட கேள்விக்கு ரயில்வே துறை பதிலளித்துள்ளது.

பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பாமக, வட மாவட்ட தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர், தருமபுரி, ஆரணி, அரக்கோணம், சேலம், கள்ளக்குறிச்சி, சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் எண்ணத்தில் பாமக உள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில், பாஜக ஆட்சி அமைந்த பிறகு மத்திய அமைச்சர் பதவி கேட்கவும் பாமக மேலிடம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

CA மே 2024 தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) வெளியிட்டுள்ளது. அதன்படி, ▶இடைநிலை குரூப் I தேர்வுகள்- மே 3, 5, 9, ▶குரூப் 2 தேர்வுகள்- மே 11, 15, 17, ▶குரூப் 1 இறுதித் தேர்வுகள்- மே 2, 4, 8, ▶குரூப் 2 இறுதித் தேர்வுகள்- மே 10, 14 16, ▶சர்வதேச வரி மதிப்பீட்டுத் தேர்வுகள்- மே 14, 16 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விளம்பரங்களில் நடிக்க சமந்தா ரூ.2 கோடி சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மயோசிடிஸ் நோய் பாதித்ததால் சிலமாதம் நடிக்காமல் இருந்த சமந்தா, சிகிச்சைக்கு பின், நோயில் இருந்து நலம் பெற்றதையடுத்து இந்தி படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். அவர், படத்தில் நடிக்க ரூ.8 கோடியும், வெப் சீரிஸில் நடிக்க ரூ.12 கோடியும், விளம்பரங்களில் நடிக்க ரூ.5 கோடியும் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் தொகுதி பொறுப்பாளரே பதில் சொல்ல வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். வேட்பாளர்கள் அறிவிப்பை தொடர்ந்து நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கூடுதல் வாக்கு பெறும் பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களையே சாரும் என்று கூறினார். மேலும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

INDIA கூட்டணி ஆட்சி அமைத்தால் இளைஞர்களுக்கு ஓராண்டு தொழில் பயிற்சியுடன் தலா ₹1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்., தேர்தல் அறிக்கையில் டிப்ளமோ, பட்டம் முடித்த 25 வயதுக்குட்பட்டோருக்கு பயிற்சியுடன் ₹1 லட்சம், 30 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசில் உடனடி வேலை, 40 வயதுக்குட்பட்ட தொழில் முனைவோருக்காக ₹5,000 நிதி ஒதுக்கப்படும் என பல வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

ஆளுநர் பதவியை துறந்து அரசியலில் பணியாற்றுவது என்ற கடினமான முடிவை தமிழிசை எடுத்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழிசை பாஜகவில் இணைந்தது தொடர்பாக பேசிய அவர், ” 2 மாநிலங்களில் ஆளுநராக இருந்து நற்பெயரை எடுத்த தமிழிசை, பாஜகவில் இணைந்துள்ளார். அவர் 25 வருடமாக பாஜக உறுப்பினராக இருந்துள்ளார். களத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக, ஆளுநர் என்ற பெரிய பதவியை விட்டுக் கொடுத்துள்ளார்” என்றார்.
Sorry, no posts matched your criteria.