India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார். சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதீனமாக உள்ள பேரூருக்கு சென்ற அண்ணாமலைக்கு, மலர் கிரீடம் அணிவித்து ஆதீனம் ஆசி வழங்கினார். 2021இல் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல் மருதாசல அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார். ஆனால், அந்த தேர்தலில் கமல் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தனது மருமகன் ராதாகிருஷ்ண தொட்டமணிக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். குல்பர்கா தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்ற கார்கே, கடந்த 2019 தேர்தலில் தோல்வியடைந்தார். இதனால், இந்தத் தேர்தலில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை. இந்நிலையில் கார்கேவின் மருமகனை வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இந்தியா, ஆஸி இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர், 5 போட்டிகள் கொண்ட தொடராக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3 போட்டி கொண்ட தொடராக நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 4 தொடர்களில் இந்தியாவின் ஆதிக்கமே நிறைந்திருந்தது. இதற்கு ரசிகர்கள் இடையே வரவேற்பு அதிகரித்தது. இதை கவனத்தில் கொண்டு, 5 போட்டிகள் கொண்ட தொடராக விரிவுப்படுத்த இரு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் முடிவு செய்துள்ளன.

அதிமுகவின் சின்னம், கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அதிமுகவின் சின்னம், கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், இது ஓபிஎஸ்-க்கு மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது.

அசாம் மாநில காங்., எம்எல்ஏ பரத் சந்திர நரா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் காங்., முக்கியத் தலைவர்கள் பாஜகவில் இணையும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அசாம் காங்கிரஸ் செயல் தலைவராக இருந்த ராணா கோஸ்வாமி உள்ளிட்டோர் சமீபத்தில் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் ஐக்கியமான நிலையில், தற்போது பரத் சந்திர நராவும் விலகியுள்ளார்.

ராகுல் போட்டியிடும் வயநாடு தொகுதியின் வேட்பாளராக அம்மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். பட்டதாரியான இவர் கல்லூரி காலத்திலேயே ஆர்.எஸ் எஸ் அமைப்பின் மாணவ அமைப்பான ஏபிவிபியில் இணைந்து பணியாற்றினார். கடந்த 2020இல் மாநில பாஜக தலைவரான அவர், துடிப்பு மிக்கவர் என்று பெயரெடுத்தவர். எனவே, ராகுலை வீழ்த்த இவரை மத்திய பாஜக தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை பாகிஸ்தானை சேர்ந்த 2 வீரர்கள் திரும்ப பெற்றுள்ளனர். பாகிஸ்தான் வீரர்கள் முகமது அமீர் கடந்த 2020ஆம் ஆண்டிலும், இமாத் வசீம் கடந்தாண்டும் ஓய்வை அறிவித்தனர். இந்நிலையில் அந்த முடிவை திரும்ப பெறுவதாக 2 பேரும் அறிவித்துள்ளனர். அத்துடன் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பை போட்டியில் விளையாட இருவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். இதனையடுத்து, தேர்தலில் போட்டியிடுவதால், அவர் திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவியை சற்றுமுன் ராஜினாமா செய்துள்ளார். திருச்சி மாநகராட்சி 47வது வார்டு கவுன்சிலரான செந்தில்நாதன், மேயர் அன்பழகனிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

நடிகர் ராகுல் மோடியை காதலிப்பதை பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் உறுதி செய்துள்ளார். து ஜூதி மைன் மக்கார் படத்தில் நடித்த போது, இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், ஷ்ரத்தா கபூர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், ஆர் டாலரை அணிந்துள்ளார். ராகுல் பெயரில் உள்ள ஆர் எனும் எழுத்தையே டாலராக அணிந்திருப்பதாகவும், இதன் மூலம் அவர் தற்போது காதலை உறுதி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பாஜகவின் 5ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 37 எம்பிக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 111 தொகுதிகளுக்கு பாஜக நேற்று வேட்பாளர்களை அறிவித்தது. அதில் மத்திய அமைச்சர்கள் அஸ்வினி குமார் செளபே, விகே சிங், வருண் காந்தி உள்ளிட்ட 37 எம்பிக்களின் பெயர் இல்லை. அதேநேரத்தில் நடிகர்கள் கங்கனா, அருண் கோவில் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து சேர்ந்தோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.