India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கலப்பட புகார் காரணமாக, வீடுகளில் மஞ்சள் தூளை பயன்படுத்தும் முன் பரிசோதனை செய்யும்படி TN அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி அதன் தரத்தை உறுதி செய்ய, ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். சிறிது நேரத்தில் மஞ்சள் தூள் அனைத்தும் டம்ளரின் கீழே தங்கிவிட்டால் அது சுத்தமான மஞ்சள் தூள். மிதந்தாலோ, அடர் மஞ்சள் நிறமாக மாறினாலோ அது கலப்பட தூள். உடனே டிரை பன்ணி பாருங்க…

டார்ச் சின்னம் மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில், குறைந்தது 12 தொகுதிகளில் போட்டியிட கமலின் மநீம விரும்புகிறது. இதுகுறித்து திமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்திருந்தது. ஆனால் ஒற்றை இலக்க தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்றும், உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தி வருகிறது. இதனால் டார்ச் லைட்டை ON செய்யவே முடியாதா என மநீம தரப்பு தவித்து வருகிறது.

ஜன நாயகனுக்கு U/A 16+ சான்றிதழை CBFC வழங்கிவிட்டதாகவும், வரும் பிப்.6-ம் தேதி படம் ரிலீஸ் என்றும் SM-ல் சிலர் பரப்பி வருகின்றனர். ஆனால், இதுவரை சென்சார் சான்றிதழ் வழங்கவில்லை என்பதே உண்மை. மேலும் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு CBFC கடுமையாக வாதிட்டது. இந்நிலையில் திடீரென இப்படி செய்ய வாய்ப்பே இல்லை என சட்ட நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

நெய் மற்றும் எண்ணெய் ஆகிய இரண்டையும் மிதமான அளவில் பயன்படுத்துவதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது. பொதுவாக, ஒரு நாளைக்கு 3-4 டீஸ்பூன் (15-20 மிலி) க்கும் குறைவான நெய் + எண்ணெயை எடுத்துக் கொள்வது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர். வறுவல்களுக்கு நெய் பயன்படுத்துவது சுவையையும் நன்மையும் தரும், அதே நேரத்தில் வழக்கமான சமையலுக்கு (குழம்பு, பொரியல்) ஆரோக்கியமான எண்ணெய்களை பயன்படுத்தலாம்.

பொதுவாக டி20 WC தொடர் தொடங்கிய பின்பு தான் பரபரப்பு ஏற்படும். ஆனால் வங்கதேச விலகல் காரணமாக தொடருக்கு முன்னதாக பரபர விவாதம் எழுந்துள்ளது. வரும் பிப்.7 முதல் 10-வது ICC டி20 WC தொடங்குகிறது. இந்நிலையில் இதுவரை நடந்த 9 டி20 WC-ல் அதிகபட்ச ஸ்கோர்களை பதிவு செய்த டாப் 5 பேட்ஸ்மேன்கள் யார் யார் என்பதை தெரிந்துகொள்ள வலது பக்கம் Swipe செய்யுங்கள். உங்களுக்கு பிடித்த வீரர் யார் என்பதை கமெண்ட் செய்யுங்கள்.

*1785 – அமெரிக்காவின் முதலாவது பொதுப் பல்கலைக்கழகம் ஜோர்ஜியா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. *1858 – இந்திய சிப்பாய்க் கிளர்ச்சி நிதிக்காக இலங்கையில் £2,771 நிதி திரட்டப்பட்டது. *1984 – கல்பாக்கத்தில் முதல் அணுமின் நிலையம் தொடங்கப்பட்டது. *1945 – பிரபல தமிழக பேச்சாளர் நெல்லைக் கண்ணன் பிறந்த தினம். *2009 – இந்தியாவின் 8வது குடியரசுத் தலைவர் ஆர். வெங்கடராமன் நினைவு தினம்.

ரயில் தாமதத்தால் மாணவிக்கு ₹9.10 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. UP-ன் பஸ்தி மாவட்டத்தை சேர்ந்தவர் சம்ரிதி. கடந்த 2018-ம் ஆண்டு இவர் புக் செய்த ரயில் 2 மணி நேரம் தாமதமாக வந்ததால் லக்னோவில் நடந்த BSc நுழைவுத் தேர்வை எழுத முடியவில்லை. இதற்காக அவர் நுகர்வோர் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் தான், அடுத்த 45 நாட்களுக்குள் இழப்பீடு செலுத்தக்கோரி 7 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வந்துள்ளது.

இன்று (ஜன.27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

*இந்தப் பொல்லாத உலகில் எதுவுமே நிரந்தரமல்ல, உங்கள் பிரச்சனைகள் கூட இல்லை. *நீங்கள் கீழேயே பார்த்துக் கொண்டிருந்தால், வானவில்லைக் காண முடியாது. *உங்களை நீங்களே நம்ப வேண்டும். அதுதான் ரகசியம். *வரலாற்றுப் புத்தகங்களில் இருப்பதை விட கலைப் படைப்புகளிலேயே சரியான உண்மைகள் மற்றும் விவரங்கள் அதிகம் உள்ளன. *கனவுகள் எல்லாம் நினைவுகள் ஆகும், நிறைய காயங்களுக்கு பிறகு.

அமெரிக்காவில் வீசிவரும் பனிப்புயலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மெய்னே மாகாணத்தில் கடும் பனிப்புயலுக்கு இடையே பறந்த தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கியது. ஓடுபாதையிலிருந்து கிளம்பிய அடுத்த 45 வினாடிகளில் ஏற்பட்ட இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு ஹாஸ்பிட்டலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.