India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசுப்பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், கல்வித் தரத்தை உயர்த்தவும் திமுக தவறிவிட்டதாக சீமான் விமர்சித்துள்ளார். இதன் விளைவாக தான் 207 பள்ளிகள் மூடப்படதாகவும் கூறினார். காலை உணவுத் திட்டம் துவங்கிய பின் அரசுப்பள்ளிகள் மூடப்படுவது அத்திட்டத்தின் தோல்வியை காட்டுவதாகவும், தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வி தரத்தை அரசுப்பள்ளிகள் தரமுடியாமல் போனது திராவிடக் கட்சிகளின் ஆட்சியின் தோல்வி என்றார்.
தமிழகத்தில் CM ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றுவது இதுவே கடைசி என்றும், மீண்டும் அவர் முதல்வராக வரமாட்டார் எனவும் தமிழிசை தெரிவித்துள்ளார். தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்தியதை பார்க்கும் போது சமூகநீதி பேச திமுகவுக்கு தகுதியே இல்லை என்றார். மேலும் தான் தென்சென்னையில் போட்டியிட்ட போது 20,000 வாக்குகள் நீக்கப்பட்டதாகவும், அவை அனைத்தும் பாஜகவுக்கான வாக்குகள் என்றும் கூறினார்.
★வெங்காயம், பூண்டு, மது, உள்ளிட்ட தாமச உணவுகளை கண்டிப்பாக கிருஷ்ண ஜெயந்தி அன்று தவிர்க்க வேண்டும்.
★அன்பையும், ஒற்றுமையையும் வளருங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம்.
★கிருஷ்ணர் நள்ளிரவில் தான் பிறந்தார் என்பதால், அந்த சமயத்தில் தூங்காமல், கண்ணனை வழிபட வேண்டும்.
★கிருஷ்ணருக்கு கண்டிப்பாக கருப்பு நிற பொருள்களை அர்ப்பணிக்க கூடாது.
★துளசி இலையை பறிக்கக் கூடாது.
புடின் உடனான பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அலாஸ்காவில் புடினுடனான பேச்சுவார்த்தைக்கு பின் பேட்டியளித்த டிரம்ப், உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து உடன்பாடு எட்டப்படவில்லை என்றும், ஆனால் அது எட்டுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார். விரைவில் இது தொடர்பாக தான் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்களிடம் பேசவுள்ளதாகவும், இனி முடிவு அவர்கள் கையில் என்றார்.
உக்ரைனுடனான மோதலுக்கு தீர்வுக்கான துவக்கப்புள்ளி தான் டிரம்புடனான சந்திப்பு என புடின் தெரிவித்துள்ளார். இந்த மோதல் என்பது மிகுந்த சோகமானது எனவும், இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதில் தனக்கு ஆர்வம் இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் இந்த மோதலுக்கான பிரதான காரணங்களை அகற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும் உக்ரைனும், ஐரோப்பா யூனியனும் இந்த பேச்சுவார்த்தைகளை நாசப்படுத்தக் கூடாது என எச்சரித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவரும், நாகலாந்து ஆளுநருமான <<17417636>>இல.கணேசன் உடல்நலக்குறைவு<<>> காரணமாக நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் அவர் உயிரிழப்பு குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இல.கணேசன் மூளைக்குள் ரத்தக்கசிவு காரணமாக கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், தொடர் சிகிச்சையளித்தும், ரத்தக்கசிவு தொடர்ந்ததால் அவர் உயிரிழந்தார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
*1946 – கொல்கத்தாவில் இந்து-முஸ்லிம் கலவரங்கள் ஆரம்பமாயின. அடுத்த 3 நாட்களில் 4,000 பேர் உயிரிழந்தனர்.
*1968 – பிரெஞ்சு இந்தியப் பகுதிகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதை பிரெஞ்சு அரசு அதிகாரபூர்வமாக ஏற்ற தினம்.
*2006 – இயற்கை வேளாண் தந்தை மசனோபு ஃபுக்குவோக்கா மறைந்தநாள்.
*2018 – முன்னாள் PM வாஜ்பாயின் மறைந்தநாள்.
*1954 – டைட்டானிக், அவதார் போன்ற படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூனின் பிறந்தநாள்.
பாமக தலைமை பதவி தொடர்பாக ராமதாஸ் – அன்புமணிக்கு இடையே கடந்த சில தினங்களாகவே மோதல் போக்கு நீடிக்கிறது. இந்நிலையில் தனது தாய் சரஸ்வதியின் பிறந்தநாளையொட்டி, அவரை சந்திப்பதற்காக தனது குடும்பத்தோடு தைலாபுரத்துக்கு நேற்று மாலை அன்புமணி சென்றார். தொடர்ந்து அங்கு நடந்த கேக் வெட்டும் நிகழ்விலும் அன்புமணி பங்கேற்றார். அப்போது ராமதாஸும் உடனிருந்தார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
*நான் எப்போதும் சரியான முடிவை எடுக்கவேண்டும் என்று யோசிப்பதில்லை. முடிவு எடுத்த பிறகு சரியானதாக மாற்றிவிடுவேன்.
* ஈசிஜி வரைபடத்தில் உள்ள ஏற்ற இறக்கங்கள்தான் நமது உயிர்த்துடிப்பைக் காட்டுபவை. அதேபோல வாழ்க்கையில் நேரும் ஏற்ற இறக்கங்கள்தான் நம்மை தொடர்ந்து பயணிக்க வைக்கின்றன.
* நீங்கள் வேகமாக பயணிக்க விரும்பினால் தனியாகச் செல்லுங்கள்.நெடுந்தூரம் பயணிக்க வேண்டும் என்றால் கூட்டாகச் செல்வதுதான் சரி.
தங்கள் மீதான போரை ரஷ்யா நிறுத்தப் போவதில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தைகள் அலாஸ்காவில் துவங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன் வீடியோ வெளியிட்டு இத்தகவலை அவர் தெரிவித்துள்ளார். தற்போதும் ரஷ்யா தங்களது மக்களை கொன்று குவித்து வருவதாகவும், போர் நிறுத்தத்தை அவர்கள் விரும்புவதாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.