India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக RCB அணி வீரர் விராட் கோலி பெங்களூரு வந்தடைந்தார். சமீபத்தில் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்த அவர், ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நேற்று இந்தியா திரும்பினார் கோலி. ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், கோலி அணிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸூக்கு 9 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1) குமரி- விஜய் வசந்த், 2) விருதுநகர்- மாணிக்கம் தாகூர், 3) சிவகங்கை – கார்த்திக், 4) கரூர் – ஜோதிமணி, 5) திருவள்ளுர்- சசிகாந்த் & விஸ்வநாதன், 6) மயிலாடுதுறை- பிரவின் சக்ரவர்த்தி , 7) கிருஷ்ணகிரி – செல்லகுமார், 8) கடலூர்- அழகிரி, 9) நெல்லை- பீட்டர் அல்போன்ஸ் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது.

2012 இதே நாளில் நடந்த சச்சினின் கடைசி ஒருநாள் போட்டியை நம் யாராலும் மறக்க முடியாது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில், 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான சச்சின் அதிரடியாக விளையாடி 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அத்துடன் அவரது ஒருநாள் பயணம் முடிவடைந்தது. அந்தப் போட்டியில், கோலி 183* ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

மக்களவைத் தேர்தல் கூட்டணி உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்க பாமக உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றுவருகிறது. தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி, ஜி.கே.மணி, பேரா. தீரன், வடிவேல் ராவணன், வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டம் முடிந்தவுடன் கூட்டணி முடிவு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பூர் மற்றும் நாகை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில், CPI-க்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், ஏற்கெனவே திருப்பூர் MP-யாக உள்ள கே.சுப்பராயன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதேபோல, நாகை தொகுதி வேட்பாளராக வை.செல்வராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் நாகை வேட்பாளராக மா.செல்வராசு போட்டியிட்டார்.

திமுகவின் உத்தேச வேட்பாளர் பட்டியல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. வ.சென்னை – கலாநிதி வீராசாமி, தெ.சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன், ம.சென்னை – தயாநிதி மாறன், ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் – செல்வம், அரக்கோணம் – ஜெகத்ரட்சகன், வேலூர் – கதிர் ஆனந்த், தருமபுரி – செந்தில்குமார், திருவண்ணாமலை – அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி – கெளதம சிகாமணி உள்ளிட்டோர் போட்டியிட உள்ளதாக தெரிகிறது.

சேலம் – செல்வகணபதி, நீலகிரி – ஆ.ராசா, தஞ்சாவூர் – மாணிக்கம், தூத்துக்குடி – கனிமொழி, தென்காசி – தனுஷ், தேனி – தமிழ்ச்செல்வன், ஆரணி – தரணிவேந்தன், கோவை – மகேந்திரன், பொள்ளாச்சி – சண்முகசுந்தரம், ஈரோடு – பிரகாஷ், பெரம்பலூர் – அருண் நேரு உள்ளிட்டோர் திமுக சார்பில் நேரடியாக போட்டியிட உள்ளதாக தெரிகிறது.

தமிழில் வெற்றி பெற்ற பழைய படங்களை, மீண்டும் ரிலீஸ் செய்யும் டிரெண்ட் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2010ஆம் ஆண்டில் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா- சந்தானம் நடித்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் படம் வரும் 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

2019 மக்களவைத் தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ரமேஷ், எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரை விட 1.43 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து, 2021ல் கொலை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதால், திமுகவுக்கு அங்கு அவப்பெயர் ஏற்பட்டது. இதனால் மீண்டும் அங்கு போட்டியிட்டு திமுக வெற்றி பெறுவது கடினம் என்பதால், அத்தொகுதி காங்கிரஸ் வசம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது.

திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அந்த தொகுதியில் வைகோவின் மகனும், மதிமுக முதன்மை செயலாளருமான துரை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால், புதிய சின்னத்தை தேர்வு செய்து அதில் போட்டியிடுவோம் என வைகோ தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.