India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேர்தலையொட்டி வழக்கத்தைவிட 30%க்கும் மேல் மதுபானங்கள் விற்பனையாகும் டாஸ்மாக் கடைகளில், அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், மொத்தமாக மதுபானங்களை விற்கக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடையின் விற்பனை விவரமும் தினசரி சரிபார்க்கப்படுகிறது. வழக்கத்தை விட விற்பனை அதிகரித்திருந்தால் சம்மந்தப்பட்ட ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல், வேலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பாக சுயேச்சையாக போட்டியிடும் மன்சூர் அலிகானுக்கும் பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வரும் மக்களவைத் தேர்தலில் இருவரும் ஒரே சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

பாஜகவை கண்டு திமுகவும், அதிமுகவும் அஞ்சுவதாக பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு விமர்சித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “தேர்தலில் பாஜக யாரையும் போட்டியாக பார்க்கவில்லை. ஆனால், பாஜகவை திமுகவும், அதிமுகவும் போட்டியாக பார்க்கின்றன. தமிழ்நாட்டில் பாஜக இல்லவே இல்லை என கூறிய திமுகவும், அதிமுகவும் இன்று பாஜகவை கண்டு அஞ்சுகின்றன. அந்த அளவுக்கு பாஜக வளர்ந்துள்ளது” என்றார்.

PBKSக்கு எதிரான போட்டியில் LSG பந்துவீச்சாளர் மயங்க் 155 கிமீ வேகத்தில் பந்துவீசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதுபற்றி அவர், முதல் பந்திலேயே தனது பதற்றம் தனிந்ததாகவும், தனக்கு இப்படி ஒர் அறிமுகம் கிடைக்கும் என்று நினைக்கவில்லை எனக் கூறினார். மேலும், கேரியரில் முதல் விக்கெட் எப்போதுமே சிறப்பானது என்றும், மெதுவாக பந்துகளை வீச நினைத்தபோதும் தன்னால் முடியவில்லை எனவும் அவர் கூறினார்.

மறைந்த ஈரோடு எம்.பி கணேசமூர்த்தியின் வீட்டிற்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின், அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அத்துடன், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். 2024 தேர்தலில் மீண்டும் சீட் தராததால் அதிருப்தியில் இருந்த கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மார்ச் 28ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.

திருச்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்கு மேல் அமமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பிரசாரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், செந்தில் நாதன், அமமுக அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், அண்ணாமலை உள்பட 700 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் திருச்சி தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாஜகவின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2027 பேர் மீது எந்த வழக்கும் இல்லை. யாரும் சிறையில் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் மீது வழக்கு நடப்பதாக அவர் சாடினார். பாஜக உறுப்பினர்கள் ஒருவர் மீதாவது வழக்கு நடக்கிறதா? என்றும் பாஜகவில் இருப்பவர்கள் அனைவரும் உத்தமர்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக தலைவரும், நடிகருமான விஜய் ஈஸ்டர் பண்டிகையையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விஜய் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை, தியாகம் தழைத்தோங்க புனிதமான இந்நன்னாளில் அனைவருக்கும் எனது ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதுவரை அரசியலில் ஈடுபடாத அவரது மனைவி, முதல்முறையாக கணவருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். போடி அருகே உள்ள கிராமங்களில் டிடிவிக்காக அவரது மனைவி அனுராதா வீடுவீடாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பு அளித்தனர். அனுராதா வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

ஐஎஸ் அமைப்பு திடீர் மிரட்டல் விடுத்திருப்பதால், நாடு முழுவதும் உளவுத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 2014இல் ரமலானின்போது ஐஎஸ் உருவாக்கப்பட்டது. இந்தாண்டுடன் 10 ஆண்டு ஆவதையொட்டி, அதன் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள ஆடியோவில், “உலகெங்கிலும் ஐஎஸ் அமைப்பினர் தனிநபர் தீவிரவாத தாக்குதலை நடத்துங்கள்” என வலியுறுத்தியுள்ளார். இதனால் நாடு முழுவதும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.