India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால முன்ஜாமீன் வழங்கியுள்ளது. அத்துடன் ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய மும்பை கார் காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீண்டும் மும்பை சென்றால் காவல்துறை தன்னை கைது செய்வார்கள் என்பதால், முன்ஜாமின் கேட்டு குணால் மனு தாக்கல் செய்திருந்தார்.
கணவன்- மனைவி, ஒரு விஷயத்துக்காக மட்டும் எப்போதும் தயங்கவே கூடாது. Sorry கேட்க ஒருபோதும் யோசிக்காதீர்கள். ஈகோ, கோபம் என எதுவானாலும் மன்னிப்புக் கேட்டுவிட்டால், எல்லாமே சரியாகிவிடும். கணவர் வந்து கேட்கட்டும், மனைவி முதலில் கேட்கட்டும் என ஒத்திப் போடுவதை தவிருங்கள். இருவரும் பேசாமல் இருப்பதால் எதுவும் மாறாது. Sorry சொல்லி உணர்வை வெளிப்படுத்துங்க. எவ்வளவு மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை உணர்வீர்கள்.
ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் திரிபாதி(5), கேப்டன் ருதுராஜ்(0), ஹூடா(4), சாம் கரன்(8) ஆகியோர் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். ஆர்சிபி வீரர் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். 9 ஓவர்கள் முடிவில் 53 ரன்கள் எடுத்துள்ள சிஎஸ்கே, இன்னும் 11 ஓவர்களில் 144 ரன்கள் எடுக்குமா?
தமிழ்நாட்டில் குற்றங்கள் அதிகரித்திருக்கிறதா? அல்லது குறைந்திருக்கிறதா? என்பதை புள்ளிவிவரங்கள் சொல்லும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சிக்காலங்கள் போல் சாதி – மத மோதல்கள் நிகழ்ந்துள்ளனவா? எனவும் x தளத்தில் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் அதிமுக set செய்ய நினைக்கும் narrative-வுக்குப் பின்னால் இருக்கும் சூழ்ச்சி ஒருபோதும் நிறைவேறாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு பொண்டாட்டிய வச்சே சமாளிக்க முடியல என ரொம்ப பேர் பொலம்புறத பாத்துருப்போம். ஆனா, 39 மனைவிகளோட ஒருத்தர் வாழ்ந்திருக்காரு. அதுவும் இந்தியாவுல. மிசோரமைச் சேர்ந்த சியோனா சானாதான் அது. உலகின் மிகப்பெரிய குடும்பத்துக்கு சொந்தக்காரரான அவரு, 39 மனைவிகள், 94 குழந்தைகள், 33 பேரப்பிள்ளைகளோட ஒன்னா வாழ ஒரு அரண்மனையையே கட்டிருக்காரு. செழிப்பா வாழ்ந்த மனுஷன், 2021ம் வருஷம் ரத்த சோகை நோயால இறந்துட்டாராம்.
சிஎஸ்கே அணியால் ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட நூர் அகமது, அதிக விக்கெட்டுகளை (7) வீழ்த்தியவர்களுக்கான பர்பிள் தொப்பியை தனதாக்கிக் கொண்டுள்ளார். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர், ஆர்சிபி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தை லக்னோ வீரர் ஷர்துல் தாகூர் (6) பிடித்துள்ளார்.
நவீன வாழ்க்கை முறையில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்திலும் பிரச்னை உள்ளது. இதில் பெண்கள் அணியும் ‘பிரா’வும் விதிவிலக்கல்ல. அண்மை ஆய்வில் சுமார் 64% பிராக்களில், ஆபத்தான கெமிக்கல்கள் இருந்துள்ளன. பிரா உடலுடன் ஒட்டி இருப்பதால், அதிலுள்ள கெமிக்கல்கள் சருமத்துக்குள் எளிதாக உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலக்கின்றன. இந்த நச்சுகள் நீண்டகாலம் உடலில் தங்கி கேன்சர் உள்ளிட்ட பல நோய்களுக்கு காரணமாகின்றனவாம்.
பெண்கள் அணியும் பெரும்பாலான பிராக்கள், ஜிம்வேர் துணிகளிலும், நிறமூட்டியிலும் சேர்க்கப்படும் கெமிக்கல்கள் (PFAs) பல நோய்களுக்கு காரணமாகின்றன. நீண்டநாள் உழைக்க வேண்டும், ஈரத்தை வேகமாக உறிஞ்ச வேண்டும் என்பதற்காக இந்த கெமிக்கல்கள் சேர்க்கப்படுகின்றன. இவை பெண்ணுடலின் ஹார்மோன் சமநிலையை பாதிப்பது, குழந்தை பேறின்மை, நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பது, புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு காரணமாகலாம்.
மக்களிடம் வரி மூலம் அரசு எவ்வளவு சுரண்டுகிறது என்று கூறி, நெட்டிசன் ஒருவர் பகிர்ந்துள்ள ஐபிஎல் டிக்கெட் தற்போது வைரலாகி வருகிறது. அதில், சென்னையில் டிக்கெட்டின் அடிப்படை ரூ.2,343, பொழுதுபோக்கு வரி(25%) ரூ.781 ஆகியவற்றுடன் ஜிஎஸ்டி 28%-மும் விதிக்கப்படுகிறது. இதில் மத்திய, மாநில அரசுகள் தலா 14% எடுத்துக் கொள்கின்றன. அதாவது ரூ.4,000 கொடுத்து வாங்கும் டிக்கெட்டில் வரி மட்டுமே ரூ.1,657. இது சரி தானா?
மார்ச் 28-ம் தேதியில் மட்டும் வெவ்வேறு ஆண்டுகளில் 3 மிகப்பெரிய நிலநடுக்கங்களை உலகம் கண்டுள்ளது. துருக்கியில் 1970 மார்ச் 28 அன்று நள்ளிரவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்(7.1) பதிவானது. இதில், 1086 பேர் உயிரிழந்தனர். இந்தோனோசியாவின் சுமத்ரா தீவுகளில் 2005 மார்ச் 28-ல் ஏற்பட்ட நிலநடுக்கம் (8.7), 905 பேரின் உயிரைக் குடித்தது. இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மியான்மர் நாட்டை உருக்குலையச் செய்துள்ளது.
Sorry, no posts matched your criteria.