India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த விவகாரத்தில் ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா மீது 3 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவின் ஜல்கான் மேயர், ஹோட்டல் உரிமையாளர் மற்றும் தொழிலதிபர் ஒருவர் என மூவர் கர் காவல்நிலையத்தில் அளித்த புகார்களின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குணால் கம்ராவுக்கு வரும் 7ஆம் தேதி வரை சென்னை ஐகோர்ட் முன் ஜாமின் வழங்கியுள்ளது.
மோகன்லாலின் ‘எம்புரான்’ படம் வெளியாகி 2 நாள்களில் உலகம் முழுவதும் ₹100 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது. ‘லூசிபர்’ படத்துக்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து, மலையாளத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எம்புரான் உருவாக்கப்பட்டது. மலையாளப்படம் ₹100 கோடியை இரண்டே நாள்களில் வசூல் செய்வது இதுவே முதல்முறை. அடுத்தடுத்து விடுமுறை வருவதால் எம்புரானின் கலெக்ஷன் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாதாரணமாக, 3 தெரு தள்ளி ஆர்டர் போட்டாலே டெலிவரிக்கு, ரொம்ப நேரம் ஆகும். ஆனால், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒருவர் 16,000 கி.மீ தாண்டி அயர்லாந்தில் பீட்சா ஆர்டர் செய்துள்ளார். அவரின் சொந்த ஊரான, டப்ளின் நகரை விட்டு வந்ததை மனுஷன் மறந்து விட்டார். இதில், வேடிக்கை என்னவென்றால், இவரின் ஆர்டரை ரெடி செஞ்சி, டெலிவரிக்கும் புறப்பட்டு விட்டது அந்த ஹோட்டல். நீங்க இதுமாதிரி ஏதாவது பண்ணியிருக்கீங்களா?
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையத்தின் விழிப்புணர்வு, கண்காணிப்பு குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அதில் முழுமையான அர்ப்பணிப்புடன் சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக திமுக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகள் 6% குறைந்துள்ளதாகவும் கூறினார். SC, ST கல்வி மேம்பாட்டிற்காக ₹2,798 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் கூறினார்.
கர்நாடகா மாநிலம் கானாபூரில் சைபர் மோசடியில் ₹50 லட்சத்தை இழந்த வயதான தம்பதி செய்வதறியாது தற்கொலை செய்துகொண்டனர். முன்னாள் அரசு ஊழியரான நாசரேத்துக்கு, க்ரைம் பிரான்ச் காவல்துறை என கூறி தொலைபேசி மூலமாக இருவர் மிரட்டியுள்ளனர். தங்கள் சிம் கார்டை வைத்து மோசடி நடைபெற்றுள்ளதாக கூறி, ₹50 லட்சம் வரை பெற்றுள்ளனர். மேலும் பணம் கேட்க, வயதான தம்பதி விபரீத முடிவை எடுத்துள்ளனர்.
<<15922582>>நீட் <<>>மரணங்களுக்கு முதல்வரின் பதில் என்ன?, நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோக வேண்டும் என்று இபிஎஸ் சாடியுள்ளார். ஆட்சிக்கு வந்தால் நீட் என்ற தேர்வே தமிழ்நாட்டில் இருக்காது என்று மாணவர்களை திமுக அரசு ஏமாற்றியுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், உங்கள் கைகளில் சேர்ந்துகொண்டே இருக்கும் இரத்தக் கறைகளை எப்படி துடைக்கப் போகிறீர்கள், மாணவர்களை ஏமாற்றாதீர் எனவும் தெரிவித்துள்ளார்.
நடிகை த்ரிஷா (41) ‘காதல்’ குறித்து வெளியிட்டுள்ள பதிவு வைரலாகிறது. சில ஆண்டுகளுக்கு முன், தொழிலதிபருடன் நடைபெறவிருந்த திருமணம் பாதியில் நின்றது. அதன்பின் அவரது திருமணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், மணப்பெண் கோலத்தில் இருக்கும் போட்டோ உடன் ‘Love always wins’ என X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக கமெண்ட் செய்கின்றனர்.
மோடி அரசால் வங்கிகள் வசூல் ஏஜெண்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாக காங்., தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். ஏடிஎம்மில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ₹23 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், வங்கிக் கணக்குகள் பயன்பாட்டில் இல்லாவிட்டால் அதற்கும் ₹100 முதல் ₹200 வரை அபராதம் விதிக்கப்படுகிறது என்றார். இதுபோன்ற நடவடிக்கையை வங்கிகள் திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் அரசுப் பள்ளியில் பட்டியல் சமூக மாணவரை ஆசிரியர் கடுமையாக தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் அடித்ததில் மாணவனின் மண்டை உடைந்துள்ளது. இதில் அவரின் நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அரசியல் ரீதியாகவும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
மியான்மரில் நேற்று நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. காயங்களுடன் மீட்கப்பட்ட சுமார் 3,500 பேர் ஹாஸ்பிடல்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல இடங்களில் ஹாஸ்பிடல்களும் சரிந்து விழுந்துள்ளதால், பொதுவெளியில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாய்லாந்தில் 10 பேர் பலியான நிலையில், 100 பேர் காயமடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.