India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

➤ விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்
➤ டி.டி.வி. தினகரன் களத்திலேயே இல்லை – தங்க தமிழ்ச்செல்வன்
➤ பாஜக எங்களை யாரும் மிரட்டவில்லை – பிரேமலதா
➤ பாஜகவில் இணைந்து விடுமாறு அழைப்பு விடுத்தார் – கருணாஸ்
➤‘இந்தியன் 2’ திரைப்படம் ஜூன் மாதம் வெளியீடு
➤ நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி

ரவுடிகளுக்கு பொறுப்பு கொடுக்கவே அண்ணாமலை ஐ.பி.எஸ் படித்துள்ளதாக நடிகர் கருணாஸ் விமர்சித்துள்ளார். தென்காசி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், ‘பாஜக அரசின் நிர்வாக சீர்கேடு காரணமாக படுத்தால் தூக்கம் வரவில்லை. அதனால் தான் திமுகவை ஆதரித்து தேர்தலில் பரப்புரை செய்து வருகிறேன். பணம், பதவி உள்ளிட்டவற்றை தருவதாகக் கூறி பாஜகவில் சேர, அழைத்த போதும் தான் செல்லவில்லை’ என்றார்.

2023ஆம் ஆண்டில் 500 முன்னணி நிறுவனங்கள் வருமான வளர்ச்சியில் அமெரிக்காவை இந்தியா முந்தியுள்ளது. அதாவது, 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் அமெரிக்க பங்குச்சந்தையின் எஸ் & பி-யில் உள்ள 500 நிறுவனங்களின் வருமானம் 14.1% உயர்ந்துள்ளது. இதே காலத்தில், இந்தியாவின் பிஎஸ்இ 500 நிறுவனங்களின் ஒட்டுமொத்த வருமானம் 17.4% உயர்ந்துள்ளது. தொடர்ந்து 2ஆவது ஆண்டாக வளர்ச்சி பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிரியா தலைநகரில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த வேண்டுமென அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஈரான் மிகப் பெரிய தாக்குதலை நடத்தலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் மீதான ராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா தலையிடக் கூடாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மே.வங்கத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் தீவிரமான பிரச்சனை என அம்மாநில ஆளுநர் அனந்த போஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு வெடிகுண்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்காக என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்ற காரின் கண்ணாடியை சிலர் உடைத்து தாக்குதல் நடத்தினர். இதனை கண்டித்துள்ள ஆளுநர், ‘சட்டத்தை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது. இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்’ என்றார்.

கோமாளி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் லவ் டுடே படத்தை இயக்கி, நடித்ததன் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தயாராகிவரும் எல்.ஐ.சி படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை அவர் இயக்கவுள்ளதாகவும், அதற்காக ரூ.10 கோடி சம்பளம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் மூதாட்டி ஒருவர், தனது 99 வயதில் அமெரிக்கக் குடியுரிமையை பெற்றுள்ளார். 1925ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்த தைய்பாய், ஃப்ளோரிடாவில் தனது மகளுடன் வசித்து வரும் நிலையில், தற்போது குடியுரிமை பெற்றுள்ளார். இதனை அமெரிக்கக் குடியுரிமை அலுவலகம் தனது X பக்கத்தில், ‘வயது என்பது வெறும் எண் மட்டுமே’ என பகிர்ந்திருந்தது. குடியுரிமை வழங்க இத்தனை தாமதம் ஏன் என நெட்டிசன்கள் வினவியுள்ளனர்.

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய பெங்களூர் அணி, 183 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய கோலி சதமடித்தார். இதனை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணியும் மிகச் சிறப்பாக ஆடியது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய அந்த அணியின் பட்லர் சதமடித்தார். 5 பந்துகள் எஞ்சி இருக்கும் நிலையிலேயே அந்த அணி வெற்றி இலக்கை எட்டியது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென பாலிவுட் நடிகர் கோவிந்தா அறிவித்துள்ளார். சமீபத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்த கோவிந்தா, மும்பை வடமேற்கு தொகுதியில் வேட்பாளராக களமிறங்குவார் என கூறப்பட்டது. இந்நிலையில், நாக்பூரில் பேசிய அவர், ‘தேர்தலில் போட்டியிடுவது குறித்து முதல்வருடன் ஆலோசிக்கவில்லை. சிவசேனா வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வதற்காக வந்துள்ளேன்’ என்றார்.

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதுவரை ₹193 கோடி ரூபாய் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மார்ச் 16 முதல் இன்று வரை ₹82.63கோடி ரொக்கம், ₹89.41 கோடி மதிப்பிலான தங்கம் உட்பட மொத்தம் ₹192.67 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.