India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
MI அணிக்கு 197 ரன்களை இலக்காக GT அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற MI பவுலிங்கை தேர்வு செய்ததை அடுத்து, முதலில் பேட்டிங் செய்த GT அணி வீரர்கள் பவுண்டரிகளை பறக்கவிட்டனர். TN வீரர் சாய் சுதர்சன் அரைசதம் (63) விளாச, கில்(38), பட்லர்(39) உள்ளிட்ட வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். MI தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். யார் ஜெயிப்பாங்க?
நகைகளின் விலையை பொறுத்தவரை, நாம் பெரும்பாலும் தங்கத்தை மட்டுமே பார்க்கிறோம். ஆனால், அதனுடன் சேர்ந்தே உயரும் வெள்ளியின் விலையை நோட் செய்ய மறந்துவிடுகிறோம். ஆனால், கடந்த சில மாதங்களாகவே தங்கம், வெள்ளி என இரண்டும் உச்சம் தொட்டு நுகர்வோரை மலைப்படையச் செய்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹113க்கு விற்பனையாகிறது. ஜனவரி மாதத்தில் இதன் விலை ₹100க்கு கீழ் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலானியா, ஒரு முன்னாள் மாடலாவார். இந்நிலையில், அவர் மாடலிங் செய்தபோது வெளியான நிர்வாணப் படங்கள், 2016 அதிபர் தேர்தலின் போது, பத்திரிகையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை செய்தது யார் என்பது அப்போது மர்மமாகவே இருந்தது. இந்நிலையில், தன்னை அவமானப்படுத்தவே, டிரம்ப்பின் அப்போதைய அரசியல் ஆலோசகரான ரோஜர் ஸ்டோன், அதை வெளியிட்டதாக, மெலானி தற்போது தெரிவித்துள்ளார்.
கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியுடன், டென்னிஸ் நட்சத்திரம் ஜோகோவிச் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு ஜோகோவிச் முன்னேறினார். இந்த ஆட்டத்தை நேரில் கண்டு ரசித்த மெஸ்ஸி, போட்டிக்கு பின் ஜோகோவிச்சுடன் புகைப்படம் எடுத்தார். அப்போது இருவரும் தங்கள் ஜெர்ஸியை மாற்றிக்கொண்டனர்.
டேட்டிங் ஆப் மூலம் பழகிய பெண்ணை நம்பி தொழிலதிபர் ஒருவர் ரூ.6.5 கோடியை இழந்த சம்பவம் நொய்டாவில் நடந்துள்ளது. தல்ஜித் சிங் என்பவருக்கு ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் அனிதா சவுகான் அறிமுகமாகியுள்ளார். ஆன்லைன் ட்ரேடிங் செய்தால் அதிக லாபம் பார்க்கலாம் என அந்த பெண் ஆசை காட்டியுள்ளார். இதனை நம்பி அவர் முதலீடு செய்த நிலையில், அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.6.5 கோடி திருடுபோயுள்ளது. So sad!
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, இன்று (மார்ச் 29) இரவு 11:01-க்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார். இதனால் மிதுனம், கடகம், துலாம், மகரம் ஆகிய 4 ராசிகள் அதிக நன்மைகள் பெறும். ரிஷபம், விருச்சிகம் இரு ராசிகளுக்கு நன்மை, தீமை இரண்டுவிதமான பலன்களும் ஏற்படலாம். அதேநேரம், மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகள் பரிகாரத்தின் மூலம் பயன்பெறுமாம்.
குழந்தை பருவத்தில் தாய்ப்பால் குடித்திருந்தாலும் அதன் சுவை யாருக்கும் நினைவில் இருப்பதில்லை. இந்நிலையில், அமெரிக்காவில் ஃபிரிடா என்ற நிறுவனம் தாய்ப்பால் சுவையிலான ஐஸ்க்ரீமை அறிமுகம் செய்துள்ளது. இதில், தாய்ப்பால் கலக்கப்படுவதில்லை என்றும் அது போன்ற சுவையை சேர்த்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஐஸ்க்ரீமை இப்போது ஆர்டர் செய்தால் 9 மாதங்களுக்கு பிறகுதான் கிடைக்குமாம்.
‘வாழ்க்கை ஒரு வட்டம், இங்க ஜெயிக்கிறவன் தோப்பான், தோக்குறவன் ஜெயிப்பான்’ என்ற விஜய் பட வசனம் IPL புள்ளி பட்டியலுக்கு அப்படியே பொருந்துகிறது. தற்போதைய நிலவரப்படி, டேபிள் டாப்பர்களாக இருக்கும் 4 அணிகளும் இதுவரை கோப்பையை வென்றதில்லை. RCB, LSG, PBKS, DC ஆகிய அணிகள் முன்னிலையில் உள்ளன. 5 கோப்பைகளை வென்ற CSK, MI அணிகள் முறையே 7, 8 ஆம் இடத்தில் உள்ளன. இந்த வருஷம் யாரு கப் அடிப்பாங்க?
ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க e-KYC செய்வதற்கு மார்ச் 31 தான் கடைசி நாளாகும். இதை செய்யத் தவறினால், ரேஷனில் பொருள்கள் வாங்க முடியாமல் போகும். உங்கள் ரேஷன் கார்டு டி-ஆக்டிவேட் செய்யப்படலாம் (அ) ரத்து செய்யப்படலாம். ஆகவே, இதுவரை ஆதார் எண் இணைக்காதவர்கள் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று செய்யலாம். இ-சேவை மையங்கள் அல்லது வீட்டிலிருந்தே இணையம் மூலமாக ஆன்லைனிலும் e-KYC அப்டேட் செய்யலாம்.
*மாநில ரேஷன் கார்டு போர்ட்டலில் (https://www.tnpds.gov.in/) லாக்-இன் செய்யவும். *உங்கள் ரேஷன் கார்டு எண், பாஸ்வேர்ட் கொடுத்து உள்நுழையவும். *e-KYC விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். “Aadhaar Linking” (அ) “e-KYC Update”-ஐ கிளிக் செய்து விவரங்களை அளிக்கவும். *அதன்பின் வரும் OTP-ஐ உள்ளிட்டு, போட்டோ, ஆவணங்களை அப்லோட் செய்து e-KYC-ஐ சமர்ப்பிக்கவும். வெற்றிகரமாக Submit செய்தபின் உங்களுக்கு மெசேஜ் வரும்.
Sorry, no posts matched your criteria.