India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை வரை மழைக்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கை, காஞ்சி, கோவை, திருப்பூர், வேலூர், தி.மலை, நீலகிரி, மதுரை, ராணிப்பேட்டையில் இன்றிரவு மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. காலையில் மழை பெய்தால் விடுமுறை அளிக்கப்படலாம். இல்லாவிடில், குடை, ரெயின் கோட் உள்ளிட்டவற்றுடன் மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளி செல்லுங்கள். SHARE IT.

OPS முதலமைச்சர் வாய்ப்பை தர்மயுத்தத்தால் தவறவிட்டதாக தேனியில் பேட்டியளித்த TTV தினகரன் கூறியுள்ளார். NDA கூட்டணியில் சேர OPS-க்கு அழைப்பு விடுத்துள்ள தினகரன், யார் பேச்சையோ கேட்டு செய்த தர்மயுத்தத்தை தொடங்காமல், ஒருவாரம் பொறுத்திருந்தால் அவர் மீண்டும் முதலமைச்சராகி இருக்கலாம். அவரது வளர்ச்சியில் எனக்கும் பங்குண்டு. எனவே, நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புவதாக தெரிவித்தார்.

அதிமுக -பாஜக கூட்டணி கட்டாயத்தால் உருவான BLACKMAIL கூட்டணி என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிமுக தொண்டர்களின் விருப்பத்திற்கு எதிராக, வழக்குகளில் இருந்து தன்னை காத்துக்கொள்ள சுயநலக் கூட்டணியை EPS உருவாக்கியுள்ளதாக சாடிய அவர், 2019, 2021 தேர்தல்களில் ஒன்றாக தோற்றுப் போனவர்கள், புதிய கெட்டப்பை போட்டுக்கொண்டு NDA கூட்டணி என்கிறார்கள். கெட்டப்பை மாற்றினாலும் தமிழ்நாட்டில் கெட் அவுட் தான் என்றார்.

சூரிய வெளிச்சத்தை தவிர்ப்பவர்கள் அதிகளவில் குறட்டை பாதிப்புக்கு ஆளாவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். குறட்டையை தவிர வேறு உடல்நல பிரச்னை எதுவும் இல்லையெனில், வைட்டமின் டி பரிசோதனை செய்வது நல்லதாகும். ஏனென்றால், வைட்டமின் டி குறைபாடு காரணமாக மூச்சுக்குழாயில் வீக்கம் ஏற்பட்டு, சுவாசப் பாதை அடைத்து குறட்டை அதிகரிக்கலாம். இதற்கு 15 நிமிடங்கள் சூரிய வெளிச்சத்தில் நடக்க அறிவுறுத்தப்படுகிறது.

‘ஜன நாயகன்’ படத்தின் சென்சார் வழக்கில் ஐகோர்ட் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது. சாதகமான தீர்ப்பு வந்தால் படத்தை ரிலீஸ் செய்ய 3 தேதிகளை படக்குழு டிக் செய்துள்ளதாம். ஜன.30, பிப்ரவரி 6, பிப்ரவரி 13 ஆகிய ஏதேனும் ஒரு தேதியில் படத்தை வெளியிட திட்டமிட்டு படக்குழு தீவிரமாக வேலை செய்கிறதாம். இதில், பிப்.6-ம் தேதி படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹோட்டல்களில் உணவு ஆர்டர் செய்யும்போது, பொதுவாக கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாக்களில் தான் உணவுகள் டெலிவரியாகின்றன. பலரும் வீடுகளில் இந்த டப்பாக்களை மீண்டும் பயன்படுத்துகின்றனர். இது <<15493487>>மிக ஆபத்தானது<<>> என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பிளாஸ்டிக்கில் அடங்கியுள்ள BPA, phthalates உள்ளிட்ட நச்சு ரசாயனங்கள் இதய-ரத்த நாள நோய்கள், நீரிழிவு, மலட்டுத்தன்மை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து அதிகமாம்.

கூட்டணியை இதுவரை இறுதி செய்யாத தேமுதிகவுடன் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக – பாஜக தரப்பு தொடங்கியிருக்கிறது. குடியரசு தினத்தையொட்டி, கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்ற தேமுதிக பொருளாளர் எல்.கே.சதீஷுடன் நயினார் நாகேந்திரனும், அதிமுக தலைவர்களும் 10 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதில் தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பல மாவட்டங்களில் தற்போது மழை பெய்துவருகிறது. இந்நிலையில், இரவில் சென்னை, திருவள்ளூர், செங்கை, காஞ்சி, கோவை, திருப்பூர், வேலூர், தி.மலை, நீலகிரி, மதுரை, ராணிப்பேட்டையில் மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. இதனால், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு பெற்றோர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். காலையும் மழை தொடர்ந்தால், விடுமுறை குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வாய்ப்புள்ளது.

உணவு டெலிவரிக்கு பயன்படும் கருப்பு பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்களால் இதய-ரத்த நாள நோய்கள், நீரிழிவு, மலட்டுத்தன்மை பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து அதிகம் என்கின்றனர் டாக்டர்கள். மேலும், அதனால் ஹார்மோன் குறுக்கீடு, நரம்பு பாதிப்புகள், இதிலுள்ள மைக்ரோ பிளாஸ்டிக்கால் செல்களுக்கு சேதம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். ஆகவே, உணவுகளை வைக்க ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் போன்ற உலோகப் பாத்திரங்களே சிறந்தவை.. SHARE IT

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு; அப்படி இருக்கையில், கூச்சமே இல்லாமல் ஏராளமான பொய்களை பிரதமர் சொல்லிவிட்டு சென்றுள்ளார் என CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பெண்கள் கேட்காமலேயே, அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் ஆட்சிதான் திமுக ஆட்சி; பவர் ஹவுஸாக இருக்கும் பெண்களைதான் நம்பி இருக்கிறேன், தேர்தலில் முன்கள வீராங்கனைகளாக நின்று திமுக அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீடாக எடுத்து செல்ல வேண்டும் என்றார்.
Sorry, no posts matched your criteria.