news

News March 31, 2024

கச்சத்தீவை இலங்கைக்கு அளித்தது காங்கிரஸ் தான்

image

கச்சத்தீவை இரக்கமில்லாமல் காங்கிரஸ், இலங்கைக்கு கொடுத்து விட்டதாக மோடி குற்றம்சாட்டியுள்ளார். ஆர்டிஐயில் அண்ணாமலை பெற்ற தகவலை சுட்டிக்காட்டி, அவர் வெளியிட்ட பதிவில், “கச்சத்தீவு குறித்த புது தகவல் நம் கண்களை திறப்பதோடு, திடுக்கிட வைக்கிறது. கச்சத்தீவை இரக்கமில்லாமல் காங்கிரஸ் எப்படி அளித்தது என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது. காங்கிரஸை எப்போதும் நம்பவே கூடாது” எனக் கூறியுள்ளார்.

News March 31, 2024

வசூலை குவிக்கும் ரீ- ரிலீஸ் திரைப்படங்கள்?

image

புதிதாக வெளியாகும் திரைப்படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லாததால், பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்யும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அப்படி வெளியான வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, எஸ்எம்ஸ், விடிவி உள்ளிட்ட படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்த வரிசையில், ஏப்.11ல் பையா திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. தொடர்ந்து, கில்லி படத்தை ரீ-ரிலிஸ் செய்ய பேச்சுவார்த்தை நடக்கிறது.

News March 31, 2024

கச்சத்தீவு குறித்து ஆர்டிஐ மூலம் தகவல் வாங்கிய அண்ணாமலை

image

கச்சத்தீவு இலங்கைக்கு 1974இல் இந்திய அரசால் அளிக்கப்பட்ட தகவல்களை ஆர்டிஐ மூலம் அண்ணாமலை வாங்கியுள்ளார். அதில், 1974ஆம் ஆண்டில் அப்போதைய இந்திரா காந்தி தலைமையிலான அரசு, கச்சத்தீவு மீதான உரிமையை
இலங்கைக்கு அளித்த தகவலை முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. 1961ல் கச்சத்தீவு மீதான உரிமையை இலங்கைக்கு அளிக்க தயங்க மாட்டேன் என நேரு கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 31, 2024

எடப்பாடி பழனிசாமி பிரதமராக வருவார்

image

எடப்பாடி பழனிசாமி பிரதமராக வருவதற்கு உரிய அனைத்து தகுதிகளையும் உடையவர் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “மத்திய, மாநிலத்தில் அமைச்சராக முதல்வராக, நாடாளுமன்ற உறுப்பினராக இபிஎஸ் இருந்துள்ளார். இந்தியாவின் அரசியல் தட்பவெப்பத்தை அவர் நன்கு அறிந்தவர். எனவே, தலைமை பொறுப்புக்கு வருவதற்கு அவருக்கு தகுதி உள்ளது. முதல்வராக அவர் சிறப்பாக செயல்பட்டதை நாடே பார்த்தது” என்றார்.

News March 31, 2024

டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரித்தால் விசாரணை

image

தேர்தலையொட்டி வழக்கத்தைவிட 30%க்கும் மேல் மதுபானங்கள் விற்பனையாகும் டாஸ்மாக் கடைகளில், அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், மொத்தமாக மதுபானங்களை விற்கக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடையின் விற்பனை விவரமும் தினசரி சரிபார்க்கப்படுகிறது. வழக்கத்தை விட விற்பனை அதிகரித்திருந்தால் சம்மந்தப்பட்ட ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

News March 31, 2024

ஒரே சின்னத்தில் ஓபிஎஸ், மன்சூர் அலிகான் போட்டி

image

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல், வேலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பாக சுயேச்சையாக போட்டியிடும் மன்சூர் அலிகானுக்கும் பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வரும் மக்களவைத் தேர்தலில் இருவரும் ஒரே சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

News March 31, 2024

பாஜகவை கண்டு திமுகவும், அதிமுகவும் அஞ்சுகின்றன

image

பாஜகவை கண்டு திமுகவும், அதிமுகவும் அஞ்சுவதாக பாஜக நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு விமர்சித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “தேர்தலில் பாஜக யாரையும் போட்டியாக பார்க்கவில்லை. ஆனால், பாஜகவை திமுகவும், அதிமுகவும் போட்டியாக பார்க்கின்றன. தமிழ்நாட்டில் பாஜக இல்லவே இல்லை என கூறிய திமுகவும், அதிமுகவும் இன்று பாஜகவை கண்டு அஞ்சுகின்றன. அந்த அளவுக்கு பாஜக வளர்ந்துள்ளது” என்றார்.

News March 31, 2024

முதல் பந்திலேயே பதற்றம் தனிந்தது

image

PBKSக்கு எதிரான போட்டியில் LSG பந்துவீச்சாளர் மயங்க் 155 கிமீ வேகத்தில் பந்துவீசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதுபற்றி அவர், முதல் பந்திலேயே தனது பதற்றம் தனிந்ததாகவும், தனக்கு இப்படி ஒர் அறிமுகம் கிடைக்கும் என்று நினைக்கவில்லை எனக் கூறினார். மேலும், கேரியரில் முதல் விக்கெட் எப்போதுமே சிறப்பானது என்றும், மெதுவாக பந்துகளை வீச நினைத்தபோதும் தன்னால் முடியவில்லை எனவும் அவர் கூறினார்.

News March 31, 2024

அஞ்சலி செலுத்தினார் முதல்வர்

image

மறைந்த ஈரோடு எம்.பி கணேசமூர்த்தியின் வீட்டிற்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின், அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அத்துடன், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். 2024 தேர்தலில் மீண்டும் சீட் தராததால் அதிருப்தியில் இருந்த கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மார்ச் 28ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.

News March 31, 2024

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

image

திருச்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்கு மேல் அமமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பிரசாரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், செந்தில் நாதன், அமமுக அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், அண்ணாமலை உள்பட 700 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் திருச்சி தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!