India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆன்லைன் சூதாட்ட செயலி மோசடி குறித்த ED அறிக்கை அடிப்படையில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆப் புரமோட்டர்கள் பாகேலுக்கு ரூ.508 கோடி கொடுத்ததாக முன்பு குற்றஞ்சாட்டிய ED, சமீபத்தில் இது தொடர்பாக அறிக்கை அம்மாநில அரசிடம் அளித்துள்ளது. ஆனால், இது அரசியல் பழிவாங்கலுக்காக பாஜக அரசால் பதிவு செய்யப்பட்ட வழக்கு என பாகேல் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியதில், மார்ட்டினின் Future Gaming நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது. அதுவும் EDயின் விசாரணை வளையத்திற்குள் இருந்தபோதுதான், ₹1,368 கோடி அளவுக்கு நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இதில் திமுகவுக்கு ₹500 கோடியும், மீதமுள்ள ₹868 கோடி தொகையை பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு அந்நிறுவனம் அளித்துள்ளது. ஒரே நேரத்தில் பாஜகவுக்கும், திமுகவுக்கும் நிதி கொடுத்தது விவாதப்பொருளாக மாறியுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தமிழர் தேசம் கட்சி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேசத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மாநிலங்களவையில் இடம் மற்றும் 2026 தேர்தலில் 5 தொகுதிகள் என்ற நிபந்தனையுடன் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் கே.கே.செல்வகுமார் அறிவித்துள்ளார்.

கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கை அவசர வழக்காக இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்குவது தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் இவ்வழக்கை இன்று காலை அவசர வழக்காக விசாரிக்கிறது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் அதிக அளவிலான பணத்தை நன்கொடையாகப் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 2019 முதல் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட வேண்டும் என எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், 2018 மார்ச் முதல் 2019 ஏப்ரல் வரையிலான விவரங்களையும் வெளியிட வேண்டும் என ‘சிட்டிசன்ஸ் ரைட்ஸ் டிரஸ்ட்’ என்ற அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

காதலன் மைக்கேலை யாரேனும் விமர்சித்தால் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என நடிகை இலியானா கூறியுள்ளார். என்னைப் பற்றி யார் என்ன பேசினாலும் பொறுத்துக் கொள்ள முடியும். சமூக வலைத்தளத்தில் என்னை மோசமாக ட்ரோல் செய்தனர். பொதுவெளியாக இருந்ததால் பொறுத்துக்கொண்டேன். ஆனால் எனது காதலர் மற்றும் குடும்பத்தினரை விமர்சித்தால் என்னால் தாங்க முடியாது. எனக்கு குழந்தை பிறந்ததால் வாழ்க்கையே மாறியுள்ளது என்றார்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுகவுக்கு சுமார் ₹500 கோடியை லாட்டரி மார்டின் நன்கொடையாக கொடுத்தது தற்போது தெரிய வந்திருக்கிறது. இந்தத் தகவலை 2019ஆம் ஆண்டு விகடன் செய்தியாக வெளியிட்டது. ஆனால், அது பொய் செய்தி எனவும் அவதூறு எனவும் கூறி திமுக வழக்குத் தொடர்ந்தது. ஆனால், தற்போது மார்டின் 500 கோடி ரூபாய் கொடுத்ததை ஒப்புக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு திமுக தள்ளப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து, வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அந்தவகையில், திமுக கூட்டணியில் சிபிஐக்கு ஒதுக்கப்பட்ட நாகை, திருப்பூர் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அக்கட்சி அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சிபிஎம் சார்பில் ஏற்கெனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் காலியாக உள்ள 2,157 பணியிடங்களுக்கு ஆட்தேர்வு நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 18 வயது முதல் 42 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கணினி வழித் தேர்வு மே முதல் வாரத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்காக தமிழ்நாட்டில் 8 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க இணையதளம்: http://ssc.gov.in

இண்டியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவில் இன்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவை எதிர்கொண்ட அல்காரஸ், 7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.9.12 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.