India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடப்பு IPL தொடர் CSK-விற்கு பெரும் சோகமாக மாறியுள்ளது. நேற்றைய தோல்வியுடன் கிட்டத்தட்ட CSK-வின் ப்ளே ஆப் கனவும் கலைந்து விட்டது. 16 ஆண்டுகால CSK வரலாற்றில், தொடர்ச்சியாக 2 முறை ப்ளே ஆப்பிற்கு செல்ல முடியாமல், CSK வெளியேறுவது இதுவே முதல் முறை. இந்த மோசமான தோல்விக்கு என்ன காரணம் என நினைக்குறீங்க?
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு எல்லை கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூட்டை தொடங்கியுள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் உடனடியாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்கெனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கூட்டணியில் மேலும் சில புதிய கட்சிகள் இணையக்கூடும் என்று இபிஎஸ் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் பேசிய இபிஎஸ், பாஜகவுடன் தற்போது அதிமுக கூட்டணி அமைத்து இருப்பதாகவும், இக்கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணி அமையும் என்றும் கூறினார். ஆனால் அக்கட்சிகள் பெயரை அவர் கூறவில்லை. எந்த கட்சிகள் சேரும்? உங்கள் கருத்து என்ன?
நெல்லையில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த குழந்தையை கொன்ற தாய், 3 காதலர்களை போலீஸ் கைது செய்தது. மகாதேவன்குளத்தை சேர்ந்த பிருந்தாவுக்கு திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை இருந்தது. பிருந்தாவுடன், லிங்கசெல்வன், முத்துசுடர், பெஞ்சமின் உல்லாசமாக இருந்தபோது குழந்தை தண்ணீர் கேட்கவே, அடித்து கொலை செய்து, கீழே விழுந்து இறந்ததாக பிருந்தா, காதலர்கள் நாடகமாடியது தெரிந்ததால் கைது செய்யப்பட்டனர்.
ஹாலிவுட் நடிகை லார் பார்க் லிங்கன் (63) மறைவுக்கு புற்றுநோயே காரணம் என்று அவரின் மகள் தெரிவித்துள்ளார். த்ரில்லர் படங்களான Friday the 13th Part VII: The New Blood, “House II: The Second Story” உள்ளிட்டவற்றில் நடித்தவர் லார் பார்க் லிங்கன். அண்மையில் அவர் மரணம் அடைந்தார். அதற்கான காரணம் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், மார்பக புற்றுநோய் பாதிப்பே காரணம் என்று மகள் பைபர் லிங்கன் கூறியுள்ளார்.
7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. அதேபோல் மயிலாடுதுறை, கடலூர், அரியலூரிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் IMD கணித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கீழே கமெண்ட் பண்ணுங்கள்.
போப் பிரான்சிஸின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. ஏப். 21-ம் தேதி மறைந்த அவரது உடலுக்கு இதுவரை பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உள்பட 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் அஞ்சலி செலுத்தியுள்ளதாக வாடிகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போப் பிரான்சிஸின் உடலுக்கு காலை 10 மணிக்கு இறுதிச் சடங்கு நடக்க உள்ளது. இதனையடுத்து, அவருக்கு இறுதி விடை கொடுக்க மத குருக்கள் தயாராகி வருகின்றனர். #RIP
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குள் இருந்து கிளாம்பாக்கம் மற்றும் அக்கரைக்கு செல்லக்கூடிய 7 மாநகர பேருந்து சேவை நேற்று தொடங்கியது. பேருந்து சேவையை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சிவசங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கிளாம்பாக்கத்திற்கும், 30 நிமிடங்களுக்கு ஒருமுறை அக்கரைக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் SRH வீரர் முகமது ஷமி புதிய சாதனை படைத்துள்ளார். CSK அணிக்கு எதிரான போட்டியில் முதல் பந்திலேயே ஷேக் ரஷீத்தை அவர் அவுட்டாக்கினார். தான் வீசிய முதல் பந்திலேயே அதிக முறை விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஷமி(4) முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்து, உமேஷ் யாதவ், போல்ட், பிரவீன் குமார், மலிங்கா, புவனேஷ்குமார், டின்டா ஆகியோர் 3 முறை முதல் பந்தில் விக்கெட் எடுத்துள்ளனர்.
‘லைட்டா தலை வலிக்குது.. வா டீ குடிப்போம்’ என சொல்லாத ஆட்களே கம்மிதான். ஒரு நாளைக்கு 3-5 கப் டீ அல்லது காபி குடிப்பது ஆண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், ஒரு அபாய எச்சரிக்கையும் கொடுக்கிறார்கள். அதாவது, ஒரு நாளைக்கு 400 மி.கி. அளவுக்கு அதிகமாக caffeine எடுத்துக்கொண்டால், அது நாளடைவில் அமைதியின்மை, தூக்கமின்மையை அதிகரிக்குமாம். நீங்க டெய்லி எத்தனை கப் குடிப்பீங்க?
Sorry, no posts matched your criteria.