news

News April 1, 2025

தவறுகளை சரி செய்யுமா CSK

image

மோசமான கேப்டன்சி, மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பல், பேட்டிங் ஆர்டரில் மாற்றம் என பல தவறுகளை செய்ததால் CSK அணி, அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது. குறிப்பாக, தோனி பேட்டிங் ஆர்டரில் மாற்றம் பெரும் சர்ச்சையானது. இதனால், வரும் சனிக்கிழமை DCக்கு எதிரான போட்டியில், அனைத்து தவறுகளையும் சரி செய்தால் மட்டுமே CSK வெற்றிபெற முடியும். இல்லையென்றால், தகுதி சுற்றோடு வெளியேறும் என நெட்டிசன்கள் கொந்தளிக்கின்றனர்.

News April 1, 2025

ஆதவ் அர்ஜூனாவுக்கு மைத்துனர் எச்சரிக்கை

image

அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து வரும் ஆதவ் அர்ஜூனாவுக்கு அவரது மைத்துனரும், மார்ட்டின் மகனுமான ஜோஸ் சார்லஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பதவி, பொருளாதார பேராசையைத் தீர்த்துக்கொள்ள ஆதவ் செய்யும் கிறுக்குத்தனங்களுக்கும், எங்கள் குடும்பத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இனி எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

News April 1, 2025

தங்கம் விலை சவரன் ₹68,000ஐ கடந்தது

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.1) சவரனுக்கு ₹480 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,510க்கும், சவரன் புதிய உச்சமாக ₹68,080க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கடந்த சில நாள்களாக மாற்றமின்றி இருந்த நிலையில், இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ₹114க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,14,000க்கும் விற்பனையாகிறது.

News April 1, 2025

INDvsENG: முக்கிய கோப்பைக்கு ஓய்வு.. ஏன்?

image

இந்தியா – இங்கிலாந்து அணிகள் கடந்த 2007ஆம் ஆண்டில் இருந்து பட்டோடி டிராபியை விளையாடி வருகின்றன. Ex இந்திய வீரர் பட்டோடி பெயரில் நடத்தப்படும் இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுப்பதாக ENG கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. கிரிக்கெட்டில் சாதித்த மற்ற வீரர்களின் பெயரையும் பயன்படுத்துவதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு INDvsENG தொடரின் போது கோப்பைக்கான புதிய பெயர் அறிமுகப்படுத்தப்படும்.

News April 1, 2025

ஜிப்லியால் CHAT GPTக்கு குவிந்த பயனாளர்கள்

image

போதும்டா சாமி என்று சொல்லும் அளவுக்கு ஜிப்லி புகைப்படங்களால் நிறைந்துள்ளது சமூக வலைதளங்கள். இதனால் OPEN AI நிறுவனத்தின் CHAT GPT-யில் ஜிப்லி அறிமுகப்படுத்தப்பட்ட 5 நாட்களில் மட்டும் 10 லட்சம் புதிய பயனாளர்கள் அதில் இணைந்துள்ளதாக CEO சாம் அல்ட்மேன் தெரிவித்துள்ளார். ஜப்பான் கார்டூனை வைத்து உருவாக்கப்பட்ட ஜிப்லியை, அனைத்து தர மக்களும் தங்களுக்கு ஏற்றார் போல் உருவாக்கி ரசித்து வருகின்றனர்.

News April 1, 2025

தவெகவில் இணைந்த AAP மாநில நிர்வாகி தேவகுமார்

image

ஆம் ஆத்மியின் மாநில ஐடி விங் மாநிலச் செயலாளர் டாக்டர் தேவகுமார் தவெகவில் இணைந்தார். கடலூர் மண்டலத் தலைவராகவும் இருந்த தேவகுமார், விஜய்யின் தீவிர ரசிகராவார். புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்த அவர், நெய்வேலியில் உள்ள தனது ஹாஸ்பிடலில் தவெகவினருக்கு மருத்துவ செலவில் 25% கட்டணச் சலுகையை அறிவித்துள்ளதோடு, கடலூரில் கட்சி சார்பில் மருத்துவ முகாம்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

News April 1, 2025

வெயில் காலத்தில் பீர் குடித்தால் உடலுக்கு குளிர்ச்சியா?

image

வெயில் காலத்தில் <<15954126>>பீர் <<>>குடிப்பதால், உடலுக்கு குளிர்ச்சி, உடல் சூட்டை தணிக்கலாம் என மதுபிரியர்களிடம் தவறான புரிதல் நிலவுகிறது. வெயில் காலங்களில் பீர் குடித்தால் ரத்தக்குழாய்களின் அளவு அதிகரித்து நீர் சத்துக்கள் அதிக அளவில் வெளியேறும் என்றும் போதையால் தாகம் இருந்தாலும் தண்ணீர் அருந்தக்கூடிய உணர்வு ஏற்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே ஜில் பீர் மட்டுமின்றி மதுபானங்களை தவிர்ப்பதே நல்லது.

News April 1, 2025

எடப்பாடி – செங்கோட்டையன் மீண்டும் இணைந்தனரா?

image

இபிஎஸ் – செங்கோட்டையன் மீண்டும் இணைந்துவிட்டதாக அதிமுகவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதற்குக் காரணம், இணையத்தில் வைரலாகும் நேற்றைய ரமலான் வாழ்த்து பதிவுதான். செங்கோட்டையன் பெயரில் உள்ள அந்த X பக்கத்தில் இபிஎஸ் போட்டோவுடன் அந்தப் பதிவு போடப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக இபிஎஸ்ஸை லெப்ட் ஹேண்டில் டீல் செய்துவரும் செங்கோட்டையன், நேற்று, “மவுனம் அனைத்தும் நன்மைக்கே” எனக் கூறியது கவனிக்கத்தக்கது.

News April 1, 2025

வெயிலால் எகிறிய பீர் விற்பனை

image

வெயில் வெளுத்து வாங்குவதால், டாஸ்மாக்கில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. வழக்கமாக குளிர் காலத்தில் பிராந்தி, விஸ்கி, ரம் ஆகியவை அதிகமாகவும், பீர் விற்பனை குறைவாகவும் இருக்கும். தற்போது வெயில் அதிகரித்துள்ளதால், பிராந்தி, விஸ்கிக்கு பதில் மது பிரியர்கள் பீரை அதிகளவில் வாங்குகின்றனர். இதனால் சுமார் 30% பீர் விற்பனை அதிகரித்துள்ளது. அதுவும், பீர் சில்னஸ் குறைவாக இருந்தால் கூட வாங்க மறுக்கின்றனராம்.

News April 1, 2025

வெப்ப அலை எச்சரிக்கை

image

கோடை வெயில் வழக்கத்தை விடவும் உக்கிரமாகத் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில், ஜூன் வரை வட தமிழ்நாட்டில் இயல்பை விட வெப்பநிலை அதிகரித்து, வெப்ப அலை வீசக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது. இந்த வெப்ப அலைகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகள், வயதானவர்கள், நோய்வாய்பட்டவர்களுக்கு வெப்பம் சார்ந்த நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, அனைவரும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!