India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, இந்தியாவின் வரலாறு தெரியாது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ரவி, அண்ணாமலை ஆகியோர் தங்களது சுய விளம்பரத்திற்காக எதையாவது பேசி வருவதாக குற்றம்சாட்டிய அவர், அண்ணாமலை படித்து தான் ஐபிஎஸ் அதிகாரி ஆனாரா என கேள்வி எழுப்பினார். மேலும், மத்திய பாஜக அரசின் சர்வாதிகார ஆட்சியை மக்கள் துளி கூட விரும்பவில்லை என கடுமையாக சாடினார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் விளையாடாத தூபே இன்று விளையாடுகிறார். இன்றைய போட்டியில் தீக்ஷனா விளையாடவில்லை. இம்பேக்ட் வீரராக பதீரனா விளையாட உள்ளார். அணி விவரம்: ரச்சின், ருதுராஜ், ரஹானே, மிச்சேல், தூபே, ரிஸ்வி, ஜடேஜா, தோனி, ஷர்துள், முஸ்தஃபிசுர், தேஷ்பாண்டே.

மும்பையில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து சென்னை அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங்கை தொடங்க உள்ளது. இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 3 வெற்றி 2 தோல்வியுடன் சிஎஸ்கே 3 ஆவது இடத்திலும், 2 வெற்றி, 3 தோல்வியுடன் மும்பை 7 ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. LSG நிர்ணயித்த 162 ரன்கள் இலக்கை துரத்தி ஆடிய KKR 15.4 ஓவரில் 162/2 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. KKR தரப்பில் சால்ட் 89*, ஷ்ரேயஸ் ஐயர் 38* ரன்கள் எடுத்தனர். LSG தரப்பில் மோஷின் கான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த வெற்றியினால் KKR புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்தில் நீடிக்கிறது.

ஜோலார்பேட்டையை அடுத்த சோமநாயக்கன்பட்டி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சென்னையில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் 14ஆவது பெட்டி தடம் புரண்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் காரணமாக திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் வாணியம்பாடியில் நிறுத்தப்பட்டுள்ளது. தடம் புரண்ட ரயிலை மீட்க ரயில்வே ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு போலீசார் சம்மன் அனுப்பிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 6ஆம் தேதி, நெல்லை சென்ற விரைவு ரயிலில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ப்ளூ டைமண்ட் ஓட்டல் மேலாளர் சதீஷ் உள்ளிட்ட மூவர் கைதாகினர். இதையடுத்து அவர்களது வாக்குமூலம் அடிப்படையில் போலீசார் தற்போது சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில், கொல்கத்தா அணி வீரர் சால்ட் அரை சதம் கடந்தார். ஈடன் கார்டன் மைதானத்தில் முதலில் களமிறங்கிய LSG, 161/7 ரன்கள் எடுத்தது. 162 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய KKR அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறது. குறிப்பாக பில் சால்ட் 32 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸருடன் இதுவரை 52 ரன்கள் எடுத்துள்ளார். KKR அணி தற்போது வரை 11 ஓவர்களில் 105/2 ரன்கள் எடுத்துள்ளது.

கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் அண்ணாமலையை தனது அரசியல் வாரிசாக அறிவித்திருப்பாரென நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாஜகவில் இணைந்த அவர் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், எம்.ஜி.ஆர், ஜெ., மேல் மக்களுக்கு வந்த நம்பிக்கை போல அண்ணாமலை மேல் நம்பிக்கை வந்திருப்பதாகவும், இந்தி திணிப்பு என சொல்லி ஓட்டு போடவேண்டாமென்று சொல்லும் திமுகவினரின் பிள்ளைகள் இந்தி படித்து வருவதாகவும் சாடியுள்ளார்.

ஊட்டிக்கு தேர்தல் பரப்புரைக்காக அமைச்சர் உதயநிதி இன்று ஹெலிகாப்டரில் வந்திறங்கினார். அப்போது, அவரது ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நீலகிரி தொகுதியில் போட்டியிடும் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி பரப்புரை மேற்கொள்ள உள்ளார். முன்னதாக, நேற்று ராமநாதபுரத்தில் பிரசாரத்திற்காக அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரிலும் பறக்கும் படையினர் சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை பெருங்குடியில் ஆட்டோ ஓட்டுநர் விஜய் குமார் என்பவரது வீடு மின் கசிவு காரணமாக தீக்கிரையானது. இதனை அறிந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், அவருக்கு ₹30,000 பணம் மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொடுத்து உதவினர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், தவெக தொண்டர்கள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.