India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடப்பு ஐபிஎல் சீசனை வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே, அடுத்த 2 போட்டிகளில் பரிதாபமாக தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில், ஜேமி ஓவர்டனுக்கு பதிலாக அணியில் கான்வே இடம் பெற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் குறிப்பிட்டுள்ளார். பவர்பிளே ஓவர்களில் அஸ்வின் பந்துவீசுவதை தவிர்க்கலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார். சீக்கா டிப்ஸ் பலன் அளிக்குமா?
ஜோதிட சாஸ்திரப் படி, குரு பகவான் வரும் மே 14-ம் தேதி மிதுன ராசிக்கு பெயர்கிறார். அதனால் பின்னர் நன்மைகள் பெறக்கூடிய ராசிகள்: *கும்பம்: தொழில்ரீதியான வெற்றி, அதிர்ஷ்டத்தின் ஆதரவு *தனுசு: புதிதாக வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு, நல்ல செய்தி தேடி வரும், ஆன்மிகத்தில் ஆர்வம் *மேஷம்: மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கும், நிலம் தொடர்பான தொழிலில் முன்னேற்றம், வெளிநாட்டு நிதி ஆதாயங்கள் பெற வாய்ப்பு.
பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உணவு டெலிவரியில் ஏற்பட்ட மந்தநிலை மற்றும் அத்துறையில் செயற்கை நுண்ணறிவை(AI) ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மோசமான செயல்திறன் மற்றும் சரியான நேரத்தில் செயல்படாதது உள்ளிட்டவற்றை காரணமாகக் கூறி இந்த நடவடிக்கையில் சொமேட்டோ நிறுவனம் இறங்கியுள்ளதாம்.
ம.பி.யில் முக்கிய வழிபாட்டுத் தலங்கள் உள்ள 19 நகரங்களில் மது விற்பனைக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், உஜ்ஜைன், ஓம்காரேஸ்வர் உள்ளிட்ட 19 நகரங்களில் மது விற்பனைக்கு ஏப்.1 முதல் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. அந்த நகரங்கள் அனைத்தும் புனிதமானவை, அவை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே இந்த முடிவு எடுக்க காரணம் என CM மோகன் யாதவ் கூறியுள்ளார்.
வெளிநாட்டு குழந்தைகளை சட்டவிரோத நோக்கத்துடன் நமது நாட்டுக்கு அழைத்து வருவது குறித்து பிஎன்எஸ் சட்ட 141ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண் எனில் 18 வயதுக்கு குறைவான வயதுடையோரையும், பெண் எனில் 21 வயதுக்கு குறைவான வயதுடையோரையும் உள்நோக்கத்துடன் (அ) வேறு காரணத்திற்காக அழைத்து வரக்கூடாது. அப்படி அழைத்து வருவோருக்கு 10 ஆண்டு சிறை, அபராதம் விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் ஒரு 3 நாள்களுக்கு, போன் பயன்படுத்துவதை நிறுத்தினால், ஆச்சரியகரமான மாற்றம் ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளைஞர்கள் சிலரை 72 மணிநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை நிறுத்தி சோதித்தனர். அப்போது அவர்களின் மூளை அதிசயிக்கத்தக்க முறையில் தன்னைத் தானே ரீபூட் செய்துகொண்டு சிறப்பாக செயல்பட்டதை கண்டறிந்தனர். நீங்களும் ட்ரை பண்ணலாமே?
ஏப். 5-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை – டெல்லி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 10.15 மணிக்கு ஆன்லைனில் தொடங்க உள்ளது. வழக்கம்போல், குறைந்தபட்ச டிக்கெட் ரூ.1,700-ஆகவும், அதிகபட்ச டிக்கெட் ரூ.7,500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் புக்கிங் ஸ்டார்ட் ஆன சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்றுத் தீர்ந்துவிடும். நாளை எப்படி இருக்குமோ?
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆங்கிலத்தில் பேச சிரமப்படுகின்றனர். இந்த குறையை போக்க மாநில அரசு, அடுத்த கல்வியாண்டில் ஆங்கில தொடர்புதிறன் பயிற்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆங்கிலத்தில் திறமை வாய்ந்த, புதிய வழிகள் மூலம் போதிக்கும் ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்கள் மூலம் 6-8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில தொடர்புதிறன் பயிற்சியை கொடுக்க அரசு பரிசீலித்து வருகிறது.
தகுதியுடைய விடுபட்ட பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை 3 மாதத்திற்குள் அளிக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் முதலில் அறிவித்தார். இதே கருத்தையே அடுத்தடுத்து செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் உதயநிதி தெரிவித்தே 2 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அமைச்சர்கள் 3 மாதங்கள் என பொதுவாக தெரிவிப்பதை பார்க்கும் பெண்கள், இன்னும் எத்தனை 3 மாதங்கள் ஆகும் என கேள்வி கேட்கின்றனர்.
SBI வங்கியில் பணியில் சேர்வதற்கான Associates Mains தேர்வுகள் ஏப்ரல் 10 மற்றும் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு தகுதி பெற்றோருக்கான அட்மிட் கார்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. <
Sorry, no posts matched your criteria.