news

News April 6, 2024

ஆட்சிக்கு வர மாட்டோம் என காங்கிரசுக்கு தெரியும்

image

ஆட்சிக்கு வர மாட்டோம் என காங்கிரசுக்கே தெரியும் என்று மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பிரகலாத் ஜோஷி கிண்டலடித்துள்ளார். காங்கிரஸ் கட்சி நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது குறித்து அவர் கருத்து தெரிவித்தார். அப்போது, ஆட்சிக்கு வர மாட்டோம் என்பதால் வாக்குறுதிகளை செயல்படுத்த வேண்டியதில்லை என்று காங்கிரசுக்கே தெரியும், அதனால் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது என்றார்.

News April 6, 2024

100 நாள் வேலை திட்டத்தால் நாடு நாசமானது

image

மகளிருக்கு ₹1000 உரிமைத் தொகையை கொடுத்துவிட்டு, அதை சொல்லியே வாக்கு கேட்பது எப்படி சேவையாகும்? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். காஞ்சிபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், மக்கள் மீது வரிச்சுமையை திணித்து, வாழ்வது கடினம் என்ற நிலைக்கு தள்ளிவிட்டதாக வேதனை தெரிவித்தார். மறுபடியும் 100 நாள் வேலை திட்டத்தை பிடித்து தொங்குவதாகவும், இதனால் நாடு நாசமானதே தவிர வேறொன்றும் ஆகவில்லை எனவும் சாடினார்.

News April 6, 2024

தமிழகத்தில் தேர்தலுக்கு பின் மீண்டும் தேர்தல்

image

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவர் மறைந்ததால், தற்போது விக்கிரவாண்டி தொகுதி காலியாகி விட்டது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பின்பு அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும். ஆனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தல் வர வாய்ப்பில்லை. தேர்தல் முடிவு வெளியான பிறகு இடைத்தேர்தல் நடைபெறும் என தெரிகிறது.

News April 6, 2024

நம்ப முடியாத தேர்தல் அறிக்கை

image

காங்., வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதி இயற்கைக்கு முரணானது என்று EX மினிஸ்டர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார். இந்தியாவில் சுமார் 10 கோடி ஏழை குடும்பங்கள் இருக்க வாய்ப்புள்ளது. இவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் நிதி கொடுக்க வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் கோடி தேவைப்படும். இந்தியாவின் வருவாய் மற்றும் கடனை கணக்கீடு செய்யாமல், மக்களை ஏமாற்றும் வகையில் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளதாக விமர்சித்தார்.

News April 6, 2024

கமிஷனுக்காக அமைக்கப்பட்டது I.N.D.I.A. கூட்டணி

image

கமிஷனுக்காக அமைக்கப்பட்டது I.N.D.I.A. கூட்டணி என்று மோடி விமர்சித்துள்ளார். உ.பி.யில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், I.N.D.I.A. கூட்டணி கமிஷனுக்காக அமைக்கப்பட்டது, ஆனால் பாஜக கூட்டணி மற்றும் தனது அரசு திட்டங்களுக்காக உருவாக்கப்பட்டது என்றார். அரசியலை பாஜக பின்பற்றவில்லை, தேசியவாத கொள்கையை பின்பற்றுகிறது என்றும், இதனால் மக்களின் நம்பிக்கை, இதயங்களை வென்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

News April 6, 2024

₹100 கோடி வசூலை கடந்த ‘ஆடு ஜீவிதம்’

image

மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘தி கோட் லைஃப்’. தமிழில் ‘ஆடு ஜீவிதம்’ என்ற பெயரில் இப்படம் வெளியானது. 5 மொழிகளில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆஃபிஸில் ₹100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புகழ்பெற்ற ஆடு ஜீவிதம் நாவலை அடிப்படையாகக் கொண்டு அதேபெயரில் இப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News April 6, 2024

BREAKING: சம்பளம் ₹600 ஆக உயர்த்தப்படும்

image

மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, சிபிஎம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், மகளிர் இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும், 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்துவதுடன், ஊதியமும் ₹600ஆக உயர்த்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களை அமல்படுத்துவோம், ஹிந்தி மொழித்திணிப்பை எதிர்ப்போம், விவசாய கடன் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 6, 2024

கைதாகிறாரா லாலு பிரசாத் யாதவ்?

image

ஹேமந்த் சோரன், அரவிந்த் கெஜ்ரிவாலைத் தொடர்ந்து பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவும் சிறைக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. 1995இல் போலி ஆவணங்கள் மூலம் சட்ட விரோதமாக ஆயுதங்கள் & வெடி பொருட்கள் வாங்கிய வழக்கில், லாலுவை கைது செய்ய க்வாலியர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ள சூழலில் இந்த நீதிமன்ற உத்தரவு பிஹாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News April 6, 2024

‘உடன்பிறப்பே 2’ அறிவிப்பு விரைவில்

image

ஜோதிகாவின் 50ஆவது படமாக 2021 இல் வெளிவந்தது ‘உடன்பிறப்பே’ திரைப்படம். அண்ணன் – தங்கை இடையிலான நெஞ்சை உருக்கும் சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்த இந்த படத்தின் 2ஆம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இயக்குநர் இரா.சரவணனுக்கு பெரிய தொகை ஒன்று முன்பணமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். இப்படம் அமேசான் OTT தளத்தில் நல்ல டி.ஆர்.பி. ரேட்டிங்கை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

News April 6, 2024

தீப்பெட்டி சின்னத்தை தேர்வு செய்தது ஏன்?

image

தீப்பெட்டி சின்னத்தை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ பரபரப்பு பேட்டியளித்துள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி 74 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டார். பின்னர் பேட்டியளித்த அவர், கட்சியின் தனித்தன்மையை பாதுகாக்க தனி சின்னத்தை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாகவும், ஆதலால் தீப்பெட்டி சின்னத்தை தேர்வு செய்ததாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!