news

News April 11, 2024

திமுக, அதிமுக செய்த சாதனை இதுதான்

image

திமுக, அதிமுக ஆட்சியில் செய்த சாதனை மக்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கியதுதான் என அன்புமணி விமர்சித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டுமெனில் திமுகவை தோற்கடிக்க வேண்டும். திமுக தோல்வியடைந்தால்தான் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்கும் என்றார். மேலும், சேலத்தில் திமுக கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை என்றார்.

News April 11, 2024

காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை

image

மதுரையில் காதல் விவகாரத்தில் கார்த்திக் (27) என்ற இளைஞரை பெண்ணின் தந்தையும், சகோதரனும் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திக்கும் அந்தப் பெண்ணும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், கார்த்திக் லோடு மேன் வேலை பார்த்து வந்ததால் பெண் வீட்டில் கடுமையான எதிர்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில், கார்த்திக்கை அரிவாள் மற்றும் கத்தியால் கொன்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News April 11, 2024

மான்டி கார்லோ மாஸ்டர்ஸில் சுமித் நாகல் தோல்வி

image

மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வியை தழுவினார். பிரான்சில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்று போட்டியில், உலக தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ள டென்மார்க்கின் ஹோல்கர் ரூனை எதிர்கொண்ட சுமித் நாகல், 3-6 6-3 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். 49 ஆண்டுகளுக்கு பிறகு மான்டி கார்லோ தொடரில் விளையாடிய முதல் இந்தியர் என்ற பெருமை சுமித் நாகலையே சேரும்.

News April 11, 2024

உதயநிதியின் முதல்வர் கனவு பலிக்காது

image

திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டுமே பரிசாக கிடைத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். ஆரணியில் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், “என்னை அவமதிப்பதாக நினைத்துக்கொண்டு விவசாயிகளை ஸ்டாலின் கொச்சைப்படுத்தி வருகிறார். கருணாநிதி முதல்வர், அவருக்கு பிறகு ஸ்டாலின் வந்திருக்கிறார். அடுத்து உதயநிதி வர முயற்சிக்கிறார். ஆனால் அது நடக்காது” என்றார்.

News April 11, 2024

பாஜக நமது உரிமைகளை பறிக்க நினைக்கிறது

image

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொஞ்சம் கொஞ்சமாக நமது உரிமைகளை பறிக்க நினைக்கிறது என தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடி தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், வெள்ள நிவாரண நிதியாக ஒரு ரூபாய் கூட மத்திய அரசு கொடுக்கவில்லை. ஆனால், தேர்தலுக்காக பிரதமர் மோடி தமிழ்நாட்டை சுற்றி வருகிறார். மதக் கலவரத்தை உருவாக்கி வாக்குகளை பெறலாம் என நினைக்கிறது என பாஜகவை விளாசியுள்ளார்.

News April 11, 2024

பனங்கற்கண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

image

பதனியை நன்கு காய்ச்சி பனங்கற்கண்டு தயாரிக்கப்படுகிறது. பனங்கற்கண்டு இருமல், மார்புச்சளி தொண்டை கரகரப்பு போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்தது. பனங்கற்கண்டை வாயில் போட்டு, அதை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து அந்த உமிழ் நீரை விழுங்கி வந்தால், வாய்ப்புண், தொண்டை வலி, வாய் துர்நாற்றம் போன்றவை முற்றிலுமாக நீங்கும். கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் புண்களை இவை சரி செய்ய உதவுகிறது.

News April 11, 2024

IPL: மும்பை அணி பவுலிங்

image

வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற MI கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் RCB பேட்டிங் செய்ய உள்ளது. இதுவரை ஆடிய போட்டிகளில் இரு அணிகளும் 1 வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், புள்ளிப் பட்டியலில் MI 8ஆவது இடத்திலும், RCB 9ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

News April 11, 2024

பாமகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

image

தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் மாற்றுக்கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், பாமகவில் இருந்து விலகிய முன்னாள் மாநில துணைத் தலைவர் சீனிவாசன், திண்டுக்கல் வடக்கு மாவட்ட செயலாளர் ஜோதி முத்து உட்பட பலர் திமுகவில் இணைந்துள்ளனர். நேற்று தேனியில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இவர்களுடன் மேலும் பலரும் திமுகவில் இணைந்துள்ளனர்

News April 11, 2024

தேர்தலுக்கு பிறகு பாஜக காணாமல் போகும்

image

அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் காணாமல் போயுள்ளனர், தேர்தலுக்கு பிறகு பாஜக காணாமல் போகுமென முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு பின் அதிமுக காணாமல் போகுமென அண்ணாமலை விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி அளித்துள்ள ஜெயக்குமார், “நோட்டாவுக்கு கீழ் பாஜக வாக்குகள் செல்லாமல் இருப்பதை அண்ணாமலை கவனிக்க வேண்டும். பயம் இருப்பதால் தான் பிரதமரை அழைத்து வருகின்றனர்” என்றார்.

News April 11, 2024

மொபைல் ரீசார்ஜ் கட்டணம் உயர்கிறது

image

தேர்தலுக்கு பிறகு ரீசார்ஜ் கட்டணத்தை 15 – 17% உயர்த்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. இந்தியாவில் தற்போது ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளன. அதே நேரம் பிஎஸ்என்எல் என்ற பொதுத்துறை நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ரீசார்ஜ் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!