India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணிக்கு ஜெயின் மகா சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால், முக்கிய அரசியல் கட்சிகளுக்கு சிறு சிறு கட்சிகள் மற்றும் சங்கங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த ஜெயின் மகா சங்க நிர்வாகிகள் தங்களது ஆதரவுக் கடிதத்தை வழங்கினர்.

2024ஆம் ஆண்டு இந்தியா 6.8% பொருளாதார வளர்ச்சியடையும் என்று IMF கணித்துள்ளது. அதேபோல, 2025ஆம் ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது மற்ற அனைத்து நாடுகளையும் விட மிக அதிகம். 2023ஆம் ஆண்டில் இந்தியா 7.8 சதவீத வளர்ச்சியை கண்டது. ஒப்பீட்டளவில் அமெரிக்கா – 2.5%, ஜப்பான் – 1.9%, கனடா – 1.1%, ரஷ்யா – 3.6% வளர்ச்சியை மட்டுமே கண்டன.

திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றி வருவதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். படப்பை பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், அனைத்து மாவட்டங்களும் சீரான வளர்ச்சியை பெற வேண்டும் என்பதுதான் நமது குறிக்கோள் எனக் கூறினார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தொழில் வளத்தை பெருக்க முனைப்புடன் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழகத்தில் இருந்து தேர்வானவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நாட்டிற்கு சேவை செய்யும் பயணத்தை தொடங்கியுள்ளவர்களை வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் நேர்மையான மாற்றம் மற்றும் முன்னேற்றத்தை UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கொண்டு வர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஊழலை ஒழிக்க, ஊழல்வாதிகளை அழிக்க பாஜகவை ஆதரிக்க வேண்டும் என ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து முசிறியில் பிரசாரம் செய்த அவர், ஊழல்வாதிகள் அனைவரும் INDIA கூட்டணியில் உள்ளதாக விமர்சித்தார். ஊழல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வேலைகளை செய்து வரும் திமுக ஆட்சியால், தமிழக மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் இதுவரை நடக்கவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

நடப்பு நிதியாண்டிலும் (2024-2025) ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்பில்லை என்று மோர்கன் ஸ்டான்லி வங்கி தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு பின்னர் நிலவும் மிக அதிக பணவீக்கம் காரணமாக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மிக அதிகமாக (6.5%) நிர்ணயித்துள்ளது. இதனை குறைத்தால்தான் நாம் வாங்கும்/வாங்கிய கடன்களின் மீதான வட்டி குறையும். இந்த அறிக்கை லோன் வாங்கியோரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

மகளிருக்கு இலவசப் பேருந்து உள்பட செய்ய முடியாது என நினைத்தத் திட்டங்களை செய்து காட்டியது திமுக அரசு என கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி செய்துங்கநல்லூரில் பிரசாரம் மேற்கொண்ட அவர், மாணவர்களின் படிப்பு தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக புதுமைப் பெண் திட்டம் மூலம் மாணவிகளுக்கு ₹1000, நான் முதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு ₹1000 என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

ஐபிஎல்லில் இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்றுள்ள RR அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் KKR அணி பேட்டிங்கை தொடங்க உள்ளது. புள்ளிப் பட்டியலில் RR முதல் இடத்திலும், KKR 2ஆவது இடத்திலும் உள்ளன. இன்று வெற்றிபெற்றால் KKR முதல் இடத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?

தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18, 20 தேதிகளில் மாலை 4:45க்கு தாம்பரத்தில் இருந்து கிளம்பும் ரயில் மறுநாள் குமரியை அடையும். குமரியில் இருந்து ஏப்.19, 21 இல் இரவு 8:30க்கு புறப்படும் ரயில் மறுநாள் சென்னையை அடையும். இதேபோல் ஏப்.18, 20 தேதிகளில் சென்னை – கோவைக்கும், ஏப்.19,21 இல் கோவை – சென்னைக்கும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மக்களை விலைக்கு வாங்க முடியாது என டிடிவி தினகரன் உறுதியளித்தார். மக்களவைத் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் போடிநாயக்கனூரில் பேசிய தினகரன், “₹200, ₹300, ₹500 பணம் கொடுத்து உறவினர்களை அசிங்கப்படுத்த நினைக்கவில்லை. தான் வெற்றிபெற்றால் தேனி தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக” உறுதியளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.