India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரஷ்ய அதிபர் புடின் உடனான நேற்றைய சந்திப்புக்கு டிரம்ப் 10/10 ரேட்டிங் கொடுத்துள்ளார். ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கான வரி விதிப்பு குறித்து அடுத்த 2 – 3 வாரங்களில் முடிவெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புடின் உடனான பேச்சுவார்த்தைக்கு முன்னர் கடுமை காட்டிய டிரம்ப், தற்போது மென்மையை கடைபிடிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், இந்தியா மீதான 50% வரியை குறைக்கலாம் எனவும் கருதுகின்றனர்.
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அதிகாலை முதலே ED அதிரடி சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில், சேப்பாக்கம் MLA-க்கள் விடுதியில் உள்ள ஐ.பெரியசாமியின் அறையில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனிடையே, MLA-க்கள் விடுதியில் அத்துமீறி நுழைந்ததாக சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் ED அதிகாரிகள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
யுனிவர்ஸ் கான்செப்ட், அசத்தலான ஸ்கிரீன்பிளே, பயங்கரமான ஹீரோ பில்டப் என தனி பார்முலாவை உருவாக்கி மோஸ்ட் வான்டட் இயக்குநராக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவரின் இயக்கத்தில் ‘கூலி’ வெளிவந்து 2 நாள்கள் கடந்து விட்ட நிலையில், படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. பலரும் இந்த படம் தங்களை பெரிதாக ஈர்க்கவில்லை எனவும் கூறுகின்றனர். நீங்க சொல்லுங்க லோகேஷ் இயக்கிய பெஸ்ட் படம் எது.. Worst படம் எது?
வாக்கு திருட்டு விவகாரத்தை மடைமாற்றம் செய்யவே எதிர்கட்சியினர் மீது BJP அரசு ED-யை ஏவி விட்டுள்ளதாக RS பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவின் வாசிங் மெஷினில் கழுவி, வழக்குகளை வாபஸ் பெற திமுகவினர் கோழைகள் இல்லை எனவும் மோடி, ED எதற்கும் அஞ்ச மாட்டோம் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளார். <<17422112>>அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு<<>> சொந்தமான இடங்களில் ED சோதனை நடந்து வரும் நிலையில், திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளை SBI உயர்த்தியுள்ளது. இதுவரை, 7.50% – 8.45% ஆக இருந்த வட்டி விகிதம் தற்போது 7.50% – 8.70% என மாற்றப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஆக.1 முதலே அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த வட்டி விகித உயர்வு ஏற்கெனவே கடன் வாங்கியவர்களுக்கு பொருந்தாது எனவும், புதிதாக கடன் பெறுவோர்களுக்கு இந்த உயர்வு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது தாயார் சரஸ்வதியின் பிறந்தநாளின்போது அன்புமணி, ராமதாஸுடன் இருக்கும் போட்டோ வைரலானது. இதனால் விரைவில் உள்கட்சி பிரச்னை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த நிகழ்வின்போது அன்புமணி வணக்கம் கூறினார், நானும் வணக்கம் சொன்னேன், வேறேதும் பேசவில்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், திட்டமிட்டபடி தனது தலைமையில் நாளை காலை 9.30 மணிக்கு பொதுக்குழு நடைபெறவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
2015-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் சேவாக். ஆனால், 2008-09 காமன்வெல்த் போட்டிகளின்போது தோனி தன்னை அணியில் இருந்து நீக்கியபோதே ஓய்வை அறிவிக்க நினைத்ததாக சேவாக் கூறியுள்ளார். ஆனால், அப்போது சச்சினிடம் இதுகுறித்து ஆலோசித்தபோது, உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என கூறியதாகவும், அதன்பிறகு கோப்பை வென்ற 2011 உலகக்கோப்பை அணியிலும் இடம்பெற்று நல்ல ஸ்கோர் செய்ததாக தெரிவித்துள்ளார்.
வனவாசத்தின் போது, தாகத்தால் தவித்த சீதைக்கும், ராமருக்கும் மயில் ஒன்று உதவ முன்வந்தது. நீர் இருக்கும் இடம் வெகுதூரம் என்பதாலும், அடர்ந்த காடு என்பதாலும், அவர்கள் வழி தவறி போய்விட கூடாது என்பதற்காக தனது இறகை உதிர்த்துக் கொண்டே சென்றது மயில். நீர் நிலையை ராமர் அடைந்த போது, மயில் இறந்து கிடப்பதை பார்த்தார். அதன் தியாகத்திற்காக, கிருஷ்ணர் அவதாரத்தில் தலையில் மயிலிறகை சூடிக் கொண்டார் என்பது ஐதீகம்.
கூலி படத்தில் நடித்ததற்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமீர் கான் ₹20 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக சமூக வலைதளத்தில் செய்தி பரவியது. இந்நிலையில், இதை மறுத்துள்ள ஆமீர் கான், கூலி படத்துக்காக நான் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. ரஜினி சார் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறேன். அவருடன் நடித்ததே எனக்குப் பெரிய பரிசுதான். அதனால் பணம் பற்றி யோசிக்கக் கூட முடியவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.
எல்லோரும் எம்ஜிஆராக நினைக்கிறார்கள்; ஆனால் எப்போதும் ஒரே எம்ஜிஆர் தான் என்று விஜய்யை செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். பனையூரில் இருந்து அரசியல் செய்யும் விஜய், முதலில் களத்துக்கு வர வேண்டும் எனக் கூறிய அவர், மாநாடு, செயற்குழுவில் பேசிய இமேஜை வைத்து வெற்றி பெறலாம் என்று விஜய் நினைத்தால், அதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.