India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முதல்நாள் நிகழ்வில் மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசியுள்ளார் முர்மு. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 11 கோடிக்கும் அதிகமானோர், இலவச மருத்துவ சிகிச்சையை பெற்றிருப்பதாக கூறிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 10 வருடங்களில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி நடைபெற்ற SI பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. 1,299 காலிப் பணியிடங்களுக்கான இந்த தேர்வை 1,78,000 பேர் எழுதினர். இதில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பிப்.24 – மார்ச் 2-ம் தேதிவரை உடல் தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள <

<<18980498>>விமான விபத்தில்<<>> மகாராஷ்டிர மாநில துணை முதல்வர்(DCM) அஜித் பவார்(66) உயிரிழந்தது வேதனையளிப்பதாக CM ஸ்டாலின் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அஜித் பவாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், சரத் பவார், சுப்ரியா சுலே மற்றும் விபத்தில் உயிரிழந்த மற்றவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

அரசியலில் தவெகவை இயங்கவிடாமல் செய்துவிட்டதால்தான் TTV அக்கட்சிக்கு செல்லவில்லை என KC பழனிசாமி கூறியுள்ளார். ஜனநாயகன், CBI விவகாரங்களால் விஜய் வெளியில் வரவில்லை என்ற அவர், KAS தவெகவை நம்பி ஏமாந்துவிட்டதாகவும் பேசியுள்ளார். மேலும், ஆதவுக்கு கீழ்தான் தன்னுடைய இடம் என்பது தெரியவந்ததால் KAS கதறி அழவே ஆரம்பித்துவிட்டார் எனவும், இதனால்தான் யாரும் தவெகவுக்கு செல்லவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

இனி ஆதார் கார்டில் போன் நம்பரை அப்டேட் செய்ய, இ சேவை மையத்தை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. இன்று முதல் சேவைக்கு வந்துள்ள <

பாராமதி விமான விபத்தில் பலியான 5 பேரின் விவரங்கள் வெளியாகியுள்ளது. DCM அஜித் பவாருடன், விதிப் யாதவ், பிங்கி மாலி மற்றும் விமானிகள் சுமித் கபூர், சம்பவி பதக் ஆகியோர் அகால மரணமடைந்துள்ளனர். அவர்களது உடல்கள் பாராமதியில் உள்ள ஹாஸ்பிடலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு BJP, NCP உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

தங்கம் விலையை தொடர்ந்து இன்று (ஜன.28) வெள்ளி விலையும் புதிய உச்சம் தொட்டுள்ளது. 1 கிராம் வெள்ளி ₹13 உயர்ந்து ₹400-க்கும், 1 கிலோ வெள்ளி ₹13,000 உயர்ந்து ₹4 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. இதனால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேநேரம், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அஜித் பவார் விமான விபத்திற்கான காரணம் இன்னும் வெளிவராத நிலையில், விமானத்தின் ‘Black box’ மீட்கபட்டுள்ளதாம். அதனை சரிபார்த்த பிறகே, என்ன பிரச்னை ஏற்பட்டது என்பது தெரியவரும். இந்த ‘Black box’-ல் விமானத்தின் வேகம், எரிபொருள் உள்பட சுமார் 80 டெக்னிக்கல் விவரங்களில் தொடங்கி, விமான காக்பிட்டில் கேட்கும் சத்தம் முதல் கட்டுப்பாட்டு மையத்தின் அறிவுறுத்தல்கள் வரை அனைத்தும் ரெக்கார்ட்டாகி இருக்கும்.

விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிரா DCM அஜித் பவாருக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மக்கள் தலைவராக இருந்த அஜித் பவார் சமூகத்தின் அடிமட்டம் வரை தொடர்பில் இருந்தவர் எனவும் கூறியுள்ளார். ஏழைகள் மற்றும் நலிந்தவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் கொண்டிருந்த ஆர்வம் அளப்பரியது என குறிப்பிட்ட மோடி, அவரை இழந்து வாழும் குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுக்கு தனது ஆறுதலை தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.