India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மாநில அரசியலுக்கு திரும்ப விரும்புவதாக மத்திய தொழில் துறை அமைச்சரும், மஜத தலைவருமான குமாரசாமி தெரிவித்துள்ளார். ஹாசனில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், மாநில விவசாயிகளுக்கு செய்ய விரும்பிய சிலவற்றை தன்னால் செய்ய முடியவில்லை என வேதனையுடன் கூறியுள்ளார். இதனால், அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு 2028 பேரவைத் தேர்தலுக்காக மாநில அரசியலில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘ஜன நாயகன்’ மேல்முறையீட்டு வழக்கில் ஜன.27-ல் மெட்ராஸ் HC தீர்ப்பு அளிக்கவுள்ளது. இதில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினால் வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்படும். அவர் வழக்கை புதிதாக விசாரித்து தீர்ப்பளிப்பார். அத்தீர்ப்பு முந்தைய இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புகளில் ஒன்றுடன் ஒத்துப்போனால், அது பெரும்பான்மையாக கருதப்படும். இதற்கு காலம் ஆகும் என்பதால் பட ரிலீஸ் மேலும் தாமதமாகலாம்.

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வாக்களிப்பது ஒரு புனிதமான அரசியலமைப்பு சிறப்புரிமை மட்டுமல்ல எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான கடமை எனக் கூறியுள்ளார். முதல் முறையாக வாக்குரிமை பெற்றுள்ள இளைஞர்களை ஒட்டுமொத்த சமூகமும் கொண்டாட வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், வாக்காளராக ஒருவர் மாறுவதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.

ஆண்டிபட்டியில் போட்டியிட உள்ளதாக கடந்த மாதம் அறிவித்த <<18948139>>TTV தினகரன்<<>>, திடீரென தான் தேர்தலில் போட்டியிடவில்லை என விலகியுள்ளார். தனியார் TV-க்கு அளித்த நேர்காணலில் இதனை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து விசாரித்தபோது, வரும் தேர்தலில் ஆண்டிபட்டியில் தனது மனைவி அனுராதாவை களமிறக்க TTV திட்டமிட்டுள்ளாராம். 2024 LS தேர்தலின்போது தேனி தொகுதியில் களமிறங்கிய TTV-க்கு அனுராதா தீவிர பிரசாரம் செய்தார்.

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பில்லை என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு பதிலாக அவருக்கு பாஜக தேசிய பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படலாம் என தகவலறிந்தவர்கள் கூறுகின்றனர். ஒருவேளை அப்படி நிகழ்ந்தால், தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு இது பயனளிக்கும் என கருதுகிறார்களாம். நிதின் நபினை தொடர்ந்து இளைஞரான அண்ணாமலைக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?

சிறப்பு ஓய்வூதியம் பெற்றுவரும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் உயிரிழந்தால், குடும்ப ஓய்வூதியமாக ₹1,200 வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். குறு அங்கன்வாடி பணியாளர்கள், வன களப்பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் உயிரிழந்தால் குடும்ப ஓய்வூதியமாக ₹1,100 வழங்கப்படும் எனவும் CM பேரவையில் அறிவித்தார்.

ஆட்சியில் பங்கு தர வேண்டும் எனப் பேசி, திமுக-காங்கிரஸ் கூட்டணி சர்ச்சையில் மையப்புள்ளியாக இருந்தவர் மாணிக்கம் தாகூர். இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான கருத்துகளை பொதுவெளியில் பேசக்கூடாது என ராகுல் தெரிவித்ததாக மாணிக்கம் தாகூர் MP கூறியுள்ளார். மேலும், இதுதொடர்பாக தனது கருத்துகளை ராகுலிடம் தெளிவாக விளக்கிவிட்டதாகவும் அவர் பேசியுள்ளார்.

WhatsApp-ல் இனி பெற்றோர்கள், ‘Secondary Accounts’ வசதி மூலம் தங்களது குழந்தைகளுக்கு தனி அக்கவுண்ட்கள் உருவாக்கலாம். இந்த அக்கவுண்ட்களுக்கு தனி Status கிடையாது. அதேபோல, Contacts-ல் இல்லாதவர்களுடன் Chat பண்ண முடியாது. மெசேஜ் வசதியை குழந்தைகளுக்கு பெற்றாலும், அறிமுகமில்லாதவர்களுடன் பேசுவது, தவறான மெசேஜ்கள் வருவது போன்ற அபாயங்களைத் தவிர்க்கவும் இந்த Parenting Control அளிக்கப்படுகிறது.

நேற்று <<18942850>>OPS-ஐ அமைச்சர் சேகர் பாபு <<>>சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், திமுகவில் இணைவதற்கு சில கோரிக்கைகளை OPS வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது ஆதரவாளர்கள் வெல்லமண்டி நடராஜன், MLA அய்யப்பனுக்கு தேர்தலில் போட்டியிட 2 சீட்டும், மகன் ரவீந்திரநாத்துக்கு ராஜ்யசபா சீட்டும் தருமாறு கோரினாராம். OPS இணைந்தால் தென்மாவட்டங்களில் கூட்டணி பலப்படும் என கருதி திமுகவும் பச்சைக்கொடி காட்டியுள்ளதாம்.
Sorry, no posts matched your criteria.