India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மூத்த குடிமக்கள், கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு தேசிய சமூக உதவி திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத்துக்கு அளிக்கப்படும் மாதாந்தர பங்களிப்பு ரூ.1,000ஆக உயர்த்தப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு எளிதில் சட்ட உதவி கிடைக்க வழிவகை, சாலை மற்றும் ரயில் போக்குவரத்தில் மீண்டும் கட்டண சலுகை வழங்கப்படும் எனவும் காங்கிரஸ் கூறியுள்ளது.

அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும் பணிகள் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. அரசுப் பணிகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணிகள், ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும் முறை ரத்து செய்யப்படும். அந்தப் பணி நியமனங்கள் முறைப்படி நடைபெறுவது உறுதி செய்யப்படும் எனக் கூறியுள்ளது.

ஜிஎஸ்டி சட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஜிஎஸ்டி 2.0 அறிமுகப்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மாநில அரசுகளுடன் கலந்துபேசி புதிய கல்விக் கொள்கை வகுக்கப்படும் என்றும், கட்சி மாறும் எம்.பி, எம்எல்ஏக்களின் பதவி உடனடியாக பறிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரத்து செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.

நாடு முழுவதும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி இலவசமாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு பணிகளில் 30 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவோம். ரயில் பயணங்களில் முதியோர்களுக்கான கட்டணச் சலுகை மீண்டும் வழங்கப்படும். பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள் மீதான துன்புறுத்தலை தடுக்க ரோஹித் வெமுலா சட்டம் கொண்டு வரப்படும் என காங்., அறிவித்துள்ளது.

ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். இதனால், ரெப்போ விகிதம் உயரும்போது வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி அதிகரிக்கும். 2 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, இதுகுறித்து முடிவுகள் எடுக்கும். அதன் அடிப்படையில் வீடு, வாகனக் கடன்கள் மீதான வட்டியை வங்கிகள் கூட்டவோ, குறைக்கவோ செய்கின்றன.

கல்வி, வேலைவாய்ப்புகளில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 50%ஆக உயர்த்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது. இடஒதுக்கீடு வரம்பை அதிகரிக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட பணி இடங்கள் ஓராண்டில் நிரப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

பாஜக மீது ஆம் ஆத்மி ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், மதுபான கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டது பாஜகதான் என்றும், பாஜக மூத்த தலைவர்கள் பலருக்கு அதில் தொடர்பு உள்ளது என்றும் தெரிவித்தார். ஆனால் இந்த வழக்கில் சதி செய்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்திருப்பதாகவும் சஞ்சய் சிங் கூறினார்.

மார்ச் 2024 வரை பெறப்பட்ட அனைத்து கல்விக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் காங்., கட்சி அறிவித்துள்ளது. நீட், CUET தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பத்திற்கு ஏற்ப நடத்திக் கொள்ளலாம். மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்த பிறகே புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும். மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி, தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படும். பொருளாதாரத்தில் நலிவடைந்த அனைத்து சமூகத்தினருக்கும் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும். சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மீண்டும் வழங்கப்படும். ஏழைகளுக்கான மருத்துவ காப்பீடு ரூ.25 லட்சமாக அதிகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அடுத்தடுத்து தொடர் வெற்றி படங்களை வழங்கி கோலிவுட்டில் கொடிக்கட்டி பறப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்குவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படத்தின் கதை 2013ஆம் ஆண்டில் ஹாலிவுட்டில் வெளியான The Purge படத்தின் இன்ஸ்பிரேஷன் எனக் கூறப்படுகிறது. முன்னதாக லோகேஷ் இயக்கத்தில் வெளியான லியோ படம், History of Violence படத்தின் இன்ஸ்பிரேஷன் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.