India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசுப் பணிக்கான தேர்வுக் கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வெறுப்பு பேச்சு, மத மோதல்களை தடுக்க சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ள காங்கிரஸ், நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்பேத்கர் நூலகங்கள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது. மேலும், 10% EWS இட ஒதுக்கீடு அனைத்து சாதி ஏழைகளுக்கும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

நாடு முழுவதும் மகாலட்சுமி திட்டம் மூலம் ஏழைப்பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று காங்., கட்சி தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. விவசாய இடுபொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லை. பாஜக அரசு இயற்றிய ஜிஎஸ்டி சட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஜிஎஸ்டி 2.0 இயற்றப்படும். முப்படைகளுக்கும் ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

மத்தியில் ஆட்சிக்கு வந்தால், சீன எல்லையில் மீண்டும் பழைய நிலை ஏற்படுத்தப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அக்கட்சி தேர்தல் அறிக்கையில், “மாலத்தீவுடனான உறவு மீண்டும் புதுப்பிக்கப்படும். சீன எல்லையில் மீண்டும் பழைய நிலை ஏற்படுத்தப்பட்டு, அங்கு நமது வீரர்கள் ரோந்து செல்ல வழிவகை செய்யப்படும். அப்பகுதியில் இந்திய வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவது உறுதி செய்யப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகள் நியமனத்திற்கு தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் காங்., அறிவித்துள்ளது. அண்டை நாடுகளால் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை தடுக்க புதிய வழிமுறைகள் வகுக்கப்படும். அங்கன்வாடி பணியாளர் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்; டெல்லி அரசின் ஆலோசனைகளை ஏற்று துணை நிலை ஆளுநர் செயல்படும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் அறிவித்துள்ளது.

தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் தேர்வு செய்யப்படும் கொலீஜியம் முறை ரத்து செய்யப்பட்டு, நீதிபதிகள் தேர்வு ஆணையம் அமைக்கப்படும் என்றும், தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், உணவு, உடை, திருமணம் ஆகியவற்றில் தலையிட மாட்டோம் என்றும் அறிவித்துள்ளது.

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி பிரபலமானவர் தேசிங்கு பெரியசாமி. இவரிடம் ரூ.3 லட்சம் மோடி செய்த புகாரில், அவரது உதவி இயக்குநர் முகமது இக்பால் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். தேசிங்கு பெரியசாமி தற்போது கமல் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

தனிநபர் உரிமைகளில் குறுக்கிடும் சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அக்கட்சி தேர்தல் அறிக்கையில், “தனிநபர் உரிமைகளில் குறுக்கிடும் சட்டங்கள் அனைத்தும் மறு ஆய்வு செய்யப்படும். தனி நபர் உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும். மக்கள் மீண்டும் அமைதியாக கூடவும், சங்கங்கள் அமைக்கவும் மீண்டும் அனுமதிக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.

100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்வோருக்கான ஊதியம் ரூ.400ஆக உயர்த்தப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. மீனவர்களுக்கு டீசல், மானியம் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்;
திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும். அனைத்து கடலோர பகுதிகளிலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.

வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டபூர்வமாக உறுதி செய்யப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில், “சுவாமிநாதன் குழு பரிந்துரைபடி, வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பது வருடம்தோறும் சட்டம் மூலம் உறுதி செய்யப்படும். விவசாய நிலம், வேளாண் பொருள்களுக்கு காப்பீடு அளிக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள், கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு தேசிய சமூக உதவி திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத்துக்கு அளிக்கப்படும் மாதாந்தர பங்களிப்பு ரூ.1,000ஆக உயர்த்தப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு எளிதில் சட்ட உதவி கிடைக்க வழிவகை, சாலை மற்றும் ரயில் போக்குவரத்தில் மீண்டும் கட்டண சலுகை வழங்கப்படும் எனவும் காங்கிரஸ் கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.