India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரசியலமைப்புச் சட்டம் குறித்து பாஜக, மோடி இடையே முரண்பாடு நிலவுவதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். குஜராத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், அரசியலமைப்பை மாற்றுவோம் என பாஜக தலைவர்கள் தெரிவித்து வருவதாகவும், ஆனால் இதற்கு முரணாக மோடி பேசுகிறார் என்றும் தெரிவித்தார். நாட்டில் ஜனநாயகத்தையும், மக்களையும் பலவீனப்படுத்த அவர்கள் விரும்புவதாகவும் பிரியங்கா காந்தி சாடினார்.

இந்தியாவில் இருந்து 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. உள்நாட்டு சந்தையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்யவும், அதன் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் டிச.8, 2023இல் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது. தற்போது விலை கட்டுக்குள் வந்ததால், இலங்கை, வங்கதேசம், பூடான், உள்ளிட்ட 6 நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதியளித்துள்ளது.

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமின் வழங்க ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் மறுத்து விட்டது. நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனது மாமா இறந்து விட்டதால் இறுதி சடங்கில் கலந்து கொள்ள 13 நாள் ஜாமின்கோரி, நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமின் அளிக்க மறுத்து விட்டது.

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்த நிலையில், NDA கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது எதிர்கட்சிகளை ஏமாற்றமடைய செய்யும் என பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம், முதலில் மோடியின் ஆட்சி எனக் கூறியவர்கள், பின் பாஜகவின் ஆட்சி என்றார்கள், தற்போது NDA கூட்டணி ஆட்சி எனக் கூறுவதாக விமர்சித்துள்ளார்.

அர்ஜெண்டினா நாட்டின் பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற அழகிப் போட்டியில், 60 வயது பெண் ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். லா பிளாட்டா நகரை சேர்ந்த அலெஜான்ட்ரா மரிசா ரொட்ரிக்ஸ், 60 வயதிலும் அச்சு அசலாக இளம்பெண் தோற்றத்துடன் அழகாக காணப்படுகிறார். இதனால், அவர் பியூனஸ் அயர்ஸ் மாகாண அழகிப் போட்டியில் கலந்து கொள்ளவே, சிறந்த அழகியாக தேர்வாகி க்ரீடம் சூட்டப்பட்டார்.

தேர்தல் அரசியல் ஆதாயத்துக்காக பாகிஸ்தான் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய அரசியல்வாதிகளுக்கு அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தான் குறித்து தவறான கருத்துகளைத் தெரிவிப்பது பிராந்திய அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காஷ்மீர் தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜஸ்தானில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 5 நாள்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உள் மாவட்டங்களில் 2 டிகிரி வரை வெப்ப நிலை உயரக்கூடும் என எச்சரித்துள்ள வானிலை மையம், மே 2ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் மழை பெய்யும்; ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

ஓபிசி இடஒதுக்கீடு குறித்து மோடி பொய் பேசுவதாக சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஓபிசி இடஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் அரசு அளித்து விட்டதாக மோடி குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு பதிலளித்த சித்தராமையா, அரசியலமைப்பு சட்டத்தில் கல்வி, சமூக ரீதியில் பின்தங்கிய அனைவருக்கும் இடஒதுக்கீடு என்றுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது, மதம் குறித்து தெரிவிக்கப்படவில்லை என்றார்.

வடகிழக்கு பருவமழையின்போது தமிழகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய அரசிடம் ₹38,000 கோடியை தமிழக அரசு நிவாரணமாக கேட்டது. நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தது. இந்நிலையில் தமிழகத்துக்கு ₹276 கோடியை மத்திய அரசு அளித்துள்ளது. அதேவேளை கர்நாடகத்துக்கு வறட்சிக்காக ₹3,454 கோடி ஒதுக்கியுள்ளது. இதைக்கண்ட சமூக ஆர்வலர்கள், ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொன்றில் சுண்ணாம்பா என கேட்கின்றனர்.

ஐபிஎல் தொடரை அடிப்படையாக வைத்து விராட் கோலியின் திறனை குறைத்து மதிப்பிடக்கூடாது என்று முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கோலியை தேர்வு செய்யக்கூடாதென சில முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஸ்ரீகாந்த், உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் சர்வதேச தரத்திற்கு நிகரான திறமைகளை பார்க்க வேண்டும் எனக் கூறினார்.
Sorry, no posts matched your criteria.