India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாதுகாப்பு காரணங்களால் வங்கதேசம் பங்கேற்கும் போட்டிகளை, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற BCB கோரிக்கை வைத்தது. இதை ஏற்காத ICC அவர்களை டி20 WC-ல் இருந்து நீக்கியது. தற்போது வங்கதேசம் இடம்பெற்ற C பிரிவில் அவர்களுக்கு பதில், ஸ்காட்லாந்து இடம்பெற்றுள்ளது. C பிரிவில் இப்போது நேபாள், வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, இத்தாலி ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

குடியரசு தினத்தையொட்டி தற்போது பள்ளி மாணவர்கள் தொடர் விடுமுறையில் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் ஆகிய தாலுகாவை சேர்ந்த மாணவர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, ஜன.28-ல் 3 தாலுகாவிலும் உள்ளூர் விடுமுறையாகும். இதனை ஈடுசெய்ய, பிப்.7-ம் தேதி பணிநாள் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத்தொகை ₹1000 பெறும் பெண்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, வேலைவாய்ப்பற்றோருக்கான மாத உதவித்தொகை திட்டத்தில் பயனாளியாக உள்ள பெண்கள், உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது. எனவே, இந்த இரு திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே உதவித்தொகை பெற முடியும். ரேஷன் அட்டை வைத்திருக்கும் ஏழை, எளிய குடும்ப பெண்கள், இதில் ஒன்றை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.

OPS தரப்பினர் திமுகவில் இணைந்து வரும் நிலையில், ‘திமுக உண்மையான அதிமுகவாக மாறிவிட்டது’ என்று ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார். எந்த கட்சியில் இருந்து யார் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கும் கோழி பிடிக்கும் கட்சியாக திமுக மாறிவிட்டதாக சாடிய அவர், 2026 தேர்தலுக்காக எத்தனை கூட்டணிகள் உருவானாலும், விஜய் இல்லாத ஒரு கூட்டணியை மக்கள் ஒருபோதும் தேர்வு செய்யமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

குறுகிய நலனுக்காக சிலர் அரசியலையும், மதத்தையும் இணைப்பதாக Ex CM மாயாவதி வேதனை தெரிவித்துள்ளார். அண்மை காலமாக அரசியலில் தீவிரம் காட்டாமல் இருந்த மாயாவதி உத்தரபிரதேச தினத்தையொட்டி தனது X பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், UP-ல் நடக்கும், மத விழாக்கள், புனித நீராடல்களில் அண்மை காலமாக அரசியல் தலையீடு அதிகரித்துள்ளதாக ஆளும் பாஜக அரசை சாடியுள்ளார். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிரபல ரவுடி வெள்ளை காளியை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் வெள்ளை காளியை, சென்னை புழல் சிறைக்கு அழைத்து சென்றபோது, பெரம்பலூர் திருமாந்துறை அருகே 10 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், ரவுடி, போலீசார் பலத்த காயமடைந்துள்ளனர்.

TN-ல் பள்ளிக் கட்டணங்களை முறைப்படுத்தும் <<18943567>>திருத்த மசோதா<<>> சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, Retd நீதிபதி தலைமையில் 7 பேர் கமிட்டி தனியார் பள்ளிகளின் கட்டணங்களை ஆராய்ந்து உச்சவரம்பை நிர்ணயிக்கும். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணங்கள் சீராய்வு செய்யப்படும். பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்பின் கருத்தும் கேட்கப்படும் என்பது கூடுதல் தகவல். இது அமலுக்கு வரும்தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டத்தில் 5 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மநீம சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ₹50,000 செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவர்கள் போட்டியிட விரும்பும் கோவை, தாம்பரம், வேளச்சேரி, மயிலாப்பூர், மதுரவாயல் உள்ளிட்ட 15 தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் மநீம கொடுத்துள்ளதாம்.

ஒரு மனைவியை வைத்து சமாளிப்பதே இங்கு பலருக்கும் சவாலாக உள்ள நிலையில், உ.பி.,யில் 2 மனைவிகளை கட்டியவரின் கதை வேற லெவல். `எம் புருசன், எனக்கு தான்’ என 2 மனைவிகளுக்குள் குடுமிபிடி சண்டை வந்தது. இதுக்கு என்னடா தீர்வுன்னு பஞ்சாயத்துக்கு 2 பேரும் போக, அங்கு சொன்ன தீர்ப்புதான் அல்டிமேட். வாரத்தின் 3 நாள்கள் இங்கும், 3 நாள்கள் அங்கும் இருக்க வேண்டும் எனவும், Sunday லீவ் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்று IMD அலர்ட் கொடுத்துள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தி.மலை, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூரில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. மேலும், வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.