India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஒபெக் கூட்டமைப்பு, வரும் ஜூலை முதல் கச்சா எண்ணெய் உற்பத்தியைப் படிப்படியாக அதிகரிக்க இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) தெரிவித்துள்ளது. தற்போது நாளொன்றுக்கு 9 மில்லியன் பேரல்கள் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிலையில், 2025க்குள் 10 மில்லியன் பேரல்களாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், அடுத்தாண்டு சவுதியின் பொருளாதார வளர்ச்சி 5.5% முதல் 6% ஆக இருக்குமென ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று அதிகாலை 5.51 மணி முதல் 6.10 மணிக்குள் நடைபெறுகிறது. கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை காண, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். காலை 7.25 மணிக்கு வீரராகவப் பெருமாளுக்கு மாலை சாற்றி ராம ராயர் மண்டபம் நோக்கி கள்ளழகர் புறப்படுகிறார்.

பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபேவில் நடந்தது போன்று கடம்பூர் ஹோட்டலிலும் குண்டுகள் வெடிக்குமென ஜாலஹள்ளி காவல்நிலையத்திற்கு தபால் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதனையடுத்து நேற்று மோப்ப நாய்,வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் ஹோட்டல் முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, ஹோட்டல் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தை ஏன் முழுவதுமாகத் தடுக்க முடியவில்லை? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில், ‘தமிழகம் கஞ்சா தலைநகரமாக மாறி இருக்கிறது. ஆனால், குற்றம் நடந்து செய்தியான பிறகே குற்றவாளிகளைக் கைது செய்ய முன்வரும் காவல்துறைக்கு, கஞ்சா கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் யார் என்று தெரியாதா? என தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை வினவியுள்ளார்.

சித்ரா பெளர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்தாண்டு சித்ரா பெளர்ணமி இன்று அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி, நாளை (புதன்) அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. இன்று 14 கிலோ மீட்டர் தொலைவு கிரிவலம் செல்லலாம். கிரிவலம் செய்ய இயலாதவர்கள், அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று பிரகாரத்தை 11 முறை சுற்றி வந்து நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

➤ 1639 – புனித ஜார்ஜ் கோட்டை சென்னை மாகாணத்தில் கட்டப்பட்டது. ➤ 1661 – இரண்டாம் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக வெஸ்ட்மின்ஸ்டரில் முடி சூடினார். ➤ 1966 – முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நிறைவடைந்தது. ➤ 1992 – இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான சத்யஜித் ரே காலமானார். ➤2005 – முதலாவது யூடியூப் காணொளி “ஜாவெட்” என்பவரால் வெளியிடப்பட்டது.

மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், ரசாயனம் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை உண்போருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படலாம். இதனைத் தவிர்க்க மாம்பழம் வாங்கி வந்த பின்னர், ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து அதில் மாம்பழங்களைப் போடுங்கள். எந்த பழம் அடியில் சென்று நிற்கிறதோ அது இயற்கையாகப் பழுக்க வைத்த பழம், மேலே மிதக்கும் பழங்கள் செயற்கையாகப் பழுக்க வைத்த பழங்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு முன்னெடுப்புகளை மேற்கொண்டாலும், தனியார் பள்ளிகள் மீதான மோகம் மக்களிடம் குறைந்தபாடில்லை. இதனை நிரூபிக்கும் வகையில், நேற்று முன்தினம் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் LKG மாணவர் சேர்க்கைக்காக இரவு முழுவதும் கொசுக்கடிக்கு மத்தியில், சாலையில், நீண்ட வரிசையில் பெற்றோர்கள் காத்திருந்து, காலையில் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர்.

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து
▶குறள் எண்: 10
▶குறள்: பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
▶பொருள்: இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க போவதில்லை என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் சுனில் நரைன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் நரைன், மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இணைவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஓய்வு முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை. இப்போது அந்த கதவுகள் மூடப்பட்டு விட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆதரவளிப்பேன்” என்றார்.
Sorry, no posts matched your criteria.