India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திரவ நைட்ரஜன் பயன்படுத்திய உணவுப் பொருட்களை விற்கக்கூடாது என்று உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. குழந்தைகளுக்கு டிரை ஐஸ் கலந்த எந்த உணவுப் பொருட்களையும் வழங்கக்கூடாது. உணவு விடுதிகளிலும் விற்பனை செய்யக் கூடாது. இதை சாப்பிட்டால் உயிரிழப்பு ஏற்படலாம் என எச்சரித்த அதிகாரிகள், உணவாக டிரை ஐஸ் பயன்படுத்தியோருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.

மம்தா பானர்ஜியை சிபிஐ கைது செய்து விசாரிக்க வேண்டும் என பாஜக தலைவர் அக்னிமித்ரா தெரிவித்துள்ளார். கடந்த 2016இல் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டதில் முறைகேடு நடந்ததாக கூறி, 26 ஆயிரம் ஆசிரியர் பணிநியமனங்களை மே.வங்க உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த விவகாரத்தில் மம்தாவின் உதவி இல்லாமல் எதுவும் நடந்திருக்காது, அவர் கைது செய்து விசாரிக்கப்பட வேண்டியவர் என அக்னிமித்ரா பால் குற்றம் சாட்டியுள்ளார்.

2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனை சேர்க்க வேண்டுமென காங்., எம்.பி. சசி தரூர் கூறியுள்ளார். சஞ்சு சாம்சனை, ஐசிசி போட்டிகளில் விளையாட விடாமல் பிசிசிஐ பலமுறை புறக்கணித்துள்ளது. நான் அவருக்காக பல வருடங்களாக குரல் கொடுத்து வருகிறேன். நடப்பு ஐபிஎல் தொடரில், பேட்ஸ்மேன் + கீப்பராக சிறப்பாக செயல்பட்டு வரும் அவரை, உலகக் கோப்பையில் நிச்சயம் சேர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

பிரதமர் நேரத்திற்கு தகுந்தாற்போல் நிலைப்பாடுகளை மாற்றுவதாக ராகுல் விமர்சித்துள்ளார். மக்கள் அனைவரும் ஓபிசி என்று கூறிவந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய பேச்சு வந்ததும் சாதியே இல்லை என பிரதமர் மாற்றிப் பேசினார். பிறகு, ஏழை, பணக்காரன் என்ற சாதி மட்டுமே உள்ளதாக அதையும் திரித்துக் கூறினார். அரசியல் நோக்கத்திற்காக மாற்றிப் பேசி மக்களைத் தொடர்ந்து குழப்புவதாக ராகுல் குற்றம்சாட்டினார்.

அருண் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு, ‘ரெட்ட தல’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘ரெட்ட தல’ என்ற தலைப்பில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க இருந்தார். அதற்காக, சுமார் 10 ஆண்டுகளாக இந்தத் தலைப்பின் உரிமையை வைத்திருந்தார். ஆனால், அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலை அமையாததால், அவரது உதவி இயக்குநரான திருகுமரனுக்கு அப்படத்தின் பெயரை கொடுத்ததாக நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

காங்கிரசின் மோசமான நிர்வாகத் திறமையே அவர்களது அழிவுக்கு காரணம் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். சத்தீஸ்கரில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், தீவிரவாதம் மற்றும் நக்சல்களுக்கு எதிராக பாஜக நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், தீவிரவாதிகள் கொல்லப்படும்போது காங்கிரசார் கண்ணீர் விடுகின்றனர் என குற்றம் சாட்டினார். இது போன்ற காங்கிரஸ் நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது எனக் கூறியுள்ளார்.

டெல்லியில் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக ஏராளமான விவசாயிகளைப் போட்டியிட வைக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார். கடந்த முறையும் தேர்தலுக்கு முன்பு இதே போன்று அறிவித்து, பின் அமித்ஷாவை நேரில் சந்தித்து தனது முடிவை வாபஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி-குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. குஜராத் கேப்டன் ஷுப்மன் கில், இன்று தனது 100ஆவது ஐபிஎல் போட்டியில் களமிறங்க உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் கேப்டனாக பொறுப்பேற்ற அவர், குஜராத் அணிக்கு இதுவரை 4 வெற்றிகளைத் தேடித் தந்துள்ளார். முன்னணி கேப்டன்களுடன் போட்டி போடும் அவர், இன்று தனது அணியை வெற்றி பெறச் செய்வாரா?

அவதூறு கருத்துக்களைப் பரப்பும் மோடி தண்டிக்கப்பட வேண்டியவர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கனகராஜ் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் சொல்லாததைக் கூறி, மக்களிடம் பொய்களை பரப்பி வரும் மோடியைத் தேர்தல் ஆணையம் தொடர்ந்து பரப்புரை செய்ய அனுமதிக்கக்கூடாது. தேச ஒற்றுமையில் எப்போதும் அக்கறையில்லாத மோடியிடம் இந்த வார்த்தைகளை தவிர வேறு எதுவும் வராது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.