India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜூன் 21ஆம் தேதிக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவை ஆய்வு செய்த நிபுணர் குழுவின் அறிக்கையை, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு கேட்டிருந்தது. இது தொடர்பாக பதிலளிக்க சிபிசிஐடி அவகாசம் கோரியிருந்தது. விசாரணையின்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேரில் வாளையார் மனோஜ் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் கஞ்சாவுடன் மனு அளிக்க முயன்ற பாஜக செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பத்துடன் ஓய்வெடுக்க மதுரை வழியாக முதல்வர் கொடைக்கானல் சென்றார். அப்போது, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாகவும், அதனை கட்டுப்படுத்தவும் கோரி முதல்வரிடம் கஞ்சாவுடன் அவர் மனு கொடுக்க முயன்றுள்ளார். இதனை தடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

உலகம் முழுவதும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நோக்கியா 3210 ஃபோனை நவீன வசதிகளுடன் விற்பனைக்கு மீண்டும் கொண்டு வர HMD குளோபல் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. 4ஜி நெட்வொர்க், ப்ளூடுத், நீடித்த பேட்டரி உள்ளிட்ட வசதிகள் இதில் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. 1999ஆம் ஆண்டு வெளியான இந்த ஃபோன், இந்தியச் சந்தையில் ₹2,999-க்கு விற்பனையானது.

கோவையில் தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு, நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. கோவையில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்கக் கோரியும், தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்கக் கோரியும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க ஒப்புதல் தெரிவித்த உயர் நீதிமன்றம், நாளை விசாரணையை தொடங்குகிறது.

ஆட்சியில் ஒரு நலத்திட்டத்தை கூட ஜெகன் மோகன் ரெட்டி நிறைவேற்றவில்லை என அவரது சகோதரியும், ஆந்திர காங்கிரஸ் தலைவருமான ஷர்மிளா விமர்சித்துள்ளார். கும்பகர்ணன் 6 மாதங்கள் தூங்கி, 6 மாதமாவது விழித்திருப்பார் என்ற அவர், ஜெகன்மோகன் ரெட்டியோ எதுவுமே செய்யாமல் 5 ஆண்டுகளாக தூக்கத்திலேயே இருக்கிறார் என்றார். அண்ணனை (ஜெகன்) எதிர்த்து காங்கிரஸை வெற்றி பெற வைக்க வேண்டிய நிர்பந்தம் ஷர்மிளாவுக்கு ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாகத் தொலைத்தொடர்பு, இயந்திரங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு இந்தியா, சீனாவைத்தான் நம்பியுள்ளது. இந்நிலையில், இவற்றின் இறக்குமதி கடந்த 15 ஆண்டுகளில் 30% அதிகரித்துள்ளதாக GTRI அறிக்கை தெரிவிக்கிறது. 2019 – 2024 காலகட்டத்தில் சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி ஆண்டுதோறும் சுமார் 16 பில்லியன் டாலர் ஆகும். அதே நேரம், சீனாவில் இருந்து இறக்குமதி 101 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஜெயப்பிரதா வழிபட்டுள்ளார். அத்துடன், அவர் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிப்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னர், கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவின் ஆந்திர மாநிலத் தலைவர் புரந்தேஸ்வரி அழைப்பு விடுத்தால், தேர்தல் பிரசாரம் செய்வேன் எனத் தெரிவித்தார்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி சசிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் இருந்து அவரது உதவியாளர் கொண்டு சென்றபோது, இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மே 2 ஆம் தேதி அவர் விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில், இவ்வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

பிட்காயின் விவகாரத்தில் ‘சுந்தரா டிராவல்ஸ்’ பட நாயகி ராதா தாக்குதல் நடத்தியதாக காவல் நிலையத்தில் புகார் எழுந்துள்ளது. நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணா என்பவர் கூறியதின் பேரில், அவரது நண்பரிடம் ராதா பிட்காயினில் ₹90,000 முதலீடு செய்ததாகத் தெரிகிறது. இந்தப் பணத்தை திருப்பித் தராததால் ஏற்பட்ட தகராறில், ராதா மற்றும் அவரது குடும்பத்தினர் முரளி கிருஷ்ணாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் அர்பன் நக்சல் சிந்தனை கொண்டுள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். செய்தி ஊடகத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்த அவர், காங்கிரஸ் நாட்டை எக்ஸ்ரே கொண்டு பார்க்கும் என ராகுல் காந்தி சொல்வதன் அர்த்தம் என்ன? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் தங்கத்தை எங்கே வைத்திருக்கிறார்கள் என ஆராயப் போகிறோம் என்பதே அதன் அர்த்தம் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.