India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

முருகனின் ஆறுபடை வீடுகளில், மூன்றாம் படை வீடாக இருப்பது பழனி. உலகைச் சுற்றி ஞானப்பழத்தை பெரும் போட்டியில் பெற்றோரிடம் கோபம் கொண்டு இங்கு வந்த முருகன், பக்தர்களுக்கு தண்டாயுதபாணியாகக் காட்சி அளிக்கிறார். இந்த சிலையை போகர் எனும் சித்தர், நவபாஷாணத்தால் உருவாக்கினார். பழனி முருகன் கோயிலின் தனிச் சிறப்பாக விளங்கும் பஞ்சாமிர்தம், நோய் தீர்க்கும் மருந்தாகச் செயல்படுவதாகப் பக்தர்கள் கூறுகின்றனர்.

பிரஜ்வால் எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் கைது செய்து அழைத்து வருவோம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியதாக கூறிய அவர், பாதிக்கப்பட்டோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், அவரை மத்திய அரசு பாதுகாப்பதாகவும், இவ்விவகாரம் தெரிந்தும் JDS கட்சியுடன் பாஜக கூட்டணியைத் தொடருவதாகவும் குற்றம்சாட்டினார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரில் 2 பந்துகளை மட்டும் வீசிய தீபக் சஹாருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் மிகப்பெரிய காயம் அடைந்திருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகம் என்பதால், அவர் இந்த ஐபிஎல்லில் இருந்து விலகுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இது CSKவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இரண்டு கைகளையும் இழந்த இளைஞர், முதல்முறையாக கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளார். சென்னையைச் சேர்ந்த தான்சென் விபத்தில் 2 கைகளை இழந்தபோதும் மனம் தளராமல், கார் ஓட்டுவதற்கு கற்றுக் கொண்டார். ஆனால், லைசென்ஸ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், மருத்துவர்கள் வழிகாட்டுதலின்படி அவரது கார் வடிவமைப்பில் சில மாற்றம் செய்து, கால்கள் மூலம் கார் ஓட்டி காட்டியதால் லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

RCB-GT இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ள பெங்களூரு அணி, எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியும். கடைசி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள பெங்களூரு அணி, இன்று குஜராத் அணியை தங்கள் சொந்த மண்ணில் வீழ்த்துமா? என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்.23ஆம் தேதி வெளியான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம், நாளை ஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம், கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்தது. இதுவரை, தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களில், அதிக வசூலைக் குவித்த படம் என்ற சாதனையையும் படைத்தது.

▶நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை
▶தோல்வி பயத்தால் பிரதமர் மோடி அவதூறுகளை அள்ளி வீசுகிறார்: செல்வப்பெருந்தகை
▶வாரணாசியை விட்டு பிரதமர் மோடி ஓடப் போகிறார்: மல்லிகார்ஜுன கார்கே
▶ஆதாரில் இலவசமாக திருத்தம் செய்வதற்கான அவகாசம் ஜூன் 14 வரை நீட்டிப்பு
▶மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை
▶IPL: மும்பை இந்தியன்ஸ் தோல்வி

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41ஆவது வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இதனால், கடைகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான வணிகர்கள் மதுரை மாநாட்டில் ஒன்றுகூட உள்ளதால், நாளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை காங்கிரஸ் கட்சி மத ரீதியாக பிளவுபடுத்தி இருக்கிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். பிரசாரத்தின் போது பேசிய அவர், இம்முறை NDA கூட்டணி 400 இடங்களை பெற வேண்டும் என மக்கள் முடிவு செய்துள்ளனர் என்றும், தேர்தலில் காங்கிரஸ் கட்சி 50 இடங்களை கூட வெல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், குடியுரிமை திருத்தச்சட்டத்தை யாரும் தடுக்க முடியாது என்று உத்தரவாதம் அளித்துள்ளார்.

அக்னி நட்சத்திர வெயில் எனப்படும் கத்திரி வெயில், இன்று முதல் மே 28ஆம் தேதி வரை நீடிக்கவுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் அதிகளவு வெப்ப அலை வீசுவதோடு வெயில் சுட்டெரிக்கும் என்றும், வெயில் இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மதிய வேளைகளில் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.