news

News April 27, 2025

வெடி விபத்தில் 4 பேர் பலி: ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

image

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கும் CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த துயரத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 4 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.4 லட்சம், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கவும் அவர் ஆணையிட்டுள்ளார்.

News April 27, 2025

இந்தியா – பாக். வர்த்தகம் : கோவைக்கு பாதிப்பா?

image

பஹல்காம் தாக்குதலை அடுத்து, பாக். மீது பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இதனால், கோவை, திருப்பூரில் தொழில்கள் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், ஆயத்த ஆடை தயாரிப்பில் பாக். நமக்கு போட்டி நாடே தவிர, இதனால் பாதிப்பில்லை என வர்த்தகர்கள் கூறியுள்ளனர். மேலும், இதனால் எல்லைப் பகுதியில் மட்டுமே பிரச்னை என்றும், உக்ரைன், ரஷ்யா போரிலும் நமக்கு பின்னடைவும் இல்லை என்றனர்.

News April 27, 2025

தாக்குதலுக்கு கடுமையான பதிலடி உறுதி : PM மோடி

image

பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என PM மோடி கூறியுள்ளார். மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய அவர், சர்வதேச தலைவர்கள் என்னைத் தொடர்புகொண்டு இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர் எனக் கூறினார். முழு உலகமும் நம்முடன் நிற்கிறது என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் மோடி உறுதியளித்தார்.

News April 27, 2025

நீட் தேர்வு மோசடி புகாரளிக்க இணையதளம் தொடக்கம்

image

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிவு போன்ற மோசடி புகார்களை அளிக்க புதிய இணையதளங்களை தேசிய தேர்வு முகமை (NTA) தொடங்கியுள்ளது. NEET.NTA.AC.IN அல்லது NTA.AC.IN இணையதளங்களின் வாயிலாக ஆதாரத்துடன் புகார்களை பதிவு செய்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ள NTA, ஆசை காட்டி மோசடியில் ஈடுபடுவோரை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

News April 27, 2025

பஹல்காம் தாக்குதல்: முஸ்லீம் மதத்தை துறந்த ஆசிரியர்

image

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, ஆசிரியர் ஒருவர் முஸ்லீம் மதத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த சபீர் உசேன், ‘மதத்தால் ஏன் ஒருவர் கொல்லப்பட வேண்டும். தொடர்ந்து மதம் வன்முறைக்கு ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்க்கிறேன். இனியும் இதை பொறுத்துக் கொள்ள முடியாது’ என தெரிவித்துள்ளார். இனி நடுநிலை வகித்து மனிதகுலத்தை மட்டுமே பின்பற்ற போவதாகவும் அவர் சொல்கிறார்.

News April 27, 2025

ஆசை வார்த்தை கூறி வீழ்த்த முடியாது.. திருமா உறுதி

image

பாஜக, பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என்று திருமாவளவன் அறிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி என்ற ஆசை வார்த்தை கூறி தன்னை வீழ்த்த முடியாது என்றும், அதிமுகவைத் தொடர்ந்து, விஜய் கட்சி திறந்து வைத்த கதவையும் தாம் மூடி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக கூட்டணியிலுள்ள விசிக, தேர்தலுக்கு முன் அணி மாறும் என கூறப்பட்ட நிலையில் திருமாவளவன் இவ்வாறு கூறியுள்ளார்.

News April 27, 2025

J&K : தீவிரவாதிகளால் ஒருவர் சுட்டுக்கொலை

image

J&K-ன் குப்வாரா மாவட்டத்தின் கண்டி காஷ் பகுதியில், தனது வீட்டில் இருந்த சமூக செயற்பாட்டாளர் குலாம் ரசூல் மாக்ராய் (45) தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இருப்பினும், இதற்கான காரணம், என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் இல்லை. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புப் படையினர் எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

News April 27, 2025

பஹல்காம் தாக்குதல் விசாரணை: என்ஐஏவிடம் ஒப்படைப்பு

image

26 பேர் உயிரிழந்த பஹல்காம் தாக்குதல் தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது. தாக்குதல் நடந்த பகுதியில் 60 தீவிரவாதிகள் வரை இருப்பதாகவும், அவர்களில் 14 தீவிரவாதிகளின் அடையாளங்கள் முகவரிகளுடன் கிடைத்துள்ளதாகவும் புலனாய்வு அமைப்பின் அறிக்கை கூறுகிறது. மேலும், 3 பேர் அடங்கிய என்ஐஏ குழு, புலனாய்வு அமைப்பின் தகவல்களை எடுத்துக் கொண்டது.

News April 27, 2025

கிட்டத்தட்ட வெளியேறிய நடப்பு சாம்பியன் KKR!

image

நேற்றைய PBKS vs KKR மேட்ச் மழையால் கைவிடப்பட்டதால், KKR-ன் பிளே – ஆப் கனவு கிட்டத்தட்ட கலைந்து விட்டது. ஆம், 9 மேட்சில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ள KKR, 7 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இனி வரும் அனைத்து மேட்சையும் வென்றால், KKR 17 புள்ளிகளை பெறும். ஆனால், அப்போதும் மற்ற சில அணிகளின் தோல்வியை வைத்துதான் பிளே – ஆப் வாய்ப்பு KKR-க்கு கிட்டும். எந்த 4 அணிகள் பிளே- ஆப்பிற்கு முன்னேறும்?

News April 27, 2025

சோஷியல் மீடியா பெண் பிரபலம் காலமானார்

image

சோஷியல் மீடியா பெண் பிரபலம் மிஷா அகர்வால் திடீரென உயிரிழந்தது, அவரது பாலோயர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் சில தினங்களில் 25ஆவது பிறந்தநாளை அவர் கொண்டாட இருந்தார். அவரது இறப்பிற்கான காரணங்கள் தெரியவில்லை . மேலும் அவர் தனது துடிப்பான பதிவுகளால் 3 .5 லட்சம் பாலோயர்களை இன்ஸ்டாவில் பெற்றிருந்தார். அவரது மறைவு குறித்து கேள்விப்பட்டு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!