India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விஜய் பங்கேற்கும் தவெக செயல்வீரர்கள் கூட்டம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஜன நாயகன் பிரச்னை, கரூர் துயரம் தொடர்பான சிபிஐ விசாரணை என எது குறித்தும் அவர் கடந்த ஒரு மாதமாக பேசாமல் இருந்தது விமர்சனத்திற்குள்ளானது. இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள தவெக கூட்டத்தில், விஜய் என்ன பேசுவார் என எதிர்பார்க்கும் தொண்டர்கள், கூட்டணியா (அ) தனித்து போட்டியா என்பதையும் அறிவிப்பார் என கூறுகின்றனர்.

வலுவான கூட்டணியை அமைக்க பாஜக உதவியதால், அக்கட்சிக்கு கடந்த முறையைவிட கூடுதல் சீட்களை தர EPS முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பாஜக 40 சீட் கேட்ட நிலையில், 20 சீட் மட்டுமே என EPS கறார் காட்டினாராம். தற்போது பாஜகவின் நடவடிக்கையால் அமமுக மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து கூட்டணி வலுப்பெற்றுள்ளதால் உற்சாகத்தில் உள்ள EPS, 30 தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

1.30 கோடி பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவதாக CM ஸ்டாலின் பேரவையில் தெரிவித்துள்ளார். இதன்படி, ஒவ்வொரு மகளிரும் இதுவரை ₹29,000 பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். இதனை தங்களது அண்ணன் கொடுக்கும் மாதாந்திர சீர் என ஒவ்வொரு மகளிரும் கூறுவதாகவும் ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்நிலையில், விரைவில் மகளிர் உரிமைத் தொகை உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இரவில் சமைத்த உணவு மீந்துவிட்டால், அதை காலையில் சுட வைத்து சாப்பிடும் வழக்கம் பல வீடுகளிலும் உண்டு. ஆனால், இப்படி சில உணவுகளை சுடவைத்து சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். கடல் உணவுகள், பச்சை காய்கறிகள், முட்டை, உருளைக்கிழங்கு போன்றவற்றை கண்டிப்பாக சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது என அறிவுறுத்துகிறார்கள். அடுத்த முறை கவனமா இருங்க!

திமுகவும் அதிமுகவும் தங்கள் கூட்டணியை கிட்டத்தட்ட இறுதிசெய்துள்ள நிலையில், இன்னும் தவெக தரப்பில் கூட்டணி முடிவு எடுக்கப்படவில்லை. இந்நிலையில், விஜய் கை காட்டுபவரே சட்டமன்ற உறுப்பினர் என்று தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, தவெகவில் இரண்டு லட்சம் பேருக்கு பதவி கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் தவெக தனித்தே களம் காணும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, ஹிந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது X பதிவில், ஹிந்தியை திணித்த ஒவ்வொரு முறையும் வீரியத்துடன் போராடி தமிழுக்காக உயிரைவிட்ட தியாகிகளை நன்றியோடு வணங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது என்றும் தெரிவித்துள்ளார்.

உள்ளுறுப்புகளின் டீடாக்ஸ் கால அட்டவணை: 11pm-1am: பித்தப்பை நச்சுகளை நீக்கும் *1am-3am: இந்நேரம் உறக்கத்தில் இருந்தால், கல்லீரல் உடலின் அனைத்து நச்சுகளையும் நீக்கும் *3am-5am: நுரையீரல் தனது நச்சுகளை நீக்கும் நேரம் *5am-7am: பெருங்குடல் நச்சு நீக்கும் நேரம் *7am-9am: சிறுகுடல் சத்துகளை உறிஞ்சும் நேரம். காலை உணவுக்கு ஏற்றது *9 pm-11pm: நோயெதிர்ப்பு மண்டலம் செயல்படும் நேரம். SHARE IT.

2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பிரேமலதாவும், ராமதாஸும் இதுவரை கூட்டணி குறித்து முடிவெடுக்காமல் உள்ளனர். இந்நிலையில், தேமுதிகவுக்கு 6 சீட், ராமதாஸ் பாமகவுக்கு 3 சீட் என அமைச்சர் எ.வ.வேலு பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. குறைவான சீட்கள் என்றாலும் தேர்தலுக்காக சகலமும் செய்து தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளதால் பிரேமலதாவும், ராமதாஸும் கூட்டணிக்கு ஓகே சொல்ல தயாராகிவிட்டார்களாம்.

‘ஜன நாயகன்’ சென்சார் வழக்கின் மீதான தீர்ப்பு நாளை மறுநாள் (ஜன.27) வெளியாகவுள்ளது. ஒருவேளை படத்திற்கு சாதகமான தீர்ப்பு வந்தால், பிப்ரவரி 2-வது வாரத்திலோ (அ) மார்ச் முதல் வாரத்திலோ படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இது விஜய்யின் கடைசி படம் என்பதால், தமிழகம் அதிர மாநிலம் முழுவதும் 1,000 தியேட்டர்களில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

இந்தியா, நியூசிலாந்து இடையிலான 3-வது டி20 இன்று கவுஹாத்தியில் நடைபெறவுள்ளது. முதல் டி20-ல் 48 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது டி20-ல் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா, இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில், புதிய உத்திகளுடன் NZ களமிறங்கவுள்ளது.
Sorry, no posts matched your criteria.