news

News April 27, 2025

ஆண் நண்பருடன் நடிகை உல்லாசம்.. வீடியோ கசிந்தது

image

பாகிஸ்தானை சேர்ந்த டிக்டாக் நட்சத்திரம் சாஜல் மாலிக், ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் பிரபலங்களின் அந்தரங்க வீடியோ அடிக்கடி கசிந்து வருகிறது. அந்த வரிசையில், சாஜல் மாலிக்கும் இணைந்துள்ளார். அந்த வீடியோவை இணையதளத்தில் பார்த்த பலரும், டிஜிட்டல் உலகில் தற்போது பாதுகாப்பே இல்லை என்று சாடியுள்ளனர். நீங்க என்ன நினைக்கிறீங்க?

News April 27, 2025

பஹல்காம் இந்து – முஸ்லீம் மோதல் அல்ல: காஜல் ஆவேசம்!

image

பஹல்காம் தாக்குதல் குறித்து பதிவிட்டுள்ள காஜல் அகர்வால், ‘இது இந்து – முஸ்லீம் பிரச்னை கிடையாது, பயங்கரவாதத்திற்கும், மனிதநேயத்திற்கும் இடையே நடக்கும் பிரச்னை’ எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘பிரிவினை எப்போதும் பயத்தையும், அதிக வெறுப்புணர்வையும் மட்டுமே உருவாக்கும் என சுட்டிக்காட்டி, இந்த சமயத்தில் தான் அனைவரும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும்’ எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News April 27, 2025

வெள்ளி விலை 4 மாதங்களில் ரூ.14,000 அதிகரிப்பு

image

கடந்த ஜன. 1-ம் தேதி 1 கிராம் வெள்ளி ரூ.98ஆகவும், 1 கிலோ ரூ.98,000ஆகவும் விற்கப்பட்டது. பிறகு ஜெட் வேகத்தில் உயர்ந்த விலை, குறையவே இல்லை. சுமார் 2 வாரங்களாக விலை மாறாமல் 1 கிராம் ரூ.111ஆகவும், 1 கிலோ ரூ.1.11 லட்சமாகவும் விற்கப்பட்டது. நேற்று திடீரென 1 கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.112ஆகவும், 1 கிலோ ரூ.1,000 அதிகரித்து ரூ.1.12 லட்சமாகவும் விற்கப்பட்டது. இன்றும் அதே விலையில் விற்கப்படுகிறது.

News April 27, 2025

செந்தில் பாலாஜி இன்று ராஜினாமா?

image

அமைச்சர் பதவியை இன்று மாலை (அ) நாளை காலை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மோசடி வழக்கில் அமைச்சர் பதவியா, ஜாமீனா என முடிவெடுக்க நாளை வரை SC கெடு விதித்தது. இதை சுட்டிக்காட்டிய திமுக வட்டாரங்கள், ஜாமீனை தக்க வைக்க பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய உள்ளார், கோவையில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்கு பிறகு அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறுகின்றன.

News April 27, 2025

தேமுதிக முக்கிய முடிவு : பிரேமலதா பிளான் என்ன?

image

வருகிற 30-ம் தேதி பாலக்கோட்டில் நடைபெறவுள்ள தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் ADMK – BJP கூட்டணி உருவாகியுள்ள நிலையில், 2026 தேர்தல் கூட்டணி குறித்து பிரேமலதா தலைமையில் முக்கிய முடிவெடுக்கப்பட உள்ளது. ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அதிமுகவுடன் உரசல் இருப்பினும், பாஜகவை அண்மையில் தேமுதிக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

News April 27, 2025

தமிழ் திரை பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம்

image

தமிழ் திரை பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநரும், நடிகருமான மனோஜ் குமார் அண்மையில் காலமானார். இதேபோல், நடிகர் நாகேந்திரன் நேற்று திடீரென மரணமடைந்தார். மேலும் நடிகர்கள் கராத்தே ஹூசைனி, ரவிகுமார், நடிகை பிந்து கோஸ், இயக்குநர் எஸ்.எஸ். ஸ்டான்லி, தயாரிப்பாளர் ராமநாதன், டிவி நடிகர் யுவராஜ் நேத்ரன் ஆகியோரும் அண்மையில் மரணமடைந்தனர்.

News April 27, 2025

மீண்டும் DC-ல் களமிறங்கும் ஸ்டார் பிளேயர்!

image

DC-யின் ஓப்பனர் ஃபாப் டு பிளெசிஸ் காயத்திலிருந்து மீண்டுள்ளார் . அவர் இன்று டெல்லியில் RCB-க்கு எதிரான மேட்சில் விளையாட வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் அணியில் இடம் பெறும் பட்சத்தில், DC-யின் பேட்டிங் இன்னும் பலம் பெறும். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி நடைபெற்ற RCB-க்கு எதிரான போட்டியில் காயமடைந்த அவர், தொடர்ச்சியாக 4 மேட்சில் விளையாடவில்லை.

News April 27, 2025

தள்ளிப்போகிறதா CUET UG 2024 தேர்வு?

image

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான CUET UG நுழைவுத் தேர்வின் 2025-ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 24-ம் தேதி வரை பெறப்பட்டது. இதற்கான தேர்வு உத்தேசமாக மே 8 முதல் ஜூன் 1-க்குள் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த தேர்விற்கான அட்டவணை தற்போது வரை வெளியாகவில்லை. அதேநேரம், மே 4-ம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளதால், CUET தேர்வு மேலும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 27, 2025

ரத்தம் கொதிக்கிறது: PM மோடி

image

பஹல்காம் தாக்குதலை கண்டு இந்தியர்களின் ரத்தம் கொதிக்கிறது என்றும், ஒவ்வொரு இந்தியரின் இதயமும் நொறுங்கிவிட்டதாகவும் மான் கி பாத் உரையில் PM மோடி உணர்ச்சிபொங்க கூறியுள்ளார். தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களின் கோழைத்தனத்தையே இந்த தாக்குதல் பிரதிபலிப்பதாகவும் மோடி குறிப்பிட்டார். காஷ்மீரில் அமைதி திரும்பிய நேரத்தில், மீண்டும் அதனை அழிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.

News April 27, 2025

மீண்டும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட பாகிஸ்தான்!

image

கடந்த 2 நாள்களாக Loc-யில் பாகிஸ்தான் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றது. நேற்றும் நள்ளிரவில், டுட்மரி கலி (tutmari gali) மற்றும் ராம்பூர் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது. மேலும், பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டை இந்திய ராணுவம் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்ததாகவும்.

error: Content is protected !!