India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தங்களது எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமாக வாழ, மாலத்தீவு அரசு வரலாற்று சிறப்புமிக்க முடிவு ஒன்றை எடுத்துள்ளது. 2007 ஜனவரி 1-ம் தேதிக்கு பின்னர் பிறந்தவர்கள், புகையிலை பொருள்களை வாங்கவோ பயன்படுத்தவோ அந்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. புகையிலை இல்லா சமுதாயம் ஒன்றை படைக்கும் வகையில், எடுக்கப்பட்ட இம்முடிவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்தியாவில் இது சாத்தியம் ஆகுமா?

அமமுக இளைஞர் பாசறையின் மாநில இணைச் செயலாளர் D. ஆண்டனிராஜ் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். தென் சென்னையை சேர்ந்த அவர், அதிமுகவில் ஏற்பட்ட பிளவின்போது டிடிவி தினகரன் அணியில் சேர்ந்தார். அவருக்கு அமமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் EPS தலைமையில் ஆண்டனிராஜ் அதிமுகவில் இணைந்துள்ளார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து EPS வரவேற்றார்.

ரத்தம் என்றால் சிவப்பு நிறம் என்றுதானே நமக்கு தெரியும்? ஆனால், இயற்கையாகவே நீல ரத்தம் கொண்ட சில உயிரினங்கள் உள்ளன. ஹீமோசயனின் என்ற மூலக்கூறின் காரணமாக, அவற்றின் ரத்தம் நீல நிறமாக இருக்கும். நீல ரத்தம் கொண்ட விலங்குகள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல் உங்களுக்கு தெரிந்த விலங்கின் பெயரை கமெண்ட்ல சொல்லுங்க.

தற்போதைய பணிநீக்கத்திற்கு பிறகு, மீண்டும் அடுத்த ஆண்டு புதிதாக ஆட்சேர்ப்பு நடத்தப்படும் என மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் AI-ஐ பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்றும் அவர் கூறியுள்ளார். இதுவரை 6,000 பேரை பணிநீக்கம் செய்துள்ள மைக்ரோசாஃப்ட், அடுத்ததாக 9,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, சிவப்பு, வெள்ளை நிறங்களில்தான் JCB-கள் தயாரிக்கப்பட்டன. ஆனால், தூரத்தில் இருந்து பார்க்கும்போது இவை கண்களுக்கு புலப்படாது என்பதால் விபத்துகள் நேரலாம். எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக JCB வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் தயாரிக்கப்படுகின்றன. ரோட்டில் இவை எங்கே நின்றாலும், மஞ்சள் நிறம் எளிதில் கண்களில் பட்டுவிடும். வாகன ஓட்டிகளும் கவனமாக இருப்பர். JCB புடிக்கும்னா இத்தகவலை SHARE பண்ணுங்க.

2020 உலகமே லாக்டவுனில் வானத்தை பார்த்த படி மல்லாந்து படுத்திருந்தது. அப்படி வானத்தை பார்த்து கொண்டிருந்த கிறிஸ் ஜட்ஜ் என்பவருக்கு பயங்கரமான கிரியேட்டிவிட்டி உருவாகியுள்ளது. மேக கூட்டங்களை வெவ்வேறு உருவங்களாக வரைந்து காட்டி, உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டார். அவரின் கைவண்ணத்தை மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe செய்து பாருங்க.

வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இன்று களமிறங்கிய இந்திய அணியை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தனது அதிரடியால் கரை சேர்த்தார். 6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சுந்தர், 23 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 49 ரன்களை விளாசினார். இதில், அவர் ஒரே ஓவரில் 4,6,6 விளாசி, ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தினார். சுந்தரின் மிரட்டலான ஆட்டத்தை யாரெல்லாம் லைவ்வாக பார்த்தீங்க?

கர்ணன், ஜெய் பீம், சர்தார், பைசன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள ரஜிஷா விஜயன், தனது துல்லியமான உணர்ச்சி மிகுந்த நடிப்பால் தமிழ் ரசிகர்களை ஈர்த்தார். அழகு மற்றும் திறமை இணைந்த நடிகையாக வலம் வருகிறார். இவர் நடித்த திரைப்படங்களில், எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொள்கிறார். இவர், இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புதிய போட்டோக்கள் பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த வேலுச்சாமிப்புரத்தில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் விசாரித்த அதிகாரிகளின் அடுத்த குறி பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகம். நாளை அங்கு சென்று கட்சி நிர்வாகிகளிடம் விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. விசாரணை வளையத்திற்குள் விஜய்யும் சிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. சிபிஐ விசாரணையை விஜய் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.

மகளிர் ODI கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. மழை காரணமாக டாஸ் போட தாமதமான நிலையில், தற்போது போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. ஏற்கெனவே லீக் போட்டியில் தோற்றதற்கு, இன்றைய ஃபைனலில் இந்தியா, தென்னாப்பிரிக்க அணியை பழிதீர்க்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.